ஆனால், அந்தக் கேள்வியில் உள்ள தவறைப் புரிந்து கொண்டு சரியாகப் பதிலளித்த சக மாணவர்களுக்கு இது பாதிப்பை உருவாக்கும். எனவே, ஏற்கெனவே நடத்திய தேர்வை ரத்து செய்துவிட்டு, புதிதாக தேர்வு நடத்தி அதன் அடிப்படையில் மாணவர்களின் தரவரிசைப் பட்டியலை தயாரிக்க வேண்டும். மேலும், ஐஐடியில் சேர்வதற்கான கலந்தாய்வுக்கும், மாணவர்கள் தரவரிசைப் பட்டியலைத் தயாரிப்பதற்கும் இடைக்காலத் தடை விதிக்க வேண்டும் என்று கோரி இதில் பாதிக்கப்பட்ட ஐஸ்வர்யா அகர்வால், தமிழகத்தைச் சேர்ந்த பலராம் விஷ்ணு சுப்ரமணி உள்ளிட்டோர் சார்பில் உச்ச நீதிமன்றத்தில் அண்மையில் மனு தாக்கல் செய்யப்பட்டது.