மணிப்பூரில் மீண்டும் வன்முறை: 3 பேர் பலி, பலர் காயம்பாஜகவில் இணைந்த ஆம் ஆத்மி எம்.பி.க்கள்! ராகவ் சத்தா உள்பட ஆம் ஆத்மியின் 7 எம்பிக்கள் பாஜகவில் இணைகின்றனர்!தமிழ்நாடு தேர்தல்! கிராமங்கள் சமநிலை செய்த நகரங்கள் எப்படியிருக்கின்றன மக்கள் வாக்களித்த மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள்? ஈரானை கடிதம் மூலம் ஆளும் மோஜ்தபா! எங்கே, எப்படி இருக்கிறார்?ஈரானை கடிதம் மூலம் ஆளும் மோஜ்தபா! எங்கே, எப்படி இருக்கிறார்?தேர்தல் அரசியல் வரலாற்றில் சிகரமான வாக்குப்பதிவு: விஜய்முதல்வர் மு.க.ஸ்டாலினுடன் திமுக வேட்பாளர்கள் சந்திப்புகொடைக்கானல் செல்கிறார் முதல்வர் ஸ்டாலின்!
/

வளர்ச்சியை உருவாக்காத காங்கிரஸ் தலைவர்களை காலணியால் தாக்க வேண்டும்: பாஜக எம்பியின் சர்ச்சை பேச்சு!

வளர்ச்சியை உருவாக்காத ஹரியானா காங்கிரஸ் தலைவர்களை காலணியால்தான் தாக்க வேண்டும் என்ற  குருஷேத்ரா தொகுதி பாஜக எம்பி ராஜ்குமாரின் பேச்சு ...

News image
Updated On :1 மே 2017, 9:04 am

ஜின்ட் (ஹரியானா):  வளர்ச்சியை உருவாக்காத ஹரியானா காங்கிரஸ் தலைவர்களை காலணியால்தான் தாக்க வேண்டும் என்ற  குருஷேத்ரா தொகுதி பாஜக எம்பி ராஜ்குமாரின் பேச்சு சர்சையைக் கிளப்பியுள்ளது.

ஹரியானா மாநிலத்தில் உள்ள குருஷேத்ரா தொகுதியின் எம்பி ராஜ்குமார்.இவர் பாஜகவினைச் சேர்ந்தவர். இவர் அங்குள்ள ஜின்ட் மாவட்டத்தின் சிங்ஹானா கிராமத்தில் அம்பேத்காரின் 126-ஆவது பிறந்த நாள் நிகழ்ச்சி நடைபெற்றது. அந்த நிகழ்வில் கலந்து கொண்ட ராஜ்குமார் பேசியதாவது:

காங்கிரஸ் கட்சி ஹரியானாவில் பலமுறை ஆட்சி செய்திருக்கிறது. மக்களுக்கு அது எந்த ஒரு முன்னேற்றத்தையும் கொண்டு வரவில்லை.  மக்களை தற்பொழுது பிச்சைக்காரர்கள் ஆக்கியிருக்கிறது.  தற்பொழுது பாஜக ஆட்சிக்கு வந்த உடன், மக்கள் தவறான ஒரு முடிவை எடுத்து விட்டதாக காங்கிரஸ் குற்றம் சாட்டுகிறது. இது போல வளர்ச்சியை உருவாக்காத ஹரியானா காங்கிரஸ் தலைவர்களை காலணியால்தான் தாக்க வேண்டும் என்று அவர் தெரிவித்தார்.

அத்துடன் மாநிலத்தில் மக்களிடையே நிலவிய சுமுகத் தன்மையை சீரழித்ததில் முன்னாள் முதல்வர் பூபிந்தர் சிங்க் ஹூடாவுக்கு பெரும் பங்கு உண்டு என்றும் ராஜ்குமார் குற்றம் சாட்டினார், அத்துடன் இட துக்கீட்டினை பொறுத்த வரையில், ஜாதிகளின் அளவிற்கேற்ப இட ஒதுக்கீட்டினை தான் ஆதரிப்பதாகவும் அவர் தெரிவித்தார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.