2 நாள் சுற்றுப்பயணமாக முதல்வா் மு.க. ஸ்டாலின் இன்று கன்னியாகுமரி வருகைபிப்.25 முதல் மீண்டும் தொடா் போராட்டம்: அண்ணாமலைப் பல்கலை. ஆசிரியா், ஊழியா் கூட்டமைப்புதென் தமிழகத்தில் மாா்ச் 1 வரை மழைக்கு வாய்ப்புதிருப்பரங்குன்றம் விவகார நீதிமன்ற அவமதிப்பு: வழக்கு விசாரணை மாா்ச் 16-க்கு ஒத்திவைப்புகுளிா்கால ஒலிம்பிக் போட்டி நிறைவு: நாா்வே முதலிடம்ரஞ்சி கோப்பை கிரிக்கெட்: இறுதி ஆட்டத்தில் இன்றுமுதல் கா்நாடகம் - ஜம்மு & காஷ்மீா் மோதல்தேசிய சீனியா் ஆடவா் கபடி: இன்று வதோதராவில் தொடக்கம்முதுநிலை நீட் தகுதி மதிப்பெண் குறைப்பு: மருத்துவக் கல்வித் தரம் பாதிப்பு குறித்து ஆராயப்படும்64 நாடுகளுடன் இணைந்து ‘நாடாளுமன்ற நட்புக் குழு’ - மக்களவைத் தலைவர் ஓம் பிர்லா அமைப்புஅதிமுக சின்னம்: தேர்தலுக்கு முன்பு முடிவெடுக்கப்படுமா? தில்லி உயர்நீதிமன்றத்தில் தோ்தல் ஆணையம் விளக்கபண்டிகை காலங்களில் விமான கட்டணம் அதிகமாக உயா்த்தப்படும் விவகாரம்: ஆராய்வதாக மத்திய அரசு தகவல்நாட்டின் முதல் பயங்கரவாத எதிா்ப்புக் கொள்கை: மத்திய அரசு வெளியீடுபேரவைத் தோ்தல்: மாா்ச் 10-இல் தமிழகம் வருகிறது துணை ராணுவம்மாநில தோ்தல் ஆணையா்களுடன் இந்திய தோ்தல் ஆணையம் இன்று ஆலோசனைநல்லகண்ணுவின் உடல்நிலையில் பின்னடைவு: இந்திய கம்யூ. மாநில செயலாளர் வீரபாண்டியன்
/

நீர் பற்றாக்குறையைச் சமாளிப்பதற்கு மாற்று விவசாயம்: பிரதமர் மோடி வலியுறுத்தல்

நீர் பற்றாக்குறையைச் சமாளிப்பதற்கு, விவசாயிகள் மாற்று விவசாயத்தில் கவனம் செலுத்த வேண்டும் எனப் பிரதமர் நரேந்திர மோடி வலியுறுத்தினார்.

News image
Updated On :24 ஜனவரி 2024, 4:49 pm

PTI

நீர் பற்றாக்குறையைச் சமாளிப்பதற்கு, விவசாயிகள் மாற்று விவசாயத்தில் கவனம் செலுத்த வேண்டும் எனப் பிரதமர் நரேந்திர மோடி வலியுறுத்தினார்.

தில்லியில் நடைபெறும் `கிருஷி உன்னாடி மேளா' எனும் விவசாய முன்னேற்றத்துக்கான மூன்று நாள் விழாவை இன்று தொடக்கிவைத்து பிரதமர் மோடி பேசியதாவது:

அரசின் சமீபத்திய தரவுகளின்படி, விவசாயிகளின் சராசரி மாத வருமானம் ரூ. 6,426 மட்டுமே. இதை வருகிற 2020 ஆம் ஆண்டுக்குள் இருமடங்காக உயர்த்துவதற்கு மத்திய அரசு, புதிய விவசாயக் காப்பீடு திட்டம், மண்வள பரிசோதனை அட்டைகள் வழங்குதல் உள்ளிட்ட பல்வேறு திட்டங்களைச் செயல்படுத்தி வருகிறது.

விவசாயத்துக்குத் தேவையான தண்ணீர் வசதியை பெறும் வகையில் நாடு முழுவதும் தேங்கி கிடக்கும் 90 நீர்பாசனத் திட்டங்களை அரசு செயல்படுத்தி வருகிறது. இதன் மூலம் 80 லட்சம் ஹெக்டேர் பரப்பளவிலான விவசாய நிலங்கள் பயன்பெறும். இதற்காக அரசு ரூ. 20 ஆயிரம் கோடியை ஒதுக்கியுள்ளது.

கடந்த ஆட்சியில் தொடங்கப்பட்ட 90 நீர்ப்பாசனத் திட்டங்கள் குறித்த காலத்தில் நிறைவேற்றப்பட்டிருந்தால், அவை அனைத்திலும் அணைகள் போல் தண்ணீர் தேங்கியிருக்கும். ஆனால், தற்போது விவசாயிகளுக்குத் தேவையான தண்ணீர் கூட வழங்க இயலாத நிலையே உள்ளது.

கடந்த ஆட்சியில், மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதியளிப்புத் திட்டத்தின் கீழ் விவாதங்கள் மட்டுமே நடைபெற்றன. ஆனால், வேலை ஏதும் நடைபெறவில்லை. பாஜக அரசு இத்திட்டத்தை விரிவுப்படுத்தியுள்ளது. வரவிருக்கும் கோடைகாலத்தில் நாடு முழுவதும் அனைத்து கிராமங்களிலும் வேலை உறுதியளிப்புத் திட்டத்தின் கீழ் கண்டிப்பாக ஒரு வேலை நடத்தப்படும். இதன்படி நாடு முழுவதும் 5 லட்சம் குளங்களைச் சீரமைக்க அரசு இலக்கு நிர்ணயித்துள்ளது.

தண்ணீர் பாதுகாப்பில் முதன்மையானது தண்ணீரை சேமிப்பது. தண்ணீரை வீணாக்குவதற்கு நமக்கு உரிமையில்லை.

விவசாயிகள் தங்களுடைய வழக்கமான விவசாயப் பணிகளுடன், கால்நடை வளரப்பு மற்றும் மரம் வளர்ப்பு பணிகளிலும் ஈடுபட வேண்டும்.

மேலும், நீர் பற்றாக்குறையைச் சமாளிப்பதற்கு, விவசாயிகள் மாற்று விவசாயத்தில் கவனம் செலுத்த வேண்டும் என்றார் மோடி.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.