போபால்: மத்திய பிரதேச மாநிலம், போபாலில் 19 வயது கல்லூரி மாணவி கூட்டு பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டது தொடர்பாக தாமதமாக நடவடிக்கை எடுத்த குற்றத்திற்காக 5 போலீசார் பணி இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.
கடந்த அக்.,31-ம் தேதி 19 வயது கல்லூரி மாணவி ஒருவர் மாலை 7 மணியளவில் யுபிஎஸ்சி பயிற்சி வகுப்பு முடிந்து வீடு திரும்பிக்கொண்டிருந்தார். ஹபிகஞ்ச் ரயில் நிலையம் அருகே தண்டவாளத்தில் தனியாக நடந்து சென்றபோது அங்கு வந்த நான்கு மர்ம நபர்கள் அந்தப் பெண்ணை இழுத்துச் சென்று பாலத்தின் அடியில் கட்டிப்போட்டு பாலியல் பலாத்காரம் செய்துள்ளனர்.
அவர்களிடம் இருந்து தப்பித்த மாணவி ரயில்வே சோதனைச் சாவடிக்கு வந்து தன் பெற்றோரை தொலைபேசியில் தொடர்புகொண்டு பேசியுள்ளார். தன் மகளின் நிலையைப் பார்த்து கதறித் துடித்த தந்தை உடனே வீட்டுக்கு அழைத்துச் சென்றுள்ளார்.
மறுநாள் காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். ஆனால், மூன்று காவல் நிலையங்களில் மாணவியை அலட்சியப்படுத்தி புகாரை வாங்காமல் இழுத்தடித்துள்ளனர். இத்தனைக்கும் பாதிக்கப்பட்ட அந்த மாணவியின் பெற்றோர்கள் இருவரும் காவல்துறையில் பொறுப்பான பதவியில் வேலைபார்க்கின்றனர்.
பின்னர், வணிக வளாகத்தில் குற்றவாளியை அடையாளம் காட்டினாள் மாணவி. உடனே மாணவியின் பெற்றோர் இரண்டு பேரை மடக்கிப் பிடித்து காவல் நிலையத்தில் ஒப்படைத்துள்ளனர். அதன் பிறகு மறுநாள் இரவு 7 மணியளவில் வழக்குப் பதிவு செய்யப்பட்டது. அதன்பிறகு சம்பவம் வெளிச்சத்துக்கு வந்தது.
இதைத் தொடர்ந்து புகாரை பதிவு செய்யாமல் அலைக்கழித்த குற்றத்திற்காக 5 போலீசார் உடனடியாக பணி இடைநீக்கம் செய்யப்பட்டனர். பின்னர், இந்த வழக்கை விசாரிக்க டிஐஜி சுதிர் குமார் தலைமையில் சிறப்பு புலனாய்வுக் குழு அமைக்கப்பட்டது.
குற்றம் சாட்டப்பட்ட நான்கு குற்றவாளிகளில் மூன்று பேர் கைது செய்யப்பட்டனர். நான்காவது குற்றவாளியை போலீசார் தனிப்படை அமைத்துத் தேடி வருகின்றனர். நாங்கள் இருவரும் காவல் துறையில் பணியாற்றியும் தங்கள் மகளை காப்பாற்ற முடியவில்லையே என்று மாணவியின் தாய் கதறி அழுதார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

தங்கம், வெள்ளி விலை குறைந்தது!
நியூஸிலாந்து ஒருநாள் தொடர்: சாம்பியன் ஆனது வங்கதேசம்!

கெங்கவல்லி அருகே தேர்தல் பணியில் இருந்த சிறப்பு காவல் உதவி ஆய்வாளர் மரணம்

முதல்வர் வேட்பாளர்களின் தொகுதிகளில் வாக்கு சதவீதம் எவ்வளவு?
வீடியோக்கள்

ஜனநாயகக் கடமையாற்றிய திரைப்பிரபலங்கள் | Tamil cine actors | TN Election 2026 |
தினமணி செய்திச் சேவை

தவெக தலைவராக விஜய் செலுத்திய வாக்கு! | TVK Vijay |
தினமணி செய்திச் சேவை

பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு தொடக்கம்! | #Ajith | #EPS | #Seeman |
தினமணி செய்திச் சேவை

#iranwar | போர் நிறுத்தம் நீட்டிப்பு: ஈரானிடம் டிரம்ப் கேட்பது என்ன? | Donald Trump |
தினமணி செய்திச் சேவை


