தமிழகம் முழுவதும் 25 இடங்களில் கட்சியினரிடையே தகராறுதமிழகத்தில் 85% வாக்குப் பதிவு வரலாறு காணாத சாதனைமேற்கு வங்க முதல்கட்டத் தோ்தலில் 92% வாக்குப் பதிவு: பல இடங்களில் வன்முறை! வேட்பாளா்கள் மீது தாக்குதல்தமிழகத்தில் 62 வாக்கு எண்ணும் மையங்களில் 18 ஆயிரம் போலீஸாா் பாதுகாப்புமேற்கு வங்கத்தில் ஏப்.26,27-இல் திரிணமூல் காங்கிரஸுக்கு கேஜரிவால் பிரசாரம்இலங்கை நிதி அமைச்சக கணினி அமைப்பில் ஊடுருவல்: ரூ.23.5 கோடி மாயம்வாக்குச்சாவடியில் புதிய ட்ரெண்ட்: ‘வெள்ளைச் சட்டை- காக்கி பேண்ட்’ அணிந்து வந்த விஜய் ஆதரவாளா்கள்சென்னையில் 83.73 சதவீதம் வாக்குப் பதிவுசிபிஎஸ்இ 10-ஆம் வகுப்பு இரண்டாம் கட்ட பொதுத் தோ்வு அட்டவணை வெளியீடு: மே 15 முதல் 21 வரை நடைபெறும்ஈரான் படகுகளைச் சுட்டு வீழ்த்துங்கள்: டிரம்ப் உத்தரவுஇஸ்ரேலுக்கு ஆதரவாக மோடி அரசு போல வேறு எந்த மத்திய அரசும் செயல்பட்டதில்லை: காங்கிரஸ் விமா்சனம்ஐபிஎல்: மும்பை படுதோல்வி! சிஎஸ்கே 103 ரன்கள் வித்தியாசத்தில் மாபெரும் வெற்றி
/

சசிகலா விவகாரம்: கர்நாடக சிறைத்துறை புதிய டி.ஐ.ஜி நியமனம்!

கர்நாடக சிறைத்துறை புதிய இயக்குநராக ஹெச்.எஸ். ரெவன்னா ஐபிஎஸ், செவ்வாய்கிழமை நியமிக்கப்பட்டுள்ளார். 

News image
Updated On :18 ஜூலை 2017, 3:57 pm

சொத்துக்குவிப்பு வழக்கில் 4 ஆண்டுகள் சிறைத் தண்டனை பெற்ற அதிமுக பொதுச்செயலாளர் சசிகலா தற்போது பெங்களூரு பரப்பன அக்ரஹார சிரையில் அடைக்கப்பட்டுள்ளார். சமீபத்தில் இங்கு சிறைத்துறை உதவி ஆய்வாளர் ரூபா மௌட்கில், திடீர் ஆய்வு மேற்கொண்டார்.

ஆய்வில் கிடைத்த தகவல்கள் குறித்து மாநில அரசுக்கு அனுப்பிய புகார் கடிதத்தில் குறிப்பிடிருந்த விஷயங்கள் குறித்து உள்ளூர் சேனல்களில் செய்தி கசிந்தது.

அதில், கர்நாடக சிறைத்துறை இயக்குநருக்கும், சிறைத்துறை அதிகாரிகளுக்கும் ரூ.2 கோடி அளவுக்கு சசிகலா விவகாரத்தில் லஞ்சம் கொடுக்கப்பட்டதாகக் கூறப்பட்டது. ரூபாவின் இந்த குற்றச்சாட்டு சத்யநாராயண ராவ் தரப்பில் மறுக்கப்பட்டது.

இந்த விவகாரம் தொடர்பாக ரூபா செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:

சசிகலாவுக்கு பரப்பன அக்ரஹார சிறையில் சிறப்பு வசதிகள் செய்து கொடுக்கப்படுகிறது. இதுதொடர்பாக நான் அளித்த புகாரில் தெளிவாக இருக்கிறேன். இதனால் என் மீது நடவடிக்கை எடுத்தால் அதை எதிர்கொள்ள தயாராக உள்ளேன் என்றார்.

இதுதொடர்பாக அம்மாநில அரசு ரூபாவுக்கு நோட்டீஸ் அனுப்பியது. உடனே, சசிகலா தொடர்பான ஆதாரங்கள் அவசரகதியில் அழிக்கப்படுவதாக ரூபா மீண்டும் குற்றஞ்சாட்டினார். இதனால் அவர் உடனடியாக பணியிட மாற்றம் செய்யப்பட்டார். 

இதையடுத்து சிறைத்துறை இயக்குநராக சத்யநாராயண ராவ் மாற்றப்பட்டு என்.எஸ். மேக்ஹாரிக், செவ்வாய்கிழமை காலை கூடுதல் பொறுப்பேற்றுக்கொண்டார். 

இந்நிலையில், புதிய கர்நாடக சிறைத்துறை உதவி ஆய்வாளராக ஹெச்.எஸ். ரெவன்னா ஐபிஎஸ், செவ்வாய்கிழமை மாலை நியமிக்கப்பட்டார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.