பேடிஎம் வங்கியின் உரிமத்தை ரத்து செய்தது ஆர்பிஐ!மணிப்பூரில் மீண்டும் வன்முறை: 3 பேர் பலி, பலர் காயம்பாஜகவில் இணைந்த ஆம் ஆத்மி எம்.பி.க்கள்! தமிழ்நாடு தேர்தல்! கிராமங்கள் சமநிலை செய்த நகரங்கள் எப்படியிருக்கின்றன மக்கள் வாக்களித்த மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள்? ஈரானை கடிதம் மூலம் ஆளும் மோஜ்தபா! எங்கே, எப்படி இருக்கிறார்?ஈரானை கடிதம் மூலம் ஆளும் மோஜ்தபா! எங்கே, எப்படி இருக்கிறார்?தேர்தல் அரசியல் வரலாற்றில் சிகரமான வாக்குப்பதிவு: விஜய்முதல்வர் மு.க.ஸ்டாலினுடன் திமுக வேட்பாளர்கள் சந்திப்புகொடைக்கானல் செல்கிறார் முதல்வர் ஸ்டாலின்!
/

ஜம்மு காஷ்மீரில் இஸ்லாமியர் அல்லாதோருக்கு சிறுபான்மையினர் அந்தஸ்து: மத்திய அரசுக்கு கடைசி சந்தர்ப்பம்!

ஜம்மு காஷ்மீரில் இஸ்லாமியர் அல்லாதோருக்கு சிறுபான்மையினர் அந்தஸ்து வழங்க கோரிய வழக்கில், மத்திய அரசுக்கு கடைசி சந்தர்ப்பம் அளித்து உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

News image
Updated On :8 ஆகஸ்ட் 2017, 10:19 am

புதுதில்லி: ஜம்மு காஷ்மீரில் இஸ்லாமியர் அல்லாதோருக்கு சிறுபான்மையினர் அந்தஸ்து வழங்க கோரிய வழக்கில், மத்திய அரசுக்கு கடைசி சந்தர்ப்பம் அளித்து உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

ஜம்முவினை சேர்ந்த வழக்கறிஞரான அன்குர்  ஷர்மா என்பவர் உச்சநீதி மன்றத்தில் பொதுநல மனு ஒன்றினை தாக்கல் செய்தார். அதில் ஜம்மு காஷ்மீர் போன்ற இஸ்லாமியர்கள் அதிகம் வசிக்கும் மாநிலமொன்றில், வசிக்கும் இதர மதத்தினவர்களுக்கு சிறுபாண்மை அந்தஸ்து வழங்க வேண்டும். இதன் காரணமாக அரசு வழங்கும் பல்வேறு உதவித்திட்டங்களை அவர்கள் பெற வசதியாக இருக்கும். இது தொடர்பாக தகுந்த உத்தரவினை பிறப்பிக்க வேண்டும் என்று கோரியிருந்தார்.

இந்த வழக்கில் பதிலளிக்க  மத்திய அரசுக்கு பலமுறை அவகாசம் வழங்கப்பட்ட நிலையில் இன்று மீண்டும் இந்த வழக்கு விசாரணைக்கு வந்தது. அப்பொழுது மத்திய அரசின் சார்பில் ஆஜரான கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தா, 'இது தொடர்பாக மாநில அரசு உள்ளிட்ட  பல்வேறு தரப்பினருடன் மத்திய அரசு பேச்சுவார்தை நடத்த வேண்டி உள்ளது. எனவே மேலும் எட்டு வாரங்கள் அவகாசம் வேண்டும்' என்று கோரிக்கை வைத்தார்.

இதனை ஏற்றுக் கொண்ட தலைமை நீதிபதி ஜே .எஸ்.கேஹர், நீதிபதிகள் கோயல் மற்றும் சந்திரசூட் அடங்கிய அமர்வானது, இறுதியாக மத்திய அரசுக்கு எட்டு வாரங்கள் அவகாசம் அளித்து உத்தரவிட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.