தில்லியில் மோசமான வானிலை: விமான சேவை பாதிப்பால் மக்கள் அவதி
தில்லியில் மோசமான வானிலை காரணமாக விமான சேவை முற்றிலும் பாதிக்கப்பட்டது. இதனால் மக்கள் பெரும் அவதிக்குள்ளாகினர்.


புது தில்லி: தில்லியில் மோசமான வானிலை காரணமாக விமான சேவை முற்றிலும் பாதிக்கப்பட்டது. இதனால் மக்கள் பெரும் அவதிக்குள்ளாகினர்.
தில்லியில் பலத்த மழை மற்றும் புழுதிப் புயல் காரணமாக இந்திரா காந்தி சர்வதேச விமான நிலையத்திற்கு வரவேண்டிய 27 விமானங்கள் திருப்பி விடப்பட்டுள்ளன. விமானத்திற்காக நீண்ட நேரமாக காத்திருந்த மக்கள் ஏமாற்றத்துடன் திரும்பினர்.
சில விமானங்கள் மோசமான வானிலை காரணமாக திருப்பி விடப்பட்டுள்ளன. மேலும் சில விமானங்களின் நேரம் மாற்றியமைக்கப்பட்டுள்ளது. இன்று அதிகாலை 2.30 மணிக்கு லண்டன் செல்லவிருந்த ஏர் இந்திய விமானம் அதிகாலை 4 மணிக்கு மாற்றப்பட்டது.
விமான நேரம் மாற்றியமைக்கப்பட்டதை முன்கூட்டியே அறிவிக்கப்படாததால் மக்கள் நீண்ட நேரம் காத்திருக்க வேண்டி இருந்ததாக புகார் தெரிவித்தனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்


வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...