தஸ்னா (உ.பி) ஆருஷி-ஹேமராஜ் இரட்டை கொலை வழக்கில் சிறையில் இருந்த பொழுது பார்த்த மருத்துவப் பணிக்கு பணம் எதுவும் வேண்டாம் என்று ராஜேஷ் தல்வார், நுபுர் தல்வார் தம்பதியர் மறுத்துள்ள விவகாரம் தெரிய வந்துள்ளது.
பல் மருத்துவ தம்பதியரான ராஜேஷ் - நுபுர் தல்வாரின் ஓரே மகள் ஆருஷி. தில்லிக்கு அருகே உள்ள நொய்டாவில் உள்ள இந்த தம்பதியினரின் இல்லத்தில், 16.05.2008 அன்று ஆருஷியும், அதற்கு மறுநாள் காலை அவர்களது வீட்டு வேலையாள் ஹேமராஜும் சடலங்களாக மீட்கப்பட்டனர். இந்த இரட்டைக்கொலை வழக்கினை சிபிஐ விசாரித்தது.
இது தொடர்பாக நடைபெற்ற விசாரணையின் முடிவில் விசாரணை நீதிமன்றம் தம்பதியர் இருவரையும் குற்றவாளிகள் என தண்டனை அளித்தது. பின்னர் இருவரும் 2013-ஆம் ஆண்டு உத்தரபிரதேசத்தின் தஸ்னா சிறையில் அடைக்கப்பட்டனர்.
இந்த தீர்ப்பினை எதிர்த்து அவர்கள் அலகாபாத் உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தனர். இதன் மீது நடைபெற்ற விசாரணையில், அக்டோபர் 12-ஆம் தேதி போதிய ஆதாரங்கள் இல்லாத காரணத்தால் ராஜேஷ் - நுபுர் தல்வார் தம்பதியர் விடுதலை செய்யயப்பட்டனர்.
இந்நிலையில் அடிப்படையில் மருத்துவர்களான அவர்களை இருவரும் தங்கள் சிறையில் இருந்த பொழுதும் அங்குள்ள மற்ற சிறைக்கைதிகளுக்கு மருத்துவம் செய்து வந்துள்ளனர்.தற்பொழுது அவர்கள் விடுதலை ஆகப் போவதால் அவர்களிடம் சிகிச்சை எடுத்துக் கொண்டிருப்போர், விரைவில் அதனை முடித்துக் கொள்ள ஆர்வம் காட்டுகின்றனர்.
இது தொடர்பாக தஸ்னா சிறை மருத்துவரான தியாகி கூறும் பொழுது தாங்கள் விடுதலை ஆனாலும் 15 நாட்களுக்கு ஒரு முறை சிறைக்கு வருகை தந்து கைதிகளுக்கு மருத்துவம் பார்க்கிறோம் என்று அவர்கள் தெரிவித்துள்ளதாகக் கூறினார்.
அத்துடன் மிக முக்கியமாக சிறை கண்காணிப்பாளரான தாதிராம் மௌரியா கூறும் பொழுது, தல்வார் தம்பதியர் சிறையில் மருத்துவப் பணி புருந்ததற்காக அரசாங்கத்திடம் இருந்து நியாயமாகப் பெற வேண்டிய ஊதியத் தொகையான ரூ.49,500-ஐக் கூட வேண்டாம் என்று மறுத்து விட்டதாகக் கூறியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

குறைந்தபட்ச ஊதியம் ரூ. 69,000 வழங்க வேண்டும்: 8-வது ஊதியக் குழுவுக்கு ஊழியர் சங்கங்கள் கோரிக்கை!

பகுதி நேர அரசியல்வாதி ராகுல் காந்தி! அவரால் பலன் இல்லை! - பாஜக

வரலாறு படைத்த மான்செஸ்டர் சிட்டி கால்பந்து அணி!

யூகோ வங்கியின் லாபம் 23% உயர்வு!
வீடியோக்கள்

கன்னக்குழியா பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

மண்டாடி படப்பிடிப்பு நிறைவு!
இணையதளச் செய்திப் பிரிவு

வெற்றி உற்சாகத்தில் ஆர்சிபி கோலி | IPL 2026 | RCB | GT | RCB VS GT | Virat kohli
தினமணி செய்திச் சேவை

வாக்கு சதவீதம் உயர்வுக்கு Vijay காரணமா?
தினமணி செய்திச் சேவை


