காஷ்மீரில் ஒரு காவலராக தனது மனசாட்சியைக் கொன்று கொண்டு அரசு வேலையில் நீடிக்கத் தனக்கு விருப்பமில்லை என்றும், இங்கே நடைபெற்று வரும் கொடுஞ்செயல்களைக் கண்டு தன் உள்ளம் கொதித்துக் கொண்டிருப்பதால் ஒரு பக்கம் ஜிகாத்தை மனம் ஆதரிக்கும் போது, அந்த மனநிலையோடு தொடர்ந்து இந்தியக் காவல்துறையில் நீடித்து ஒரு காவலராகப் பணியிலிருப்பது மனசாட்சியைக் கொலை செய்வதற்குச் சமம் என்பதால், நான் என்னுடைய வேலையை ராஜினாமா செய்கிறேன். என்று தெரிவித்திருக்கிறார். தான் செய்வது சரியா, தவறா?! என்பதைக் காட்டிலும், இதன் மூலமாகத் தனது மனசாட்சியின் தொடர் கேள்விகளில் இருந்து நான் தப்பித்து விட்டதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.