ஈரானுடனான அமைதிப்பேச்சு ரத்து! அமெரிக்க பிரதிநிதிகள் குழு தாயகம் திரும்ப டிரம்ப் உத்தரவுஐபிஎல்: ராஜஸ்தானுக்கு எதிராக ஹைதராபாத் அணி அபார வெற்றிபட்டியலின சமூகங்களுக்கு உள் ஒதுக்கீடு வழங்க கர்நாடக அமைச்சரவை ஒப்புதல்!திருச்சி - தாம்பரம் இடையே நாளை(ஏப். 26) சிறப்பு ரயில்! நீதி ஆயோக் துணைத் தலைவராக முன்னாள் தலைமைப் பொருளாதார ஆலோசகர் நியமனம்!மேற்கு வங்க பாஜக எம்எல்ஏவுக்கு நீதி ஆயோக் துணைத் தலைவர் பதவி: பிரதமரைச் சந்தித்து வாழ்த்து டெல்லி வீரர் லுங்கி இங்கிடிக்கு தலையில் காயம்! ஆம்புலன்ஸில் அழைத்துச் செல்லப்பட்டார் தெலங்கானா மேலவை உறுப்பினராகிறார் அசாருதீன்: ஆளுநர் ஒப்புதல்!அதானி நிறுவனத்தின் உண்மையான பெயர் மோதானி: ராகுல் கடும் தாக்கு
/

தில்லியில் அதிர்ச்சி: ஆசிரியரை அடித்துக் கொன்ற பள்ளி மாணவர்கள் கைது

தில்லியில் பள்ளிக்கு சரியாக வராததால் பள்ளியில் இருந்து நீக்கப்பட்ட மாணவன், மற்றொரு மாணவனுடன் சேர்ந்து ஆசிரியரை அடித்துக் கொன்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

News image
Updated On :27 செப்டம்பர் 2016, 6:43 am


புது தில்லி: தில்லியில் பள்ளிக்கு சரியாக வராததால் பள்ளியில் இருந்து நீக்கப்பட்ட மாணவன், மற்றொரு மாணவனுடன் சேர்ந்து ஆசிரியரை அடித்துக் கொன்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஹிந்தி ஆசிரியரான முகேஷ் குமார், திங்கட்கிழமை காலை, பள்ளி வகுப்பறையில் மாணவர்களை தேர்வுக்கு தயார்படுத்திக் கொண்டிருந்தார்.

அப்போது, பள்ளிக்குள் நுழைந்த மாணவனும், வகுப்பறையில் இருந்த மாணவனும் சேர்ந்து ஆசிரியரை கடுமையாக தாக்கியுள்ளனர். இதில் நிலைகுலைந்து விழுந்த ஆசிரியர், மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

இந்த சம்பவத்தில் ஈடுபட்ட இரண்டு மாணவர்களும் கைது செய்யப்பட்டனர். ஒரு மாணவன் 18 வயது பூர்த்தியடைந்தவன் என்றும், மற்றொருவனுக்கு இன்னும் 2 மாதத்தில் 18 வயது பூர்த்தியடையும் என்றும் கூறப்படுகிறது.

பள்ளிக்கு சரியாக வராமல், அனைத்து தேர்வுகளிலும் தோல்வி அடைந்த 6 மாணவர்கள் உள்ளனர். அவர்கள் மீது பள்ளி நிர்வாகம் நடவடிக்கை எடுத்ததால், அந்த 6 மாணவர்களும், அவர்களது பெற்றோர்களும் பள்ளி தலைமை ஆசிரியரையும், தன்னையும் மிரட்டுவதாக, முகேஷ் ஏற்கனவே கூறியதாக அவரது உறவினர் தெரிவித்துள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.