சமீபத்தில் நடந்து முடிந்த ஐந்து மாநில சட்டமன்ற தேர்தல்களிலும், மஹாராஷ்டிரா உள்ளாட்சி தேர்தல்களிலும் பயன்படுத்தப்பட்ட மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்களில் தில்லு முல்லு செய்து முடிவுகள் திருத்தப்பட்டிருப்பதாக பரவலாக புகார்கள் எழுந்தன. எனவே மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்களில் இத்தகைய செயல்கள் மூலம் முடிவுகளை மாற்றியமைக்க முடியுமா என்பதை நம்பிக்கைக்குரிய மின்னணு சோதனைக் கூடம் அல்லது மென்பொருள் ஆய்வாளர் மூலம் ஆய்வு செய்து முடிவுகளை நீதிமன்றத்தில் சமர்ப்பிக்க வேண்டும். அதன் அடிப்படையில் தொடர் நடவடிகைகள் எடுக்கப்பட வேண்டும்.