டி20 உலக கோப்பையில் இன்று... இந்திய அணியை 76 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி தென்னாப்பிரிக்கா அபாரம்!தயாரிப்பாளர் சங்கத் தேர்தலில் தலைவர் பதவிக்கு போட்டியிட்ட ஜி கே எம் தமிழ்குமரன் வெற்றிஆப்கானிஸ்தானில் பாகிஸ்தான் தாக்குதல்: இந்தியா கண்டனம்!சென்னை: முதல்வர் மு.க.ஸ்டாலினுடன் காங்கிரஸ் பொதுச் செயலாளர் கே.சி.வேணுகோபால் சந்திப்புபாகிஸ்தானிடமிருந்து போர் விமானங்கள் கொள்முதல்: சோமாலியா பேச்சுவார்த்தை‘ஆபரேசன் த்ரஷி-1’: ஜம்மு - காஷ்மீரில் மேலும் ஒரு பயங்கரவாதியின் உடல் கண்டெடுப்பு! இஸ்ரேல் நாடாளுமன்றத்தில் பிரதமர் மோடி புதன்கிழமை உரையாற்றுகிறார்ஏஐ மாநாட்டில் காங்கிரஸ் சட்டையின்றிப் போராட்டம்: “வெளிநாட்டு விருந்தினர்கள் முன் இந்தியாவுக்குத் தலைகுனிவு!” - பிரதமர் மோடி
/

நாடாளுமன்ற உணவில் 'சிலந்தி': கண்காணிப்பு அதிகாரி 'வாந்தி'

நாடாளுமன்ற உணவகத்தில் வழங்கப்பட்ட உணவில் சிலந்தி இருந்ததால் கண்காணிப்பு அதிகாரி உடல்நலமின்றி காணப்பட்டார்.

News image
Updated On :29 ஜனவரி 2024, 4:28 pm

ANI

நாடாளுமன்ற உணவகத்தில் செவ்வாய்கிழமை மதியம் வழக்கம்போல் அங்கு பணிபுரியும் ஊழியர்கள் உணவருந்த வந்தனர்.

அப்போது நாடாளுமன்ற உணவகத்திலேயே கண்காணிப்பு அதிகாரி ஸ்ரீனிவாசன் வாந்தி எடுத்ததுள்ளார். இதனால் சக ஊழியர்கள் கூடி அவரின் உடல்நிலை குறித்து பரிசோதித்தனர்.

இந்நிலையில், மதிய உணவாக பொங்கலும், தயிர் சாதமும் ஸ்ரீனிவாசன் வாங்கியுள்ளார். அதில் சிலந்தி இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதனால் அங்கு கூடிய சக ஊழியர்களுக்கு அதிர்ச்சி ஏற்பட்டது. 

இதுகுறித்து ஸ்ரீனிவாசன் கூறியதாவது:

வழக்கம்போல் நாடாளுமன்ற உணவகத்தில் மதிய உணவாக பொங்கலும், தயிர் சாதமும் வாங்கினேன். சிறிய அளவில் அந்த உணவை உண்ட உடனேயே வாந்தி எடுத்துவிட்டேன்.

அப்போதுதான் நான் வாங்கிய உணவில் சிலந்தி இருந்தது தெரிந்தது. இதுகுறித்து உணவக அதிகாரிகளிடம் புகார் அளித்தேன் என்றார்.

இதனால் ஸ்ரீனிவாசனுக்கு தற்போது உடல்நலக் குறைவு ஏற்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.