நாஸ்காம் புதிய தலைவா் நியமனம்மேற்கு வங்க முதல்கட்டத் தோ்தலில் 92% வாக்குப் பதிவு: பல இடங்களில் வன்முறை! வேட்பாளா்கள் மீது தாக்குதல்மேற்கு வங்கத்தில் ஏப்.26,27-இல் திரிணமூல் காங்கிரஸுக்கு கேஜரிவால் பிரசாரம்தமிழகத்தில் 62 வாக்கு எண்ணும் மையங்களில் 18 ஆயிரம் போலீஸாா் பாதுகாப்புஇலங்கை நிதி அமைச்சக கணினி அமைப்பில் ஊடுருவல்: ரூ.23.5 கோடி மாயம்சிபிஎஸ்இ 10-ஆம் வகுப்பு இரண்டாம் கட்ட பொதுத் தோ்வு அட்டவணை வெளியீடு: மே 15 முதல் 21 வரை நடைபெறும்தமிழகத்தில் 85% வாக்குப் பதிவு வரலாறு காணாத சாதனைவாக்குச்சாவடியில் புதிய ட்ரெண்ட்: ‘வெள்ளைச் சட்டை- காக்கி பேண்ட்’ அணிந்து வந்த விஜய் ஆதரவாளா்கள்சென்னையில் 3 மையங்களில் பாதுகாப்பாக வைக்கப்பட்ட வாக்குப்பதிவு இயந்திரங்கள்சென்னையில் 83.73 சதவீதம் வாக்குப் பதிவுஈரான் படகுகளைச் சுட்டு வீழ்த்துங்கள்: டிரம்ப் உத்தரவுசட்டவிரோத குடியேற்றத்தைத் தடுக்க பிரிட்டன்-பிரான்ஸ் 3 ஆண்டு ஒப்பந்தம்இஸ்ரேலுக்கு ஆதரவாக மோடி அரசு போல வேறு எந்த மத்திய அரசும் செயல்பட்டதில்லை: காங்கிரஸ் விமா்சனம்இந்திய வெளியுறவுக் கொள்கையில் ஆப்பிரிக்காவுக்கு அதிக முக்கியத்துவம்: வெளியுறவு அமைச்சா் ஜெய்சங்கா்ஐபிஎல்: மும்பை படுதோல்வி! சிஎஸ்கே 103 ரன்கள் வித்தியாசத்தில் மாபெரும் வெற்றிஈரானுக்குப் பயணிக்க வேண்டாம்! இந்தியர்களுக்கு மத்திய அரசு அறிவுறுத்தல்15 ஆண்டுகளாக துரோகமிழைக்கும் திரிணமூல் காங்கிரஸ்: பிரதமர் மோடிதமிழ்நாடு பேரவைத் தேர்தல் 2026! வாக்குப்பதிவில் வரலாற்றுச் சாதனை!
/

நீங்கள் கணக்கு வைத்திருக்கும் எஸ்பிஐ வங்கிக் கிளை தொடர்ந்து செயல்படுமா?

நீங்கள் எஸ்பிஐ வங்கியில் கணக்கு வைத்திருக்கும் வாடிக்கையாளராக இருப்பின், உங்கள் வங்கிக் கிளை தொடர்ந்து செயல்படுமா என்பதை அறிய இன்னும் 3 மாதங்கள் காத்திருக்க வேண்டும்.

News image
Updated On :6 ஏப்ரல் 2017, 5:31 am

பெங்களூர்: நீங்கள் எஸ்பிஐ வங்கியில் கணக்கு வைத்திருக்கும் வாடிக்கையாளராக இருப்பின், உங்கள் வங்கிக் கிளை தொடர்ந்து செயல்படுமா என்பதை அறிய இன்னும் 3 மாதங்கள் காத்திருக்க வேண்டும்.

பாரதிய மகளிர் வங்கி, ஸ்டேட் பாங்க் ஆஃப் பிகானீர், ஸ்டேட் பாங்க் ஆஃப் ஹைதராபாத் உள்பட 6 வங்கிகளும் ஸ்டேட் பாங்க் ஆஃப் இந்தியா (எஸ்பிஐ) வங்கியுடன் முறைப்படி இணைந்தன.

இதன்மூலம், உலகிலேயே சொத்துகள் அடிப்படையில் முதல் 50 இடத்தில் உள்ள வங்கிகளில் எஸ்பிஐயும் இடம்பெற்றுள்ளது.

இந்த நிலையில்தான், நீங்கள் எஸ்பிஐ வங்கியில் கணக்கு வைத்திருக்கும் வாடிக்கையாளராக இருப்பின், உங்கள் வங்கிக் கிளை தொடர்ந்து செயல்படுமா அல்லது அருகில் இருக்கும் மற்றொரு எஸ்பிஐ வங்கியுடன் இணைக்கப்படுமா என்பதை அறிய இன்னும் 3 மாதங்கள் காத்திருக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது குறித்துப் பேசிய எஸ்பிஐ வங்கி அதிகாரி ஒருவர், ஒவ்வொரு வங்கிக் கிளையையும் தொடர்ந்து நடத்துவதா? அல்லது அருகில் இருக்கும் வங்கிக் கிளையுடன் இணைப்பதா? அல்லது வேறொரு இடத்துக்கு இடம் மாற்றுவதா என்பது குறித்து கணக்கெடுக்கும் பணி தொடங்கவே இன்னும் 3 மாதங்கள் ஆகும்.

ஒவ்வொரு வங்கிக் கிளையும் கையாளும் வங்கிக் கணக்குகள், அருகில் இருக்கும் மற்றொரு எஸ்பிஐயின் வங்கிக் கிளையின் திறன் ஆகியவற்றோடு ஒப்பிட்டு, இட வசதியையும் அடிப்படையாக வைத்து இந்த முடிவுகள் எடுக்கப்பட உள்ளன.

ஒரே இடத்தில் இரண்டு வங்கிக் கிளைகள் இருப்பதால் ஏற்படும் குழப்பங்களைத் தடுக்க ஒரு வங்கிக் கிளை மற்றொரு இடத்துக்கு இடமாற்றம் செய்யப்படும்.

6 வங்கிகள் எஸ்பிஐ வங்கியுடன் இணைக்கப்பட்டதால், நிச்சயமாக யாரும் வேலை இழக்கும் அபாயம் ஏற்படாது என்றும் உறுதியளிக்கப்பட்டுள்ளது.

தற்போது இந்தியாவில் எஸ்பிஐ வங்கிக்கு 1,888 வங்கிக் கிளைகள் உள்ளன. இதில் எஸ்பிஐ-வங்கியுடையது மட்டும் 721 கிளைகள். ஸ்டேட் பாங்க் ஆஃப் மைசூர் வங்கியின் 887 கிளைகளும், ஸ்டேட் பாங்க் ஆஃப் ஹைதராபாத்தின் 209 கிளைகளும் அடக்கம்.

மேலும் படிக்க : எஸ்பிஐ வங்கியுடன் மகளிர் வங்கி உள்பட 6 வங்கிகள் இணைப்பு

ஸ்டேட் பாங்க் ஆஃப் ஹைதராபாத், ஸ்டேட் பேங்க் ஆஃப் பிகானீர் அன்ட் ஜெய்ப்பூர், ஸ்டேட் பாங்க் ஆஃப் மைசூர், ஸ்டேட் பாங்க் ஆஃப் பாட்டியாலா, ஸ்டேட் பாங்க் ஆஃப் திருவாங்கூர் ஆகிய 5 வங்கிகளின் ஊழியர்களும் எஸ்பிஐயுடன் இணைவதற்கு எதிர்ப்பு தெரிவித்து வந்தனர். எனினும், முடிவில் எஸ்பிஐயுடன் பெண்களுக்காக தொடங்கப்பட்ட பாரதிய மகளிர் வங்கி உள்பட 6 எஸ்பிஐ சார்பு வங்கிகளும் எஸ்பிஐ வங்கியுடன் இணைந்தன.

இந்த வங்கிகளின் இணைப்பு மூலம் எஸ்பிஐயின் வாடிக்கையாளர்கள் எண்ணிக்கை 37 கோடியாக அதிகரித்துள்ளது. அதேபோல், எஸ்பிஐ வங்கிக் கிளைகள் மொத்தம் 24ஆயிரமாகவும், ஏடிஎம்களின் எண்ணிக்கை 59ஆயிரமாகவும் அதிகரித்துள்ளது.

மேலும் தெரிந்து கொள்ள:

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.