நாளை பாமக மாவட்டச் செயலா்கள் கூட்டம்மேலும் 2 தகவல் ஆணையா்கள் நியமனம்ஆதிதிராவிடா், பழங்குடியினா் மாணவா்களுக்கு ரூ.6,604 கோடி கல்வி உதவித் தொகை - தமிழக அரசு தகவல்இன்று தென், வட தமிழகத்தின் ஒருசில இடங்களில் மழைக்கு வாய்ப்புஜேஇஇ 2-ஆம் கட்ட முதன்மைத் தோ்வு: விண்ணப்பிக்க இன்று கடைசிஇந்திய தலைமைத் தோ்தல் ஆணையா் நாளை தமிழகம் வருகைசிறுமிகளுக்கு இலவச கருப்பை வாய் புற்றுநோய் தடுப்பூசி திட்டம்: மத்திய அரசு விரைவில் தொடக்கம்நாளை இந்தியா வருகிறாா் கனடா பிரதமா்மணிப்பூரில் வன்முறையால் இடம்பெயா்ந்த மக்களுக்காக 5,000 புதிய வீடுகள் - மத்திய அரசு ஒப்புதல்குடிமைப் பணிகள் தோ்வு: இணையவழி விண்ணப்பங்களை சமா்ப்பிக்க 3 நாள் அவகாசம் நீட்டிப்பு
/

நாடாளுமன்ற வளாகத்தில் பார்வையாளர்கள் புகைப்படம் எடுக்கத் தடை

நாடாளுமன்ற வளாகத்துக்குள் வரும் பார்வையாளர்கள் யாரும் செல்போனில் புகைப்படமோ அல்லது விடியோவோ எடுத்துக் கொள்ள மத்திய அரசு தடை விதித்துள்ளது.

News image
Updated On :25 ஜனவரி 2024, 10:15 am

PTI


புது தில்லி: நாடாளுமன்ற வளாகத்துக்குள் வரும் பார்வையாளர்கள் யாரும் செல்போனில் புகைப்படமோ அல்லது விடியோவோ எடுத்துக் கொள்ள மத்திய அரசு தடை விதித்துள்ளது.

நாடாளுமன்ற நடவடிக்கைகளை ஆம் ஆத்மி எம்.பி. பக்வந்த் மன், தனது செல்போனில் விடியோ எடுத்து அதனை பேஸ்புக்கில் நேரடியாக ஒளிபரப்பிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
இது குறித்து மத்திய அரசு தரப்பில் ஒரு சுற்றறிக்கை வெளியிடப்பட்டுள்ளது. இதையடுத்து, இனி நாடாளுமன்றத்துக்குள் பார்வையாளர்கள் யாரும் புகைப்படம் அல்லது விடியோ எடுத்துக் கொள்ள முடியாது.

நாடாளுமன்ற வளாகம் நாட்டின் மிக முக்கிய இடமாகும். நாடாளுமன்றத்தின் பாதுகாப்புக் கருதியே, இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது என்று நாடாளுமன்றத்தின் இணைச் செயலாளர் வெளியிட்டிருக்கும் சுற்றறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், நாடாளுமன்றத்துக்குள் வரும் ஊழியர்களும், பார்வையாளர்களும் செல்போன் கொண்டு வர அனுமதிக்கப்படும். ஆனால், அதில் புகைப்படம் அல்லது விடியோ எடுக்க தடை விதிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.