நாளை (பிப். 23), நாளை மறுநாள் (பிப். 24) மேற்குதொடர்ச்சி மலை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் மழை பெய்ய வாய்ப்பு: சென்னை வானிலை ஆய்வு மையம் நேபாளத்தில் மிதமான நிலநடுக்கம் ஜம்மு-காஷ்மீரில் பயங்கரவாதிகளுடன் துப்பாக்கிச் சண்டை சட்டப்பேரவைத் தேர்தலில் திமுக கூட்டணியில் 5 தொகுதிகளை கேட்டுள்ளோம்: கே.எம்.காதர் மொகிதீன்சட்டப்பேரவைத் தேர்தல் : பிப். 26-ல் சிபிஎம் உடன் திமுக பேச்சுவார்த்தை!ஆப்கனில் பாகிஸ்தான் விமானப்படை தாக்குதல்! இந்தியா உள்ளிட்ட நாடுகள் மீதான வரியை 15% ஆக உயர்த்தினார் டிரம்ப்!
/

பட்டாசு வெடிக்க காலக்கெடு விதித்து பஞ்சாப், ஹரியாணா நீதிமன்றங்கள் உத்தரவு

தீபாவளித் திருநாளன்று பட்டாசு வெடிப்பது தொடர்பாக காலக்கெடு விதித்து பஞ்சாப், ஹரியாணா நீதிமன்றங்கள் வெள்ளிக்கிழமை உத்தரவிட்டது.

News image
Updated On :29 ஜனவரி 2024, 5:52 pm

DIN

நாடு முழுவதும் தீபாவளிப் பண்டிகை வருகிற 18-ந் தேதி கொண்டாடப்படவுள்ளது. இந்த நாளில் அனைவரும் வண்ணமையமான பட்டாசுகளை வெடித்து மகிழ்வர்.

காற்று மாசுபடுவதாகக் கூறி தில்லியில் தீபாவளியன்று பட்டாசு வெடிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. மேலும் பட்டாசு விற்பனையில் சில நிபந்தனைகளை உச்ச நீதிமன்றம் விதித்துள்ளது. இது நவம்பர் 1-ந் தேதி முதல் அமலில் இருக்கும்.

இந்நிலையில், பஞ்சாப், ஹரியாணா மற்றும் சண்டீகர் மாநிலங்களில் தீபாவளியன்று பட்டாசு வெடிப்பது தொடர்பாக சில நிபந்தனைகள் விதிக்கப்பட்டுள்ளது.

அதன்படி, தீபாவளியன்று காலை 6.30 மணி முதல் இரவு 9.30 மணி வரை மட்டுமே பட்டாசு வெடிக்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. மேலும், குறிப்பிட்ட சில சோதனைகளுக்குப் பிறகு அனுமதிக்கப்பட்ட பட்டாசுகளை மட்டுமே விற்பனை செய்ய வேண்டும்.

இந்த நடைமுறைகள் சரிவர பின்பற்றப்படுவது தொடர்பாக காவல்துறை தொடர் கண்காணிப்பில் இருக்க வேண்டும், உள்ளிட்ட நிபந்தனைகளை விதித்து பஞ்சாப் மற்றும் ஹரியாணா உயர் நீதிமன்றங்கள் உத்தரவிட்டது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.