பேடிஎம் வங்கியின் உரிமத்தை ரத்து செய்தது ஆர்பிஐ!மணிப்பூரில் மீண்டும் வன்முறை: 3 பேர் பலி, பலர் காயம்பாஜகவில் இணைந்த ஆம் ஆத்மி எம்.பி.க்கள்! தமிழ்நாடு தேர்தல்! கிராமங்கள் சமநிலை செய்த நகரங்கள் எப்படியிருக்கின்றன மக்கள் வாக்களித்த மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள்? ஈரானை கடிதம் மூலம் ஆளும் மோஜ்தபா! எங்கே, எப்படி இருக்கிறார்?ஈரானை கடிதம் மூலம் ஆளும் மோஜ்தபா! எங்கே, எப்படி இருக்கிறார்?தேர்தல் அரசியல் வரலாற்றில் சிகரமான வாக்குப்பதிவு: விஜய்முதல்வர் மு.க.ஸ்டாலினுடன் திமுக வேட்பாளர்கள் சந்திப்புகொடைக்கானல் செல்கிறார் முதல்வர் ஸ்டாலின்!
/

ஓரினச் சேர்க்கை குற்றமல்ல; ஆனால் சமூக ஒழுக்கக்கேடான செயல்: ஆர்.எஸ்.எஸ்

ஓரினச் சேர்க்கை குற்றம் கிடையாது; ஆனால் அது ஒரு சமூக ஒழுக்கக்கேடான செயல் என்று ஆர்எஸ்எஸ் அமைப்பு கருத்து தெரிவித்துள்ளது.

Updated On :18 மார்ச் 2016, 12:21 pm

ஓரினச் சேர்க்கை குற்றம் கிடையாது; ஆனால் அது ஒரு சமூக ஒழுக்கக்கேடான செயல் என்று ஆர்எஸ்எஸ் அமைப்பு கருத்து தெரிவித்துள்ளது.

சமூகவலைதளமான சுட்டுரையில் இது தொடர்பாக ஆர்.எஸ்.எஸ் அமைப்பின் இணை பொதுச் செயலாளர் தத்தாத்ரேயா ஹொசபோலே வெளியிட்ட பதிவுகள் விவரம்:

ஓரினச் சேர்க்கை என்பது குற்றச்செயல் கிடையாது. அது சமூக ஓழுக்கக்கேடான நடவடிக்கையாகும். அதில் ஈடுபடுபவர்களைத் தண்டிக்க வேண்டிய அவசியமில்லை. அவர்களை உளவியல் ரீதியாக அணுக வேண்டும்.

ஓரினச் சேர்க்கை என்பது குற்றச்செயல் இல்லை. அதேநேரத்தில் அது போற்றத்தக்க செயல் அல்ல. ஒரே பாலினத்தவர் திருமணம் செய்யும் முறையானது, ஓரினச் சேர்க்கையை அங்கீகரிப்பதாகும். ஆகையால் அதைத் தடை செய்ய வேண்டும் என்று அந்தப் பதிவுகளில் குறிப்பிட்டுள்ளார் ஹொசபோலே.

முன்னதாக, தில்லியில் நேற்று நடைபெற்ற நிகழ்ச்சியில் கலந்து கொண்ட ஹொசபோலேயிடம், ஓரினச் சேர்க்கை இந்திய தண்டனையியல் சட்டத்தின் 377ஆவது பிரிவின் கீழ் குற்றமாகக் கருதலாமா? எனக் கேட்கப்பட்டது. இதற்கு அவர் பதிலளிக்கையில், "ஓரினச் சேர்க்கை என்பது சமூகத்தில் பிறரது வாழ்வில் எவ்வித பாதிப்பையும் ஏற்படுத்துவதில்லை. எனவே, அது குற்றச் செயல் கிடையாது' என்றார்.

இதுகுறித்து அவர் மேலும் தெரிவிக்கையில், "உடலுறவு விருப்பம் என்பது தனிப்பட்டது. அதுகுறித்து ஆர்எஸ்எஸ் ஏன் தனது கருத்தை பொது நிகழ்ச்சியில் தெரிவிக்க வேண்டும். அதுகுறித்து நாட்டு மக்கள்தான் முடிவு செய்ய வேண்டும்' என்றார்.

இந்திய தண்டனையியல் சட்டத்தின் 377ஆவது பிரிவில், ஓரினச் சேர்க்கை இயற்கைக்கு முரணானது; அதற்கு அதிகப்பட்சம் 10 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், உலக அளவில் ஓரினச் சேர்க்கைக்கு அங்கீகாரம் அதிகரித்து வருவதைச் சுட்டிக்காட்டி, இந்தியாவிலும் அதற்கு அங்கீகாரம் அளிக்கப்பட வேண்டும் என்று கோரிக்கைகள் எழுந்துள்ளது. பாஜகவைச் சேர்ந்த சில தலைவர்களும், ஓரே பாலினத்தவர் திருமணம் செய்வதற்கு ஆதரவு தெரிவித்துள்ளனர். காங்கிரஸ் கட்சியின் எம்.பி.யும், மத்திய முன்னாள் அமைச்சருமான சசி தரூர், மக்களவையில் இதுதொடர்பாகத் தனிநபர் மசோதாவை கொண்டு வர முயற்சி மேற்கொண்டார். ஆனால், அவரது முயற்சி தோல்வியில் முடிந்தது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.