நாளை பாமக மாவட்டச் செயலா்கள் கூட்டம்மேலும் 2 தகவல் ஆணையா்கள் நியமனம்ஆதிதிராவிடா், பழங்குடியினா் மாணவா்களுக்கு ரூ.6,604 கோடி கல்வி உதவித் தொகை - தமிழக அரசு தகவல்இன்று தென், வட தமிழகத்தின் ஒருசில இடங்களில் மழைக்கு வாய்ப்புஜேஇஇ 2-ஆம் கட்ட முதன்மைத் தோ்வு: விண்ணப்பிக்க இன்று கடைசிஇந்திய தலைமைத் தோ்தல் ஆணையா் நாளை தமிழகம் வருகைசிறுமிகளுக்கு இலவச கருப்பை வாய் புற்றுநோய் தடுப்பூசி திட்டம்: மத்திய அரசு விரைவில் தொடக்கம்நாளை இந்தியா வருகிறாா் கனடா பிரதமா்மணிப்பூரில் வன்முறையால் இடம்பெயா்ந்த மக்களுக்காக 5,000 புதிய வீடுகள் - மத்திய அரசு ஒப்புதல்குடிமைப் பணிகள் தோ்வு: இணையவழி விண்ணப்பங்களை சமா்ப்பிக்க 3 நாள் அவகாசம் நீட்டிப்பு
/

அசாமில் விடுதலைப் புலிகள் இயக்கத் தீவிரவாதிகள் 6 பேர் சுட்டுக் கொலை

சாமில் கர்பி மக்கள் விடுதலைப் புலிகள் இயக்கத் தீவிரவாதிகள் 6 பேரைப் பாதுகாப்பு படையினர் சுட்டுக் கொன்றுள்ளனர்.

News image
Updated On :25 ஜனவரி 2024, 10:15 am

PTI

திப்பு: அசாம் மாநிலம் கர்பி மக்கள் விடுதலைப் புலிகள் இயக்கத் தீவிரவாதிகள் 6 பேரைப் பாதுகாப்பு படையினர் சுட்டுக் கொன்றுள்ளனர்.

அங்லாங் மாவட்டத்தில் பந்திபத்தர் பகுதியில் காவலர் மற்றும் ராணுவத்தினர் இணைந்து நடத்திய தாக்குதலில் கர்பி மக்கள் விடுதலைப் புலிகள் இயக்கத்தைச் சேர்ந்த முக்கிய 2 தலைவர்கள் உள்பட 6 பேரை பாதுகாப்பு படையினர் சுட்டு வீழ்த்தியுள்ளனர்.

பாதுகாப்பு படையைச் சேர்ந்த ராணுவ வீரர் ஒருவர் பலத்த காயம் அடைந்த நிலையில் அருகில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு அவசர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகின்றது. தொடர்ந்து அங்லாங் மாவட்டத்தில் பதற்றம் நிலவி வருகின்றது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.