டி20 உலக கோப்பையில் இன்று... இந்திய அணியை 76 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி தென்னாப்பிரிக்கா அபாரம்!தயாரிப்பாளர் சங்கத் தேர்தலில் தலைவர் பதவிக்கு போட்டியிட்ட ஜி கே எம் தமிழ்குமரன் வெற்றிஆப்கானிஸ்தானில் பாகிஸ்தான் தாக்குதல்: இந்தியா கண்டனம்!சென்னை: முதல்வர் மு.க.ஸ்டாலினுடன் காங்கிரஸ் பொதுச் செயலாளர் கே.சி.வேணுகோபால் சந்திப்புபாகிஸ்தானிடமிருந்து போர் விமானங்கள் கொள்முதல்: சோமாலியா பேச்சுவார்த்தை‘ஆபரேசன் த்ரஷி-1’: ஜம்மு - காஷ்மீரில் மேலும் ஒரு பயங்கரவாதியின் உடல் கண்டெடுப்பு! இஸ்ரேல் நாடாளுமன்றத்தில் பிரதமர் மோடி புதன்கிழமை உரையாற்றுகிறார்ஏஐ மாநாட்டில் காங்கிரஸ் சட்டையின்றிப் போராட்டம்: “வெளிநாட்டு விருந்தினர்கள் முன் இந்தியாவுக்குத் தலைகுனிவு!” - பிரதமர் மோடி
/

கேரளாவைச் சேர்ந்த மேலும் 6 பேர் ஐஎஸ்ஐஎஸ் அமைப்பில் இணைந்தனர்

கேரளாவைச் சேர்ந்த மேலும் 6 பேர் ஐஎஸ்ஐஎஸ் அமைப்பில் வியாழக்கிழமை இணைந்ததாக காவல்துறை தெரிவித்துள்ளது.

News image
Updated On :29 ஜனவரி 2024, 6:01 pm

Raghavendran

கேரள மாநிலத்தின் கண்ணூர் பகுதியைச் சேர்ந்த 6 பேர் ஐஎஸ்ஐஎஸ் பயங்கரவாத அமைப்பில் இணைந்ததாக அம்மாநில காவல்துறை தெரிவித்துள்ளது. இதுகுறித்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருவதாகவும் கூறியுள்ளது.

மேலும் ஐஎஸ்ஐஎஸ் பயங்கரவாத அமைப்பில் இணைந்த இந்த 6 பேரும் கேரளாவில் செயல்பட்டு வரும் பி.எஃப்.ஐ (PFI) என்ற அமைப்பில் இருந்தவர்கள் ஆவர். 

முன்னதாக, அக்டோபர் 26-ந் தேதி ஐஎஸ்ஐஎஸ் பயங்கரவாத அமைப்புடன் தொடர்புடைய கேரளாவைச் சேர்ந்த இரண்டு பேர் அம்மாநில காவல்துறையால் கைது செய்யப்பட்டனர்.

அதற்கு முன்னர் ஐஎஸ்ஐஎஸ் பயங்கரவாத அமைப்பில் இணைந்து சிரியாவுக்கு செல்ல முயன்ற 3 பேர் கைது செய்யப்பட்டனர். 

அதுபோல கடந்த ஜூலை மாதம் ஐஎஸ்ஐஎஸ் பயங்கரவாத அமைப்பைச் சேர்ந்த கண்ணூர் பகுதி இளைஞர் ஷாஜஹான் வெல்லுவா கண்டி என்பவன் இந்திரா காந்தி சர்வதேச விமானநிலையத்தில் துருக்கி அதிகாரிகளால் கைது செய்யப்பட்டான்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.