ஐபிஎல்: மும்பை படுதோல்வி! சிஎஸ்கே 103 ரன்கள் வித்தியாசத்தில் மாபெரும் வெற்றிஈரானுக்குப் பயணிக்க வேண்டாம்! இந்தியர்களுக்கு மத்திய அரசு அறிவுறுத்தல்15 ஆண்டுகளாக துரோகமிழைக்கும் திரிணமூல் காங்கிரஸ்: பிரதமர் மோடிதமிழ்நாடு பேரவைத் தேர்தல் 2026! வாக்குப்பதிவில் வரலாற்றுச் சாதனை!திமுகவை விடுவிக்க விதை விதைக்கப்பட்டுள்ளது: அன்புமணி15 ஆண்டுகளாக துரோகமிழைக்கும் திரிணமூல் காங்கிரஸ்: பிரதமர் மோடி
/

புதிய கடற்படை தளபதியாக சுனில் லன்பா பொறுப்பேற்பு

துணை அட்மிரலாக இருந்த சுனில் லன்பா புதிய கடற்படை தளபதியாக இன்று பொறுப்பேற்றுள்ளார்.

News image
Updated On :31 மே 2016, 7:22 am

புது தில்லி: துணை அட்மிரலாக இருந்த சுனில் லன்பா புதிய கடற்படை தளபதியாக இன்று பொறுப்பேற்றுள்ளார்.

முன்னதாக கடற்படை தளபதியாக இருந்த ஆர்.கே தோவன் ஓய் பெற்றதை தொடர்ந்து  புதிய கடற்படை தளபதியாக சுனில் லன்பா பொறுப்பேற்றுக் கொண்டார்.

இந்திய கடற்படையில் உள்ள ஒவ்வொரு பணியையும் பொறுப்புடன் சுனில் செய்து முடிப்பார் என்று நம்புகிறேன் என்று தோவன் கூறியுள்ளார்.

1957-ம் ஆண்டு ஜூலை 17-ம் தேதி பிறந்த சுனில் லன்பா, 1978-ல் இந்திய கடற்படையில் சேர்ந்தார். கடந்த 38 ஆண்டுகளாக இந்திய கடற்படையில் கமெண்டோ, செயல்பாட்டு மற்றும் ஊழியர்கள் நியமனங்கள் உள்ளிட்ட பல்வேறு பதவிகளை வகித்து வந்த அவர், இறுதியாக கடற்படை துணை அட்மிரலாக இருந்தார்.

இந்நிலையில், தற்போது சுனில் லன்பா கடற்படை தளபதியாக இன்று பொறுப்பேற்றுள்ளார். இவர் பரம் விஷிஸ்ட் சேவா மற்றும் அட்டி விஷிஸ்ட் சேவா விருதுகளை பெற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.