2 நாள் சுற்றுப்பயணமாக முதல்வா் மு.க. ஸ்டாலின் இன்று கன்னியாகுமரி வருகைபிப்.25 முதல் மீண்டும் தொடா் போராட்டம்: அண்ணாமலைப் பல்கலை. ஆசிரியா், ஊழியா் கூட்டமைப்புதென் தமிழகத்தில் மாா்ச் 1 வரை மழைக்கு வாய்ப்புதிருப்பரங்குன்றம் விவகார நீதிமன்ற அவமதிப்பு: வழக்கு விசாரணை மாா்ச் 16-க்கு ஒத்திவைப்புகுளிா்கால ஒலிம்பிக் போட்டி நிறைவு: நாா்வே முதலிடம்ரஞ்சி கோப்பை கிரிக்கெட்: இறுதி ஆட்டத்தில் இன்றுமுதல் கா்நாடகம் - ஜம்மு & காஷ்மீா் மோதல்தேசிய சீனியா் ஆடவா் கபடி: இன்று வதோதராவில் தொடக்கம்முதுநிலை நீட் தகுதி மதிப்பெண் குறைப்பு: மருத்துவக் கல்வித் தரம் பாதிப்பு குறித்து ஆராயப்படும்64 நாடுகளுடன் இணைந்து ‘நாடாளுமன்ற நட்புக் குழு’ - மக்களவைத் தலைவர் ஓம் பிர்லா அமைப்புஅதிமுக சின்னம்: தேர்தலுக்கு முன்பு முடிவெடுக்கப்படுமா? தில்லி உயர்நீதிமன்றத்தில் தோ்தல் ஆணையம் விளக்கபண்டிகை காலங்களில் விமான கட்டணம் அதிகமாக உயா்த்தப்படும் விவகாரம்: ஆராய்வதாக மத்திய அரசு தகவல்நாட்டின் முதல் பயங்கரவாத எதிா்ப்புக் கொள்கை: மத்திய அரசு வெளியீடுபேரவைத் தோ்தல்: மாா்ச் 10-இல் தமிழகம் வருகிறது துணை ராணுவம்மாநில தோ்தல் ஆணையா்களுடன் இந்திய தோ்தல் ஆணையம் இன்று ஆலோசனைநல்லகண்ணுவின் உடல்நிலையில் பின்னடைவு: இந்திய கம்யூ. மாநில செயலாளர் வீரபாண்டியன்
/

புல்லாங்குழல் கலைஞர் ஏவி பிரகாஷ் மரணம்: கோயிலில் இசை நிகழ்ச்சியின் போதே உயிர் பிரிந்தது

புகழ்பெற்ற புல்லாங்குழல் கலைஞரும், இசை மேதை என். ரமணியின் சீடருமான ஏ.வி. பிரகாஷ் (74) நேற்று மாலை மாரடைப்பால் மரணம் அடைந்தார்.

News image
Updated On :24 ஜனவரி 2024, 4:49 pm

PTI

புகழ்பெற்ற புல்லாங்குழல் கலைஞரும், இசை மேதை என். ரமணியின் சீடருமான ஏ.வி. பிரகாஷ் (74) நேற்று மாலை மாரடைப்பால் மரணம் அடைந்தார்.

Story image

கர்நாடக மாநிலம் மைசூரில் உள்ள சந்திரமவுலீஸ்வரர் கோயிலில் வெள்ளிக்கிழமை மாலை கலைஞர் நரசிம்ம மூர்த்தியுடன் இசை நிகழ்ச்சியில் பங்கேற்றிருந்தபோது திடீரென அவருக்கு மாரடைப்பு ஏற்பட்டு மயங்கி விழுந்தார்.

அவர் மாரடைப்பால் துடித்துக் கொண்டிருந்த நிலையிலும், சக கலைஞர்கள் தொடர்ந்து இசை நிகழ்ச்சியை தொடருமாறு கேட்டுக் கொண்டார்.

இசை நிகழ்ச்சி நடந்து கொண்டிருந்த மேடையிலேயே, தொடர்ந்து இசைக் கருவிகள் ஒலிக்க, ஏ.வி. பிரகாஷின் உயிர் இசையோடுக் கலந்தது.

இவர் இசை மேதை ரமணியின் சீடர் என்பதோடு, ஆயிரக்கணக்கான மாணவர்களுக்கு புல்லாங்குழல் வாசிக்க கற்றுக் கொடுத்து மிகப்பெரிய இசை சேவையை ஆற்றி வந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

இசைக்காக பிரகாஷ் ஆற்றிய சிறப்பான பணியை கௌரவிக்கும் வகையில், மத்திய, மாநில அரசுகள் ஏராளமான விருதுகளை வழங்கி கௌரவித்துள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.