புதுதில்லி: தில்லி காவல் நிலையம் ஒன்றில் அதிகாரிக்குரிய நாற்காலியில் சர்ச்சைக்குரிய பெண் சாமியார் ஒருவர் அமர்ந்திருக்க, அருகில் போலீஸ் அதிகாரி கையைக் கட்டிக் கொண்டு நின்றிருக்கும் புகைப்படம் சர்ச்சையைக் கிளப்பியுள்ளது
தில்லி காவல் துறையின் சதாரா மாவட்டத்தின் கீழ் வருவது விவேக் விஹார் காவல்நிலையம். இங்கு இல்லக் காவல் அதிகாரியாகப் பணியாற்றுபவர் சஞ்சய் ஷர்மா. இந்நிலையில் இந்த காவல் நிலையத்தின் இல்லக் காவல் அதிகாரியின் இருக்கையில் தில்லியைச் சேர்ந்த சர்ச்சைக்குரிய பெண் சாமியாராக ராதே மா அமர்ந்திருக்கும் படங்கள் நேற்று முன்தினம் இணையத்தில் வெளியாகின. அந்த படத்தில் சஞ்சய் ஷர்மா இந்து பக்தர்கள் அணிவது போன்ற சிகப்பு நிற சால்வை ஒன்றினை அணிந்து கொண்டு, கைகளை கட்டிக் கொண்டு நிற்கிறார்.
இந்தப் படம் வெளியானதிலிருந்து இல்லக் காவல் அதிகாரியின் இருக்கையில் பெண் சாமியார் ஒருவரை எப்படி அமர வைக்கலாம் என்று கடும் சர்ச்சைகளும் கேள்விகளும் எழுந்தன. கடும் கண்டனங்களும் எழுந்தன. இதனைத் தொடர்ந்து தற்பொழுது இந்த சம்பவம் குறித்து துறை ரீதியிலான விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.
இது குறித்து தில்லி கிழக்குப் பகுதி காவல் துறை இணை ஆணையர் ரவீந்திர யாதவ் செய்தியாளர்களிடம் கூறியதாவது:
கூடுதல் உதவி ஆணைய பதவி நிலையில் இருக்கும் ஒரு காவல்துறை அதிகாரியினைக் கொண்டு விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. அத்துடன் சஞ்சய் ஷர்மா தற்பொழுது டிஸ்ட்ரிக்ட் லைன்ஸ் பகுதிக்கு மாற்றப்பட்டுள்ளார்.
இவ்வாறு அவர் தெரிவித்தார்.
பெயர் குறிப்பிட விரும்பாத போலீஸ் அதிகாரி ஒருவர் கூறும் பொழுது, 'பெண் சாமியார் ராதே மா தில்லியில் நடைபெற்ற ராம் லீலா நிகழ்ச்சி ஒன்றுக்கு சென்று கொண்டிருந்ததாகவும், வழியில் இயறக்கை உபாதைக்காக விவேக் விஹார் காவல் நிலையம் வந்ததாகவும் சஞ்சய் ஷர்மா தெரிவித்ததாகக் கூறினார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

குறைந்தபட்ச ஊதியம் ரூ. 69,000 வழங்க வேண்டும்: 8-வது ஊதியக் குழுவுக்கு ஊழியர் சங்கங்கள் கோரிக்கை!

பகுதி நேர அரசியல்வாதி ராகுல் காந்தி! அவரால் பலன் இல்லை! - பாஜக

வரலாறு படைத்த மான்செஸ்டர் சிட்டி கால்பந்து அணி!

யூகோ வங்கியின் லாபம் 23% உயர்வு!
வீடியோக்கள்

கன்னக்குழியா பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

மண்டாடி படப்பிடிப்பு நிறைவு!
இணையதளச் செய்திப் பிரிவு

வெற்றி உற்சாகத்தில் ஆர்சிபி கோலி | IPL 2026 | RCB | GT | RCB VS GT | Virat kohli
தினமணி செய்திச் சேவை

வாக்கு சதவீதம் உயர்வுக்கு Vijay காரணமா?
தினமணி செய்திச் சேவை


