தமிழகம் முழுவதும் 25 இடங்களில் கட்சியினரிடையே தகராறுதமிழகத்தில் 85% வாக்குப் பதிவு வரலாறு காணாத சாதனைமேற்கு வங்க முதல்கட்டத் தோ்தலில் 92% வாக்குப் பதிவு: பல இடங்களில் வன்முறை! வேட்பாளா்கள் மீது தாக்குதல்தமிழகத்தில் 62 வாக்கு எண்ணும் மையங்களில் 18 ஆயிரம் போலீஸாா் பாதுகாப்புமேற்கு வங்கத்தில் ஏப்.26,27-இல் திரிணமூல் காங்கிரஸுக்கு கேஜரிவால் பிரசாரம்இலங்கை நிதி அமைச்சக கணினி அமைப்பில் ஊடுருவல்: ரூ.23.5 கோடி மாயம்வாக்குச்சாவடியில் புதிய ட்ரெண்ட்: ‘வெள்ளைச் சட்டை- காக்கி பேண்ட்’ அணிந்து வந்த விஜய் ஆதரவாளா்கள்சென்னையில் 83.73 சதவீதம் வாக்குப் பதிவுசிபிஎஸ்இ 10-ஆம் வகுப்பு இரண்டாம் கட்ட பொதுத் தோ்வு அட்டவணை வெளியீடு: மே 15 முதல் 21 வரை நடைபெறும்ஈரான் படகுகளைச் சுட்டு வீழ்த்துங்கள்: டிரம்ப் உத்தரவுஇஸ்ரேலுக்கு ஆதரவாக மோடி அரசு போல வேறு எந்த மத்திய அரசும் செயல்பட்டதில்லை: காங்கிரஸ் விமா்சனம்ஐபிஎல்: மும்பை படுதோல்வி! சிஎஸ்கே 103 ரன்கள் வித்தியாசத்தில் மாபெரும் வெற்றி
/

சிபிஐ சிறப்பு இயக்குநராக ராகேஷ் அஸ்தனா நியமனம்: முக்கிய துறை ஐபிஎஸ் அதிகாரிகள் அதிரடி மாற்றம்

சிபிஐ, உளவுத்துறை மற்றும் சிஆர்பிஎப் படைப்பிரிவு உள்ளிட்ட முக்கிய துறைகளின் ஐபிஎஸ் அதிகாரிகள் அதிரடியாக மாற்றம்

News image
Updated On :23 அக்டோபர் 2017, 3:48 am

புதுதில்லி: சிபிஐ, உளவுத்துறை மற்றும் சிஆர்பிஎப் படைப்பிரிவு உள்ளிட்ட முக்கிய துறைகளின் ஐபிஎஸ் அதிகாரிகள் அதிரடியாக மாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.

மத்திய உள்துறை அமைச்சகத்தின் கீழ் செயல்படும் சிபிஐ உள்ளிட்ட முக்கிய துறைகளின் தலைமை அதிகாரிகளை மாற்றம் செய்து மத்திய பணியாளர் நலத்துறை உத்தரவு பிறப்பித்துள்ளது. அதன்படி, குஜராத் மாநில காவல்துறை ஆணையர் ராகேஷ் அஸ்தானா, சிபிஐ சிறப்பு இயக்குநராக நியமிக்கப்பட்டுள்ளார். 

சிஎஸ்ஐ இயக்குநர் அலோக் வர்மாவுக்கு பிறகு அஸ்தானா இரண்டாவது மூத்த அதிகாரியாக கருதப்படுகிறார். அஸ்தானா தற்போது நிறுவனங்களின் கூடுதல் இயக்குநராகவும் மற்றும் அக்ஸ்டாவெஸ்ட்லாண்ட் ஆய்வு உட்பட பல முக்கியமான விசாரணைகளை கையாண்டு வருகிறார்.

அஸ்தானாவுடன் சேர்ந்து பதவி உயர்வு மற்றும் மாற்றுப் பதவிகளில் நியமிக்கப்பட்டுள்ள ஐபிஎஸ் அதிகாரிகளில் பலர் 1984 பிரிவைச் சேர்ந்தவர்கள்.

உளவுத்துறையின் சிறப்பு இயக்குநராக குர்பாச்சன் சிங், சிஆர்பிஎப் சிறப்பு டி.ஜி.யாக சுதீப் லக்டாகியா நியமிக்கப்பட்டுள்ளனர். ராஜேஷ் ரஞ்சன் மற்றும் மகேஷ்வரி எல்லை பாதுகாப்பு படை சிறப்பு டி.ஜி.யாக பதவி உயர்வு செய்யப்பட்டுள்ளனர். 

ஐபிஎஸ் அதிகாரிகள் தீபக் குமார் மிஸ்ரா மற்றும் சுதிப் லக்தாகியா ஆகியோர் மத்திய ரிசர்வ் போலீஸ் படை (சிஆர்பிஎப்) சிறப்பு டி.ஜி.யாக நியமிக்கப்பட்டுள்ளனர். குர்பாச்சான் சிங் உளவுத்துறையின் சிறப்பு இயக்குநராக பதவி உயர்வு செய்யப்பட்டுள்ளார். ராஜேஷ் ரஞ்சன் மற்றும் மகேஷ்வரி எல்லை பாதுகாப்பு படை சிறப்பு டி.ஜி.யாக பதவி உயர்வு செய்யப்பட்டுள்ளனர். 

ராஜேஷ் ரஞ்சன் மற்றும் ஏபி மகேஸ்வரி ஆகியோர் பிஎஸ்எஃப்யில் சிறப்பு டி.ஜி.யாக பதவி உயர்வு செய்யப்பட்டுள்ளனர். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.