2 நாள் சுற்றுப்பயணமாக முதல்வா் மு.க. ஸ்டாலின் இன்று கன்னியாகுமரி வருகைபிப்.25 முதல் மீண்டும் தொடா் போராட்டம்: அண்ணாமலைப் பல்கலை. ஆசிரியா், ஊழியா் கூட்டமைப்புதென் தமிழகத்தில் மாா்ச் 1 வரை மழைக்கு வாய்ப்புதிருப்பரங்குன்றம் விவகார நீதிமன்ற அவமதிப்பு: வழக்கு விசாரணை மாா்ச் 16-க்கு ஒத்திவைப்புகுளிா்கால ஒலிம்பிக் போட்டி நிறைவு: நாா்வே முதலிடம்ரஞ்சி கோப்பை கிரிக்கெட்: இறுதி ஆட்டத்தில் இன்றுமுதல் கா்நாடகம் - ஜம்மு & காஷ்மீா் மோதல்தேசிய சீனியா் ஆடவா் கபடி: இன்று வதோதராவில் தொடக்கம்முதுநிலை நீட் தகுதி மதிப்பெண் குறைப்பு: மருத்துவக் கல்வித் தரம் பாதிப்பு குறித்து ஆராயப்படும்64 நாடுகளுடன் இணைந்து ‘நாடாளுமன்ற நட்புக் குழு’ - மக்களவைத் தலைவர் ஓம் பிர்லா அமைப்புஅதிமுக சின்னம்: தேர்தலுக்கு முன்பு முடிவெடுக்கப்படுமா? தில்லி உயர்நீதிமன்றத்தில் தோ்தல் ஆணையம் விளக்கபண்டிகை காலங்களில் விமான கட்டணம் அதிகமாக உயா்த்தப்படும் விவகாரம்: ஆராய்வதாக மத்திய அரசு தகவல்நாட்டின் முதல் பயங்கரவாத எதிா்ப்புக் கொள்கை: மத்திய அரசு வெளியீடுபேரவைத் தோ்தல்: மாா்ச் 10-இல் தமிழகம் வருகிறது துணை ராணுவம்மாநில தோ்தல் ஆணையா்களுடன் இந்திய தோ்தல் ஆணையம் இன்று ஆலோசனைநல்லகண்ணுவின் உடல்நிலையில் பின்னடைவு: இந்திய கம்யூ. மாநில செயலாளர் வீரபாண்டியன்
/

தேசத் துரோக வழக்கு: ஜேஎன்யு மாணவர்கள் இரண்டு பேருக்கு ஜாமீன்

தேசத் துரோக வழக்கில் கைது செய்யப்பட்ட ஜவாஹர்லால் நேரு பல்கலைக்கழக (ஜேஎன்யு) மாணவர்கள் உமர் காலித், அனிர்பான் பட்டாச்சார்யா ஆகியோருக்கு தில்லி கூடுதல் அமர்வு நீதிமன்றம் ஜாமீன் வழங்கியுள்ளது.

News image
Updated On :24 ஜனவரி 2024, 4:48 pm

PTI

தேசத் துரோக வழக்கில் கைது செய்யப்பட்ட ஜவாஹர்லால் நேரு பல்கலைக்கழக (ஜேஎன்யு) மாணவர்கள் உமர் காலித், அனிர்பான் பட்டாச்சார்யா ஆகியோருக்கு தில்லி கூடுதல் அமர்வு நீதிமன்றம்  ஜாமீன் வழங்கியுள்ளது.

ஜவாஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தில் அஃப்சல் குரு தூக்கிலிடப்பட்டதன் நினைவு நாள் அனுசரிக்கப்பட்டதாகவும், அவருக்கு ஆதரவாக முழக்கங்களை எழுப்பியதாகவும் புகார் எழுந்தது.

இதுதொடர்பாக, ஜேஎன்யு பல்கலைக்கழக மாணவர் அமைப்பின் தலைவர் கன்னையா குமார், உமர் காலித் மற்றும் அனிர்பான் பட்டாச்சார்யா ஆகியோர் தேச துரோக சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டனர்.

கன்னையா குமார் கடந்த மாதம் ஜாமீனில் வெளியே வந்த நிலையில், உமர் மற்றும் பட்டாச்சார்யாவின் ஜாமீன் மனுக்களை இன்று விசாரித்த தில்லி கூடுதல் அமர்வு நீதிமன்ற நீதிபதி, இருவருக்கும் ஆறு மாத கால ஜாமீன் வழங்கி, இருவரும் தலா ரூ.25,000 பிணைத் தொகை செலுத்த வேண்டும் என்றும் உத்தரவிட்டார்.    

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.