புதிய கட்சி தொடங்கினார் சந்திரசேகர் ராவின் மகள் கவிதா! தமிழ்நாட்டில் எந்த வாக்குச்சாவடியிலும் மறு வாக்குப்பதிவு இல்லை! - தேர்தல் ஆணையம்தங்கம் விலை சவரனுக்கு ரூ. 800 உயர்வு! வெள்ளி விலையும் உயர்ந்தது!பேரவைத் தோ்தலில் பதிவான வாக்குகள்: அதிகாரபூா்வ விவரம் வெளியாவதில் தாமதம் கேரளம்: புற ஊதா கதிா்வீச்சு அதிகரிப்பு! மக்கள் பாதுகாப்புடன் இருக்க அறிவுறுத்தல்!
/

இந்த ஆண்டில் இந்தியாவிலேயே அதிக அளவு 'உபேர்' சவாரி செய்தவர் யார் தெரியுமா? 

நடப்பு ஆண்டில் இந்தியாவிலேயே அதிக அளவு 'உபேர்' வாடகைக் கார் செயலி மூலர் பயணம் செய்தவர் யார் என்ற தகவல் வெளியாகியுள்ளது.

News image
Updated On :12 டிசம்பர் 2017, 9:52 am

புதுதில்லி: நடப்பு ஆண்டில் இந்தியாவிலேயே அதிக அளவு 'உபேர்' வாடகைக் கார் செயலி மூலர் பயணம் செய்தவர் யார் என்ற தகவல் வெளியாகியுள்ளது.

இந்தியாவில் வாடகைக் கார் வசதிகள் வழங்கும் செயலிகளில் முன்னணியில் இருப்பது உபேர். நாள் தோறும் லட்சக்கணக்கானோர் பயன்படுத்தும் செயலியாக இது இருந்து வருகிறது. இந்நிலையில் 'உபேர்' நிறுவனத்தின்  இந்த ஆண்டுக்கான வளர்ச்சி குறித்து அந்நிறுவனத்தின் இந்தியா மற்றும் தெற்காசிய பிரிவுத் தலைவரான அமித் ஜெயின் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:

தில்லியைச் சேர்ந்த வாடிக்கையாளர் ஒருவர் (பெயர் வெளியிடப்படவில்லை) ஒரு நாளைக்கு சராசரியாக ஐந்து சவாரிகள் என்ற விதத்தில் இந்த ஆண்டு இதுவரை 1969 சவாரிகள் மேற்கொண்டுள்ளார். இதன் மூலம் அவர் இந்தியாவிலேயே இந்த ஆண்டு அதிக அளவு 'உபேர்' வாடகைக்கு கார் செயலி மூலர் பயணம் செய்தவர் என்ற பெருமைக்கு உரியவராகிறார்.   

அதே போல 'உபேர்' வாடகைக்கு கார் செயலியுடன் இணைந்து சேவை வழங்கும் ஓட்டுனர்களில், தில்லியைச் சேர்ந்த கார் ஓட்டுநர் ஒருவர் கடந்த நான்கு ஆண்டுகள், இரண்டு மாதங்கள் பணியாற்றியதன் மூலம், நீண்ட காலம் உபேருடன் இணைந்து சேவை வழங்கும், 'ஓட்டுநர் பங்குதாரராக'  சாதனை படைத்துள்ளார்.

அதே போல இந்த ஆண்டில் நாங்கள் வெறும் ஒரு 'ஸ்டார்ட் அப்' நிறுவனம் என்பதிலிருந்து நீடித்த வளர்ச்சி அடைய உள்ள ஒரு நிறுவனமாக மாறியுள்ளோம். இந்த ஆண்டு எங்கள் வளர்ச்சியானது இரட்டை இலக்கத்தில் அமைந்துள்ளது. ஒரு நாளைக்கு பத்து லட்சத்திற்கும் அதிகமான சவாரிகளை உபேர் மூலம் வாடிக்கையாளர்கள் மேற்கொள்கின்றனர்.

இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.     

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.