நாஸ்காம் புதிய தலைவா் நியமனம்மேற்கு வங்க முதல்கட்டத் தோ்தலில் 92% வாக்குப் பதிவு: பல இடங்களில் வன்முறை! வேட்பாளா்கள் மீது தாக்குதல்மேற்கு வங்கத்தில் ஏப்.26,27-இல் திரிணமூல் காங்கிரஸுக்கு கேஜரிவால் பிரசாரம்தமிழகத்தில் 62 வாக்கு எண்ணும் மையங்களில் 18 ஆயிரம் போலீஸாா் பாதுகாப்புஇலங்கை நிதி அமைச்சக கணினி அமைப்பில் ஊடுருவல்: ரூ.23.5 கோடி மாயம்சிபிஎஸ்இ 10-ஆம் வகுப்பு இரண்டாம் கட்ட பொதுத் தோ்வு அட்டவணை வெளியீடு: மே 15 முதல் 21 வரை நடைபெறும்தமிழகத்தில் 85% வாக்குப் பதிவு வரலாறு காணாத சாதனைவாக்குச்சாவடியில் புதிய ட்ரெண்ட்: ‘வெள்ளைச் சட்டை- காக்கி பேண்ட்’ அணிந்து வந்த விஜய் ஆதரவாளா்கள்சென்னையில் 3 மையங்களில் பாதுகாப்பாக வைக்கப்பட்ட வாக்குப்பதிவு இயந்திரங்கள்சென்னையில் 83.73 சதவீதம் வாக்குப் பதிவுஈரான் படகுகளைச் சுட்டு வீழ்த்துங்கள்: டிரம்ப் உத்தரவுசட்டவிரோத குடியேற்றத்தைத் தடுக்க பிரிட்டன்-பிரான்ஸ் 3 ஆண்டு ஒப்பந்தம்இஸ்ரேலுக்கு ஆதரவாக மோடி அரசு போல வேறு எந்த மத்திய அரசும் செயல்பட்டதில்லை: காங்கிரஸ் விமா்சனம்இந்திய வெளியுறவுக் கொள்கையில் ஆப்பிரிக்காவுக்கு அதிக முக்கியத்துவம்: வெளியுறவு அமைச்சா் ஜெய்சங்கா்ஐபிஎல்: மும்பை படுதோல்வி! சிஎஸ்கே 103 ரன்கள் வித்தியாசத்தில் மாபெரும் வெற்றிஈரானுக்குப் பயணிக்க வேண்டாம்! இந்தியர்களுக்கு மத்திய அரசு அறிவுறுத்தல்15 ஆண்டுகளாக துரோகமிழைக்கும் திரிணமூல் காங்கிரஸ்: பிரதமர் மோடிதமிழ்நாடு பேரவைத் தேர்தல் 2026! வாக்குப்பதிவில் வரலாற்றுச் சாதனை!
/

அசாமில் சம்பவம்: கத்தைக் கத்தையாக ரூபாய் நோட்டுகளை தின்று ஏப்பம் விட்ட யானை

சிரிப்பதா, திகைப்பதா என்று தெரியாத அளவுக்கு அசாமில் ரூ.40 ஆயிரம் மதிப்புள்ள ரூபாய் நோட்டுகளை, பசிகொண்ட யானை தின்று ஏப்பம் விட்ட சம்பவம் நிகழ்ந்துள்ளது.

News image

file photo

Updated On :25 ஏப்ரல் 2017, 9:17 am


குவகாத்தி: சிரிப்பதா, திகைப்பதா என்று தெரியாத அளவுக்கு அசாமில் ரூ.40 ஆயிரம் மதிப்புள்ள ரூபாய் நோட்டுகளை, பசிகொண்ட யானை தின்று ஏப்பம் விட்ட சம்பவம் நிகழ்ந்துள்ளது.

அசாம் மாநிலம் சோனிட்புர் மாவட்டத்தில் உள்ள தரஜூலா டி எஸ்டேட்டில் ஞாயிற்றுக்கிழமை இரவு இந்த சம்பவம் நிகழ்ந்துள்ளது. சுமார் 40 ஆயிரம் மதிப்புள்ள ரூபாய் நோட்டுகளை மென்று தின்ற யானை, சிறிது நேரத்தில் ரூ.14 ஆயிரம் மதிப்புள்ள ரூபாய் நோட்டுகளை மட்டும் வாந்தி எடுத்துவிட்டுச் சென்றது.

காடுகளை அழித்து அப்பகுதியில் கட்டப்பட்ட குடியிருப்புப் பகுதிக்குள், உணவுக்காக தேடி அலைந்த யானை ஒன்று நுழைந்துள்ளது. அங்கே, தேயிலைத் தோட்டங்களுக்கு நடுவில், மளிகை சாமான் முதல் ஹார்ட்வேர் சாமான்கள் வரை விற்பனையாகும் அந்த ஊரின் 'காய்' என்று அழைக்கப்படும் நம்ம ஊர் சூப்பர் மார்க்கெட்டு ஒன்று யானையின் கண்ணில் பட்டது.

அங்கே, கடையின் உரிமையாளர் ராஜேந்திர துகர், மறுநாள் தேயிலைத் தோட்டத் தொழிலாளர்களுக்கு ஊதியம் வழங்க ரூபாய் நோட்டுகளை கட்டுகளாகக் கட்டி வைத்திருந்தார்.

தனது உணவுத் தேடலில் ஒரு நல்ல உணவைக் கண்டுபிடித்ததாக நினைத்த யானை, பணக் கட்டுகள் வைத்திருந்த பகுதிக்குச் சென்றது. அங்கு 26 ஆயிரம் மதிப்புள்ள 100 ரூபாய் நோட்டுகளும், ரூ.14 ஆயிரம் மதிப்புள்ள 10 ரூபாய் நோட்டுகளும் இருந்தன.

அங்கிருந்து யானையை விரட்ட அப்பகுதி மக்கள் செய்த முயற்சிகள் பலனளிக்காத நிலையில், கடையின் உள்ளே சென்ற யானை சிறிது நேரம் கழித்து திரும்பிச் சென்றது.

அப்போது கடைக்குள் சென்ற ஊழியர்கள், யானை ரூ.14 ஆயிரம் மதிப்புள்ள 10 ரூபாய் நோட்டுகளை வாந்தி எடுத்திருந்ததைப் பார்த்தனர். அங்கிருந்த ரூ.26 ஆயிரம் ரூபாய் நோட்டுக் கட்டுகளைக் காணவில்லை. கடைக்குள் இருந்த அரிசியையும் யானை எடுத்துச் சாப்பிட்டு சென்றதையும் அங்கிருந்தவர்கள் தெரிவித்துள்ளனர்.

யானைகளின் வாழ்விடங்களும், வழித்தடங்களும், மக்களால் அபகரிக்கப்பட்டுவிட்டதன் எதிரொலிதான் இந்த சம்பவங்கள். யானைகளின் வாழ்விடங்களை மனிதர்கள் அபகரித்துக் கொண்டு, தங்களது வாழ்விடங்களுக்கு யானைகள் வருவதாக குற்றம்சாட்டுகின்றனர் என்று அம்மாநில வனத்துறையினர் தெரிவிக்கின்றனர்.

காட்டு யானை, பசிகொண்டதால் பணத்தின் ருசிகண்டது. ஆனால், 10 ரூபாய் நோட்டு மட்டும் அதற்குப் பிடிக்கவில்லை போலும்!

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.