புது தில்லி: இந்தியா - பாகிஸ்தான் இடையே 3,323 கி.மீ. தூர எல்லைப் பகுதியில் நவீன தொழில்நுட்பத்துடன் கூடிய வேலி அமைக்க வேண்டும் என்ற பரிந்துரைக்கு மத்திய அரசு முதற்கட்ட ஒப்புதலை அளித்துள்ளது.
மத்திய உள்துறை அமைச்சரவையால் அமைக்கப்பட்ட உள்துறை முன்னாள் செயலாளர் மதுகர் குப்தா தலைமையிலான குழுவினர், பதான்கோட் தாக்குதல் எதிரொலியாக, இந்தியா - பாகிஸ்தான் இடையே அதி நவீன தொழில்நுட்பத்துடன் கூடிய வேலியை அமைக்க வேண்டும் என்ற பரிந்துரையை செய்தது.
இந்தியா - பாகிஸ்தான் எல்லைப் பகுதியில் ஜம்மு-காஷ்மீர் (1,225 கி.மீ.), ராஜஸ்தான் (1,037), பஞ்சாப் (553 கி.மீ.), குஜராத் (508 கி.மீ.) ஆகிய 4 மாநிலங்கள் அமைந்துள்ளன.
நவீன தொழில்நுட்பங்கள் - செயற்கைக் கோள் கண்காணிப்பு - கூடிய வேலியை அமைத்து, அவற்றை நான்கு மாநில காவல்துறையின் கண்காணிப்பில் வைக்கவும் பரிந்துரை செய்யப்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

விழுப்புரத்தில் இன்று திருநங்கைகளுக்கான அழகிப் போட்டி

தியாகராஜா் 259-ஆவது ஜெயந்தி விழா

வெயில் தாக்கம்: கடலூரில் நுங்கு விற்பனை மும்முரம்! கடந்தாண்டைவிட விலை அதிகம்

வீராம்பட்டினம் கடற்கரையில் மது குடிக்கத் தடை! மீனவ கிராம பஞ்சாயத்தாா் நடவடிக்கை!
வீடியோக்கள்

கன்னக்குழியா பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

மண்டாடி படப்பிடிப்பு நிறைவு!
இணையதளச் செய்திப் பிரிவு

வெற்றி உற்சாகத்தில் ஆர்சிபி கோலி | IPL 2026 | RCB | GT | RCB VS GT | Virat kohli
தினமணி செய்திச் சேவை

வாக்கு சதவீதம் உயர்வுக்கு Vijay காரணமா?
தினமணி செய்திச் சேவை


