கொல்கத்தா: மத்திய அரசு கடந்த வருடம் நவம்பர் மாதம் அமல் செய்த பணமதிப்பு நீக்கத்தினால், பொதுமக்கள் அடைந்த துயரங்கள் பற்றி பேசும் முதல் படம் உரிய சான்றிதழுடன் வெளிவருமா என்பது தற்பொழுது மத்திய தணிக்கை வாரிய தலைவர் பஹ்லாஜ் நிஹலானியின் கைகளில் உள்ள தகவல்; வெளியாகியுள்ளது.
கொல்கத்தாவைச் சேர்ந்த இயக்குனர் சுவேந்து கோஷ். இவர் தற்பொழுது 'சன்யோத' (வெறுமை) என்னும் பெயரில் திரைப்படம் ஒன்றை இயக்கியுள்ளார். இந்த படமானது கடந்த வருடம் நவம்பர் மாதம் 8-ஆம் தேதி மத்தியில் ஆளும் மோடி அரசினால் அமல் செய்யப்பட்ட பணமதிப்பு நீக்க நடவடிக்கையினால், பொதுமக்கள் அனுபவித்த துயரங்கள் குறித்து பேசுவதாக கூறப்படுகிறது.
இந்த திரைப்படமானது நாளை மறுநாள் (31-ஆம் தேதி) வெளியாகும் என்று முடிவு செய்யப்பட்டிருந்தது. ஆனால் தற்பொழுது இந்த திரைப்படத்திற்கு என்ன மாதிரியான சான்றிதழ் வழங்குவது என்பது குறித்து முடிவு செய்வதில் வாரிய உறுப்பினர்களுக்கு கருத்தொற்றுமை இல்லை என்று இயக்குனருக்கு தெரிவிக்கப்பட்டுள்ளது. இது பற்றி இயக்குனர் சுவேந்து கோஷ் கோரியதாவது:
நேற்று (செவ்வாய் கிழமை) கொல்கத்தா மண்டல மத்திய தணிக்கை அலுவலகத்திலிருந்து எனது திரைப்படத்திற்கு என்ன மாதிரியான பிரிவில் சான்றிதழ் வழங்குவது என்பதில் உறுப்பினர்களுக்கு இடையே ஒருமித்த கருத்து இல்லை என்றும், தற்பொழுது இது தொடர்பாக முடிவு எடுக்கும் பொருட்டு திரைப்படம் மத்திய தணிக்கை குழு தலைவர் பஹ்லாஜ் நிஹலானிக்கு அனுப்பப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தனர்.
மத்திய அரசின் பண மதிப்பு நீக்க நடவடிக்கைக்கு எதிரான கருத்துக்களை இந்தப் படம் கொண்டிருப்பதே இப்பிரச்சினைக்கு காரணம் என்று நான் கருதுகிறேன், வேறு ஒன்றும் இருப்பதாக தெரியவில்லை. பண மதிப்பு நீக்க நடவடிக்கை குறித்தான முதல் படம் இதுதான். இந்த படத்திற்கு விரைவில் உரிய சான்றிதழ் வழங்கி வெளிவர உதவும்படி தணிக்கை குழு தலைவரை வலியுறுத்த உள்ளோம்.
இவ்வாறு சுவேந்து கோஷ் தெரிவித்தார்.
படத்தின் ட்ரைலர்:
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

ஜியோ பிளாட்ஃபார்ம் லாபம் 13% உயர்வு!

பாஜகவில் இணைந்த 3 எம்பிக்களை தகுதிநீக்கம் செய்ய வேண்டும்! ஆம் ஆத்மி வலியுறுத்தல்!

அந்நியச் செலாவணி கையிருப்பு 70,330.8 கோடி டாலராக உயர்வு!

மணிப்பூரில் மீண்டும் வன்முறை: 3 பேர் பலி, பலர் காயம்
வீடியோக்கள்

வாக்கு சதவீதம் உயர்வுக்கு Vijay காரணமா?
தினமணி செய்திச் சேவை

வெள்ளை அறிக்கை வேண்டும்! சிசிடிவி காட்சியை வெளியிட்ட செல்வப்பெருந்தகை! | IT RAID | Congress
இணையதளச் செய்திப் பிரிவு

வரலாறு காணாத வாக்குப்பதிவா? | N Gopalaswami Interview | TN Election 2026 | Vote percentage in tamil nadu
தினமணி செய்திச் சேவை

ஜனநாயகக் கடமையாற்றிய திரைப்பிரபலங்கள் | Tamil cine actors | TN Election 2026 |
தினமணி செய்திச் சேவை


