சென்னையில் ஆயிரம் விளக்கு, தி.நகர், வேளச்சேரி தொகுதிகளில் போட்டியிட பாஜக விருப்பம் எனத் தகவல்சட்டப்பேரவைத் தேர்தலையொட்டி அதிமுகவிடம் 72 தொகுதிகள் அடங்கிய பட்டியலை பாஜக வழங்கியதுதிமுகவுடன் தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தை: குழு அமைத்தது இந்திய கம்யூ. கட்சி!கல்லாப்பெட்டி கூட்டணி - எங்கள் தகுதிக்கு விஜய்க்கு பதில் சொல்ல வேண்டிய தேவை இல்லை : ஆர்.எஸ்.பாரதிஒவ்வொரு முறையும் மீண்டெழுவதைப்போல மீண்டும் திரும்புவார் நல்லகண்ணு : வைகோஅதிமுக ஆட்சிக்கு வராது என்ற நம்பிக்கையில் அறிவிப்பை வெளியிடுகிறார் எடப்பாடி பழனிசாமி : திருமாவளவன்பயணிகள் வசதிக்காக 26 குறுகிய தூர மின்சார ரயில்கள் இயக்க முடிவு : தெற்கு ரயில்வேஅதிதீவிர கண்காணிப்பில் நல்லகண்ணு: ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனை தகவல்கேரள மாநிலத்தின் பெயரை 'கேரளம்' என்று மாற்ற மத்திய அமைச்சரவைக் கூட்டத்தில் ஒப்புதல்சென்னை புறநகர் ரயில்கள் ரத்து: ரயில்வே மெத்தனமாக செயல்படக் கூடாது! - கனிமொழிகுமரியில் திருவள்ளுவர் சிலை வெள்ளி விழா நுழைவாயில் திறப்பு!பொங்கல் தொகுப்புடன் ஆண்டுதோறும் ரூ. 1,000 வழங்கப்படும்: இபிஎஸ் அறிவிப்புகடும் சரிவில் பங்குச்சந்தை! 700 புள்ளிகள் குறைந்த சென்செக்ஸ்!பிரதமர் மோடியின் இஸ்ரேல் பயணத்துக்கு காங்கிரஸ் எதிர்ப்பு!கட்டாயப்படுத்தி என்னை முதல்வராக்கினார்கள்; தனிக்கட்சி தொடங்கமாட்டேன்: ஓபிஎஸ்எதிர்க்கட்சித் தலைவரா? அல்லது இந்தியாவை எதிர்ப்பவர்களின் தலைவரா? ராகுல் மீது பாஜக எம்.பி. கடும் தாக்கு!மார்ச் 1 - திருப்பரங்குன்றத்தில் பிரதமர் மோடி தரிசனம்!மணிப்பூரில் இடம்பெயர்ந்த மக்களுக்கு 5,000 வீடுகள்: மத்திய அரசு ஒப்புதல்!கல்வியால் சிறக்கும் அரசுப் பள்ளி மாணவர்கள்: முதல்வர் மு.க. ஸ்டாலின் பெருமிதம்!
/

கூடங்குளத்தில் 4, 5-வது அணு உலைகளுக்கான செயல் ஒப்பந்தம் விரைவில் கையெழுத்து

ரஷ்ய நாட்டு உதவியுடன் கூடங்குளத்தில் அமைக்கப்படும் 4 மற்றும் 5-வது அணு உலைகளுக்கான செயல் ஒப்பந்தம் விரைவில் கையெழுத்தாகும் எனத் தெரிகிறது.

News image
Updated On :24 ஜனவரி 2024, 5:24 pm

PTI

மாஸ்கோ (ரஷ்யா): ரஷ்ய நாட்டு உதவியுடன் கூடங்குளத்தில் அமைக்கப்படும் 4 மற்றும் 5-வது அணு உலைகளுக்கான செயல் ஒப்பந்தம் விரைவில் கையெழுத்தாகும் எனத் தெரிகிறது.

இந்தியாவில் அதி நவீன  12 அணு உலைகளை அமைப்பதற்காக இந்தியாவுக்கும் ரஷ்யாவுக்கும் இடையே ஒப்பந்தம் கையெழுத்தானது. அதன்படி, 6 அணு உலைகள் தமிழ்நாட்டில் திருநெல்வேலி மாவட்டம், கூடங்குளத்தில் நிர்மாணிக்கப்படுகிறது. இதில் முதல் இரு அணு உலைகள் ஏற்கெனவே நிர்மாணிக்கப்பட்டுள்ளன.

முதல் அணு உலையில் மின் உற்பத்தி தொடங்கியுள்ள நிலையில், இரண்டாம் அணு உலையில் எரிபொருள் நிரப்பப்பட்டுள்ளது.

மேலும், 4 மற்றும் 5-வது அணு உலைகளுக்கான செயல் ஒப்பந்தம் இந்த ஆண்டுக்குள் கையெழுத்தாகும் என கூடங்குளத்தில் அணு உலைகளை நிறுவி வரும் ஏ.எஸ்.இ. என்ற ரஷ்ய நிறுவனத்தின் தலைவர் வேலரி லிம்ரன்கோ கூறினார்.

இந்தியாவிலிருந்து ரஷ்யா சென்றுள்ள செய்தியாளர்கள் குழுவிடம் பேசிய அவர் இதை தெரிவித்தார்.

மேலும், இந்திய அரசு தெரிவிக்கும் இடத்தில் மேலும் 6 அணு உலைகள் அமைக்கப்படும் என ரஷ்ய அரசின்  அணுசக்தி துறை இயக்குநர் விளாதிமிர் ஏ ஏஞ்சலோ கூறினார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.