தமிழகம் முழுவதும் 25 இடங்களில் கட்சியினரிடையே தகராறுதமிழகத்தில் 85% வாக்குப் பதிவு வரலாறு காணாத சாதனைமேற்கு வங்க முதல்கட்டத் தோ்தலில் 92% வாக்குப் பதிவு: பல இடங்களில் வன்முறை! வேட்பாளா்கள் மீது தாக்குதல்தமிழகத்தில் 62 வாக்கு எண்ணும் மையங்களில் 18 ஆயிரம் போலீஸாா் பாதுகாப்புமேற்கு வங்கத்தில் ஏப்.26,27-இல் திரிணமூல் காங்கிரஸுக்கு கேஜரிவால் பிரசாரம்இலங்கை நிதி அமைச்சக கணினி அமைப்பில் ஊடுருவல்: ரூ.23.5 கோடி மாயம்வாக்குச்சாவடியில் புதிய ட்ரெண்ட்: ‘வெள்ளைச் சட்டை- காக்கி பேண்ட்’ அணிந்து வந்த விஜய் ஆதரவாளா்கள்சென்னையில் 83.73 சதவீதம் வாக்குப் பதிவுசிபிஎஸ்இ 10-ஆம் வகுப்பு இரண்டாம் கட்ட பொதுத் தோ்வு அட்டவணை வெளியீடு: மே 15 முதல் 21 வரை நடைபெறும்ஈரான் படகுகளைச் சுட்டு வீழ்த்துங்கள்: டிரம்ப் உத்தரவுஇஸ்ரேலுக்கு ஆதரவாக மோடி அரசு போல வேறு எந்த மத்திய அரசும் செயல்பட்டதில்லை: காங்கிரஸ் விமா்சனம்ஐபிஎல்: மும்பை படுதோல்வி! சிஎஸ்கே 103 ரன்கள் வித்தியாசத்தில் மாபெரும் வெற்றி
/

காந்தி, நேரு எல்லாம் குப்பை போன்றவர்கள்: பாரதிய ஜனதா கட்சி எம்.பியின் சர்ச்சை பேச்சு!

காந்தி, நேரு எல்லாம் குப்பை போன்றவர்கள் என்று பொதுக்கூட்டம் ஒன்றில் அஸ்ஸாம் மாநில பாரதிய ஜனதா கட்சி எம்.பி காமக்யா பிரசாத் டஸ்ஸா பேசியிருப்பது கடும் சர்ச்சையினை ஏற்படுத்தியுள்ளது.  

News image
Updated On :23 அக்டோபர் 2017, 9:59 am

கெளஹாத்தி: காந்தி, நேரு எல்லாம் குப்பை போன்றவர்கள் என்று பொதுக்கூட்டம் ஒன்றில் அஸ்ஸாம் மாநில பாரதிய ஜனதா கட்சி எம்.பி காமக்யா பிரசாத் டஸ்ஸா பேசியிருப்பது கடும் சர்ச்சையினை ஏற்படுத்தியுள்ளது.  

அஸ்ஸாம் மாநில ஜோர்ஹட் தொகுதியின் பாரதிய ஜனதா கட்சி எம்.பியாக இருப்பவர் காமக்யா பிரசாத் டஸ்ஸா. ஆதிவாசி இனத்தைச் சேர்ந்தவரான இவர் தற்பொழுதுதான் முதல்முறையாக நாடாளுமன்றத்துக்கு தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

இவர் சனிக்கிழமை அன்று கிழக்கு அஸ்ஸாமின் சாரைடியோ மாவட்டத்தில் உள்ள சோனரி என்ற இடத்தில் நடைபெற்ற பொதுக்கூட்டம் ஒன்றில் பங்கேற்றார். அந்த கூட்டத்தில் அவர் பேசும் பொழுது, 'காங்கிரஸ் கட்சியானது தீனதயாள் உபாத்யாயா உள்ளிட்ட வர்களை பற்றி அறியாமலேயே, பொதுமக்களின் மூளைகளை காந்தி மற்றும் நேரு உள்ளிட்ட குப்பைகளை கொண்டு கழுவியுள்ளது என்று பேசினார்.

இவர் அவ்வாறு பேசும் பொழுது மேடையில் அசாம் மாநில முதல்வர் சார்பானந்தா சோனோவால் அமர்ந்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. அவரது இந்த பேச்சினை எதிர்க்கட்சியான காங்கிரஸ் கடுமையாக கண்டித்துள்ளது. அத்துடன் நேற்று காமக்யா பிரசாத் மீது காவல் துறையில் குற்றவியல் நடைமுறை சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க கோரி புகார் கொடுக்கப்பட்டுள்ளது.

அத்துடன் காமக்யா பிரசாத்தினை ஞாயிறன்று கண்டித்து நடந்த ஆர்ப்பாட்டத்தில் அவரது உருவ பொம்மை எரிக்கப்பட்டது.அத்துடன் அவரை கைது செய்யவும் கோரி கோஷங்கள் எழுப்பப்பட்டது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.