தமிழகம் முழுவதும் 25 இடங்களில் கட்சியினரிடையே தகராறுதமிழகத்தில் 85% வாக்குப் பதிவு வரலாறு காணாத சாதனைமேற்கு வங்க முதல்கட்டத் தோ்தலில் 92% வாக்குப் பதிவு: பல இடங்களில் வன்முறை! வேட்பாளா்கள் மீது தாக்குதல்தமிழகத்தில் 62 வாக்கு எண்ணும் மையங்களில் 18 ஆயிரம் போலீஸாா் பாதுகாப்புமேற்கு வங்கத்தில் ஏப்.26,27-இல் திரிணமூல் காங்கிரஸுக்கு கேஜரிவால் பிரசாரம்இலங்கை நிதி அமைச்சக கணினி அமைப்பில் ஊடுருவல்: ரூ.23.5 கோடி மாயம்வாக்குச்சாவடியில் புதிய ட்ரெண்ட்: ‘வெள்ளைச் சட்டை- காக்கி பேண்ட்’ அணிந்து வந்த விஜய் ஆதரவாளா்கள்சென்னையில் 83.73 சதவீதம் வாக்குப் பதிவுசிபிஎஸ்இ 10-ஆம் வகுப்பு இரண்டாம் கட்ட பொதுத் தோ்வு அட்டவணை வெளியீடு: மே 15 முதல் 21 வரை நடைபெறும்ஈரான் படகுகளைச் சுட்டு வீழ்த்துங்கள்: டிரம்ப் உத்தரவுஇஸ்ரேலுக்கு ஆதரவாக மோடி அரசு போல வேறு எந்த மத்திய அரசும் செயல்பட்டதில்லை: காங்கிரஸ் விமா்சனம்ஐபிஎல்: மும்பை படுதோல்வி! சிஎஸ்கே 103 ரன்கள் வித்தியாசத்தில் மாபெரும் வெற்றி
/

சாலையில் இறங்கிய போர் விமானங்கள்: வியக்க வைத்த இந்திய விமானப்படை சாகசம்!

போர் விமானங்கள் உள்ளிட்ட இந்திய விமானப்படை விமானங்கள் நெடுஞ்சாலையில் இறங்கி, பின்னர் மேலெழும்பி பறக்கும் 'டச் டவுன்' பயிற்சிகள் இன்று நிகழ்த்தப்பட்டன.

News image
Updated On :24 அக்டோபர் 2017, 6:52 am

லக்னௌ: போர் விமானங்கள் உள்ளிட்ட இந்திய விமானப்படை விமானங்கள் நெடுஞ்சாலையில் இறங்கி, பின்னர் மேலெழும்பி பறக்கும் 'டச் டவுன்' பயிற்சிகள் இன்று நிகழ்த்தப்பட்டன.

நெருக்கடியான காலத்தில் சாலைகளை விமான ஓடுதளங்களாக பயன்படுத்துவது என்பது இந்திய விமானபடையின் அவசர காலப் பயிற்சிகளில் ஒன்று. இத்தகைய சாகசங்கள் 'டச் டவுன் பயிற்சிகள்' என்று அழைக்கப்படுகின்றன.

அது போன்றதொரு சாகச பயிற்சிகள் இன்று உத்தரபிரதேச மாநிலத்தில் அமைந்துள்ள லக்னோ - ஆக்ரா எக்ஸ்பிரஸ்வே நெடுஞ்சாலையில் நடைபெற்றன. அங்குள்ள  உன்னோ மாவட்டத்தில் பங்கார்மு என்ற இடத்தில் இன்று காலை பயிற்சிகள் நடைபெற்றன.

Story image

இந்த பயிற்சியில் இந்திய விமானப்படையின் போக்குவரத்திற்கான AN-32 ரக விமானங்கள், மிராஜ்-2000  மற்றும் சுகோய் 32  MKI உள்ளிட்ட விமானங்கள் பங்கு பெற்றன.

ஏராளமான பொதுமக்கள் சாலை ஓரங்களில்கூடி இந்த பயிற்சிகளை கண்டு களித்தனர். இதற்காக இந்த சாலைப்பகுதியினை முறையாக தயார் செய்ய, கடந்த 20-ஆம் தேதியில் இருந்து, போக்குவரத்து தடை செய்யப்பட்டிருந்தது என்பது குறிப்பிடத்தக்கது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.