நாளை பாமக மாவட்டச் செயலா்கள் கூட்டம்மேலும் 2 தகவல் ஆணையா்கள் நியமனம்ஆதிதிராவிடா், பழங்குடியினா் மாணவா்களுக்கு ரூ.6,604 கோடி கல்வி உதவித் தொகை - தமிழக அரசு தகவல்இன்று தென், வட தமிழகத்தின் ஒருசில இடங்களில் மழைக்கு வாய்ப்புஜேஇஇ 2-ஆம் கட்ட முதன்மைத் தோ்வு: விண்ணப்பிக்க இன்று கடைசிஇந்திய தலைமைத் தோ்தல் ஆணையா் நாளை தமிழகம் வருகைசிறுமிகளுக்கு இலவச கருப்பை வாய் புற்றுநோய் தடுப்பூசி திட்டம்: மத்திய அரசு விரைவில் தொடக்கம்நாளை இந்தியா வருகிறாா் கனடா பிரதமா்மணிப்பூரில் வன்முறையால் இடம்பெயா்ந்த மக்களுக்காக 5,000 புதிய வீடுகள் - மத்திய அரசு ஒப்புதல்குடிமைப் பணிகள் தோ்வு: இணையவழி விண்ணப்பங்களை சமா்ப்பிக்க 3 நாள் அவகாசம் நீட்டிப்பு
/

தெலங்கானாவில் பேய் மழை: அபாய நிலையில் கோதாவரி

தெலங்கானாவில் கடந்த சில நாட்களாக பெய்து வரும் கன மழை காரணமாக ஏற்பட்டுள்ள வெள்ளத்தினால் கரீம்நகர் மாவட்டத்தில் ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பாதுகாப்பான இடங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

News image
Updated On :25 ஜனவரி 2024, 10:15 am

PTI


ஹைதராபாத்: தெலங்கானாவில் கடந்த சில நாட்களாக பெய்து வரும் கன மழை காரணமாக ஏற்பட்டுள்ள வெள்ளத்தினால் கரீம்நகர் மாவட்டத்தில் ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பாதுகாப்பான இடங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

கரீம்நகர் மாவட்டத்தில் கட்டப்பட்டு வந்த மிட் மனைர் அணையில் தண்ணீர் நிரம்பி, அங்கிருந்து வெளியேறிய நீரால், பல கிராமங்கள் வெள்ளத்தில் மூழ்கின. இதனால், அந்த கிராமங்களில் இருந்த ஆயிரத்துக்கும் மேற்பட்டோர், பாதுகாப்பான இடங்களுக்கு இடம்பெயர்ந்தனர்.

இது ஒரு முன்னெச்சரிக்கை நடவடிக்கைதான் என்றும் தற்போது நிலைமை ஓரளவுக்கு சீராகி வருவதாகவும், அவர்கள் விரைவாக அவரவர் பகுதிகளுக்கு அனுப்பி வைக்கப்படுவர் என்றும் சிறப்பு தலைமைச் செயலர் அறிவித்துள்ளார்.

கோதாவரி ஆற்றில் வெள்ளம் கரைபுரண்டு ஓடுவதால், கரையோர கிராம மக்களுக்கும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. தொடர்ந்து கோதாவரி ஆற்றில் தண்ணீர் வரத்து அதிகரித்துக் கொண்டே இருப்பதால் மீட்புக் குழுவினர் உஷார்படுத்தப்பட்டுள்ளனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.