தமிழகம் முழுவதும் 25 இடங்களில் கட்சியினரிடையே தகராறுதமிழகத்தில் 85% வாக்குப் பதிவு வரலாறு காணாத சாதனைமேற்கு வங்க முதல்கட்டத் தோ்தலில் 92% வாக்குப் பதிவு: பல இடங்களில் வன்முறை! வேட்பாளா்கள் மீது தாக்குதல்தமிழகத்தில் 62 வாக்கு எண்ணும் மையங்களில் 18 ஆயிரம் போலீஸாா் பாதுகாப்புமேற்கு வங்கத்தில் ஏப்.26,27-இல் திரிணமூல் காங்கிரஸுக்கு கேஜரிவால் பிரசாரம்இலங்கை நிதி அமைச்சக கணினி அமைப்பில் ஊடுருவல்: ரூ.23.5 கோடி மாயம்வாக்குச்சாவடியில் புதிய ட்ரெண்ட்: ‘வெள்ளைச் சட்டை- காக்கி பேண்ட்’ அணிந்து வந்த விஜய் ஆதரவாளா்கள்சென்னையில் 83.73 சதவீதம் வாக்குப் பதிவுசிபிஎஸ்இ 10-ஆம் வகுப்பு இரண்டாம் கட்ட பொதுத் தோ்வு அட்டவணை வெளியீடு: மே 15 முதல் 21 வரை நடைபெறும்ஈரான் படகுகளைச் சுட்டு வீழ்த்துங்கள்: டிரம்ப் உத்தரவுஇஸ்ரேலுக்கு ஆதரவாக மோடி அரசு போல வேறு எந்த மத்திய அரசும் செயல்பட்டதில்லை: காங்கிரஸ் விமா்சனம்ஐபிஎல்: மும்பை படுதோல்வி! சிஎஸ்கே 103 ரன்கள் வித்தியாசத்தில் மாபெரும் வெற்றி
/

இந்தியைத் தொடர்ந்து ஆங்கிலத்தையும் எதிர்க்கும் கர்நாடகா

பெங்களூரு: இந்தி மொழி எதிர்ப்பைத் தொடர்ந்து தற்போது ஆங்கிலத்தையும் கன்னட அமைப்புகள் எதிர்த்து வருகின்றன.

News image
Updated On :6 ஜூலை 2017, 11:16 am

கர்நாடகத்தின் பல்வேறு பகுதிகளில் இந்தி மொழி எதிர்ப்புப் போராட்டம் வலுத்து வருகிறது. இந்நிலையில், பல்வேறு கன்னட அமைப்புகள் தற்போது ஆங்கில மொழிக்கும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன.

இதுதொடர்பாக ட்விட்டரில் 'நமது மெட்ரோவில் இந்தி எதற்கு' என்ற வாசகத்துடன் பிரசாரம் மேற்கொண்டு வருகின்றனர். அதில், ஆங்கில மொழிக்கும் எதிர்ப்பு வலுத்து வருகிறது.

பெங்களூரு மெட்ரோ ரயில் நிலையங்களில் கன்னடம், இந்தி, ஆங்கிலம் உள்ளிட்ட மொழிகளில் பெயர் பலகைகள் இடம்பெற்றிருந்தன. இதில் இடம்பெற்ற இந்தி மற்றும் ஆங்கில மொழிகளை கன்னட அமைப்புகள் அழித்து வருகின்றன. அதுபோல வேறு சில இடங்களிலும் இதுபோன்று எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.

இதுகுறித்து கர்நாடக ரக்ஷன வேதிகா என்ற கன்னட அமைப்பைச் சேர்ந்த பிரவீன் ஷெட்டி கூறியதாவது:

இங்கிருந்து நிலம், மின்சாரம் ஆகியவற்றை பயன்படுத்துகிறார்கள். ஆனால், கன்னட மொழியை மட்டும் பயன்படுத்தமாட்டார்கள். கன்னட இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பையும் வழங்க மறுக்கின்றனர்.

முதலில் தில்லி உள்ளிட்ட மாநிலங்களில் கன்னட மொழியில் பெயர் பலகைகளை வைத்திடுங்கள். பிறகு நாங்கள் உங்கள் மொழியை இங்கு பயன்படுத்துகிறோம் என்றார். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.