/

விஷவாயு தாக்கி 7 பேர் பலி

தொழிற்சாலை தொட்டியை சுத்தம் செய்ய சென்ற 7 பேர் விஷவாயு தாக்கி உயிரிழந்ததாக தீயணைப்பு துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Updated On :31 ஜனவரி 2017, 3:07 am

மும்பை: தொழிற்சாலை தொட்டியை சுத்தம் செய்ய சென்ற 7 பேர் விஷவாயு தாக்கி உயிரிழந்ததாக தீயணைப்பு துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.
இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

மகாராஷ்டிரா மாநிலம் லாத்துர் மாவட்டத்தில் உள்ள எம்.ஐ.டி.சி.,யின் (மகாராஷ்டிரா தொழில் வளர்ச்சிக் கழகம்) கீர்த்தி ஆயில் தொழிற்சாலையில் உள்ள தொட்டியை சுத்தம் செய்ய சென்றனர். அவர்கள் தொட்டியை சரிபார்க்க கீழே இறங்கி உள்ளனர். அப்போது, தொட்டியில் இருந்த விஷவாயு தாக்கியதில் மூச்சுத்திணறல் ஏற்பட்டு மயங்கி விழுந்து உயரிழந்துள்ளனர். தொட்டியை சுத்தம் செய்யவர்கள் நீண்ட நேரம் ஆகியும் காணவில்லை என நடத்தப்பட்ட சோதனையில், அவர்கள் விஷவாயு தாக்கி மூச்சுத்திணறல் காரணமாக உயிரிழந்ததாக தெரிந்துள்ளது என தீயணைப்பு துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.
 இது குறித்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.