ஈரானுடனான அமைதிப்பேச்சு ரத்து! அமெரிக்க பிரதிநிதிகள் குழு தாயகம் திரும்ப டிரம்ப் உத்தரவுஐபிஎல்: ராஜஸ்தானுக்கு எதிராக ஹைதராபாத் அணி அபார வெற்றிபட்டியலின சமூகங்களுக்கு உள் ஒதுக்கீடு வழங்க கர்நாடக அமைச்சரவை ஒப்புதல்!திருச்சி - தாம்பரம் இடையே நாளை(ஏப். 26) சிறப்பு ரயில்! நீதி ஆயோக் துணைத் தலைவராக முன்னாள் தலைமைப் பொருளாதார ஆலோசகர் நியமனம்!மேற்கு வங்க பாஜக எம்எல்ஏவுக்கு நீதி ஆயோக் துணைத் தலைவர் பதவி: பிரதமரைச் சந்தித்து வாழ்த்து டெல்லி வீரர் லுங்கி இங்கிடிக்கு தலையில் காயம்! ஆம்புலன்ஸில் அழைத்துச் செல்லப்பட்டார் தெலங்கானா மேலவை உறுப்பினராகிறார் அசாருதீன்: ஆளுநர் ஒப்புதல்!அதானி நிறுவனத்தின் உண்மையான பெயர் மோதானி: ராகுல் கடும் தாக்கு
/

காவிரி விவகாரம்: உச்ச நீதிமன்றத்தின் பொறுமையை சோதிக்கும் கர்நாடகா மீண்டும் மேல்முறையீடு

காவிரி விவகாரத்தில் உச்ச நீதிமன்ற உத்தரவில் திருத்தம் கோரி கர்நாடக அரசு இன்று மீண்டும் ஒரு மேல்முறையீட்டு மனுவை தாக்கல் செய்துள்ளது.

News image
Updated On :1 அக்டோபர் 2016, 9:12 am


புது தில்லி: காவிரி விவகாரத்தில் உச்ச நீதிமன்ற உத்தரவில் திருத்தம் கோரி கர்நாடக அரசு இன்று மீண்டும் ஒரு மேல்முறையீட்டு மனுவை தாக்கல் செய்துள்ளது.

தமிழகத்துக்கு அக்டோபர் 1ம் தேதி முதல் 6ம் தேதி வரை வினாடிக்கு 6 ஆயிரம் கன அடி நீர் திறக்கவும், காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கவும் உச்ச நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவை மறு ஆய்வு செய்யக் கோரி கர்நாடக அரசு இன்று உச்ச நீதிமன்றத்தில் மீண்டும் ஒரு மேல்முறையீட்டு மனுவை தாக்கல் செய்துள்ளது.

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க உத்தரவிட்டதற்கு எதிராகவும் மனுவில் கோரிக்கை முன் வைக்கப்பட்டுள்ளது.
காவிரி விவகாரத்தில் தமிழகத்துக்கு தண்ணீர் திறக்காமல் உச்ச நீதிமன்றத்தின் உத்தரவை மீறி செயல்படும் கர்நாடக அரசுக்கு உச்ச நீதிமன்றம் நேற்று கடும் கண்டனம் தெரிவித்தது.

எனினும், மீண்டும் ஒரு வாய்ப்பு வழங்கும் வகையில் அக்டோபர் 1ம் தேதி முதல் 6ம் தேதி வரை தமிழகத்துக்கு வினாடிக்கு 6 ஆயிரம் கன அடி நீர் திறக்க வேண்டும் என்று உத்தரவு பிறப்பித்தது.

மேலும், அக்டோபர் 4ம் தேதிக்குள் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கவும் மத்திய அரசுக்கு காலக்கெடு விதித்தது.
இவ்விரண்டு உத்தரவுகளையும் மாற்றக் கோரி கர்நாடக அரசு புதிய மனுவை இன்று தாக்கல் செய்துள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.