/

போரை எதிர்கொள்ள முப்படைகளும் தயார் நிலையில் இருக்க வேண்டும்: ராணுவ தலைமைத் தளபதி

எல்லையில் போரை எதிர்கொள்ள இந்தியாவின் முப்படைகளும் எப்போதும் தயார் நிலையில் இருக்க வேண்டும் என்று ராணுவ தலைமை தளபதி

News image
Updated On :29 ஜனவரி 2024, 11:18 am

PTI

புது தில்லி: எல்லையில் போரை எதிர்கொள்ள இந்தியாவின் முப்படைகளும் எப்போதும் தயார் நிலையில் இருக்க வேண்டும் என்று ராணுவ தலைமை தளபதி விபின் ராவத் அறிவுறுத்தியுள்ளார்.
இதுகுறித்து, ராணுவ தகவல் தொடர்பு குறித்த இரண்டு நாள் கருத்தரங்கில் அவர் பேசியதாவது:
எதிரி நாடுகளிடமிருந்து போர் அச்சுறுத்தல் வந்தால், அது பாரம்பரியப் போர் முறையாக இருந்தாலும், அணு ஆயுதப் போராக இருந்தாலும், அந்தச் சவாலை எதிர்கொள்ளும் ஆற்றம் இந்தியாவிடம் உள்ளது.
இந்தியாவின் முப்படைகளும், எலலைக்கு அப்பாலிருந்து வரும் போர் அச்சுறுத்தல்களை எதிர்கொள்ள எப்போதும் தயார் நிலையில் இருக்க வேண்டும்.
இந்தியப் படைகளுக்கு நவீன ஆயுதங்கள் மற்றும் தளவாடங்களை கொள்முதல் செய்வதற்கு முன்னர் மேற்கொள்ளப்படும் பரிசோதனைகளின் கால அளவு குறைக்கப்பட வேண்டும் என்றார் அவர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.