2 நாள் சுற்றுப்பயணமாக முதல்வா் மு.க. ஸ்டாலின் இன்று கன்னியாகுமரி வருகைபிப்.25 முதல் மீண்டும் தொடா் போராட்டம்: அண்ணாமலைப் பல்கலை. ஆசிரியா், ஊழியா் கூட்டமைப்புதென் தமிழகத்தில் மாா்ச் 1 வரை மழைக்கு வாய்ப்புதிருப்பரங்குன்றம் விவகார நீதிமன்ற அவமதிப்பு: வழக்கு விசாரணை மாா்ச் 16-க்கு ஒத்திவைப்புகுளிா்கால ஒலிம்பிக் போட்டி நிறைவு: நாா்வே முதலிடம்ரஞ்சி கோப்பை கிரிக்கெட்: இறுதி ஆட்டத்தில் இன்றுமுதல் கா்நாடகம் - ஜம்மு & காஷ்மீா் மோதல்தேசிய சீனியா் ஆடவா் கபடி: இன்று வதோதராவில் தொடக்கம்முதுநிலை நீட் தகுதி மதிப்பெண் குறைப்பு: மருத்துவக் கல்வித் தரம் பாதிப்பு குறித்து ஆராயப்படும்64 நாடுகளுடன் இணைந்து ‘நாடாளுமன்ற நட்புக் குழு’ - மக்களவைத் தலைவர் ஓம் பிர்லா அமைப்புஅதிமுக சின்னம்: தேர்தலுக்கு முன்பு முடிவெடுக்கப்படுமா? தில்லி உயர்நீதிமன்றத்தில் தோ்தல் ஆணையம் விளக்கபண்டிகை காலங்களில் விமான கட்டணம் அதிகமாக உயா்த்தப்படும் விவகாரம்: ஆராய்வதாக மத்திய அரசு தகவல்நாட்டின் முதல் பயங்கரவாத எதிா்ப்புக் கொள்கை: மத்திய அரசு வெளியீடுபேரவைத் தோ்தல்: மாா்ச் 10-இல் தமிழகம் வருகிறது துணை ராணுவம்மாநில தோ்தல் ஆணையா்களுடன் இந்திய தோ்தல் ஆணையம் இன்று ஆலோசனைநல்லகண்ணுவின் உடல்நிலையில் பின்னடைவு: இந்திய கம்யூ. மாநில செயலாளர் வீரபாண்டியன்
/

ஓரினச் சேர்க்கை குற்றமல்ல; ஆனால் சமூக ஒழுக்கக்கேடான செயல்: ஆர்.எஸ்.எஸ்

ஓரினச் சேர்க்கை குற்றம் கிடையாது; ஆனால் அது ஒரு சமூக ஒழுக்கக்கேடான செயல் என்று ஆர்எஸ்எஸ் அமைப்பு கருத்து தெரிவித்துள்ளது.

News image
Updated On :24 ஜனவரி 2024, 4:48 pm

PTI

ஓரினச் சேர்க்கை குற்றம் கிடையாது; ஆனால் அது ஒரு சமூக ஒழுக்கக்கேடான செயல் என்று ஆர்எஸ்எஸ் அமைப்பு கருத்து தெரிவித்துள்ளது.

சமூகவலைதளமான சுட்டுரையில் இது தொடர்பாக ஆர்.எஸ்.எஸ் அமைப்பின் இணை பொதுச் செயலாளர் தத்தாத்ரேயா ஹொசபோலே வெளியிட்ட பதிவுகள் விவரம்:

ஓரினச் சேர்க்கை என்பது குற்றச்செயல் கிடையாது. அது சமூக ஓழுக்கக்கேடான நடவடிக்கையாகும். அதில் ஈடுபடுபவர்களைத் தண்டிக்க வேண்டிய அவசியமில்லை. அவர்களை உளவியல் ரீதியாக அணுக வேண்டும்.

ஓரினச் சேர்க்கை என்பது குற்றச்செயல் இல்லை. அதேநேரத்தில் அது போற்றத்தக்க செயல் அல்ல. ஒரே பாலினத்தவர் திருமணம் செய்யும் முறையானது, ஓரினச் சேர்க்கையை அங்கீகரிப்பதாகும். ஆகையால் அதைத் தடை செய்ய வேண்டும் என்று அந்தப் பதிவுகளில் குறிப்பிட்டுள்ளார் ஹொசபோலே.

முன்னதாக, தில்லியில் நேற்று நடைபெற்ற நிகழ்ச்சியில் கலந்து கொண்ட ஹொசபோலேயிடம், ஓரினச் சேர்க்கை இந்திய தண்டனையியல் சட்டத்தின் 377ஆவது பிரிவின் கீழ் குற்றமாகக் கருதலாமா? எனக் கேட்கப்பட்டது. இதற்கு அவர் பதிலளிக்கையில், "ஓரினச் சேர்க்கை என்பது சமூகத்தில் பிறரது வாழ்வில் எவ்வித பாதிப்பையும் ஏற்படுத்துவதில்லை. எனவே, அது குற்றச் செயல் கிடையாது' என்றார்.

இதுகுறித்து அவர் மேலும் தெரிவிக்கையில், "உடலுறவு விருப்பம் என்பது தனிப்பட்டது. அதுகுறித்து ஆர்எஸ்எஸ் ஏன் தனது கருத்தை பொது நிகழ்ச்சியில் தெரிவிக்க வேண்டும். அதுகுறித்து நாட்டு மக்கள்தான் முடிவு செய்ய வேண்டும்' என்றார்.

இந்திய தண்டனையியல் சட்டத்தின் 377ஆவது பிரிவில், ஓரினச் சேர்க்கை இயற்கைக்கு முரணானது; அதற்கு அதிகப்பட்சம் 10 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், உலக அளவில் ஓரினச் சேர்க்கைக்கு அங்கீகாரம் அதிகரித்து வருவதைச் சுட்டிக்காட்டி, இந்தியாவிலும் அதற்கு அங்கீகாரம் அளிக்கப்பட வேண்டும் என்று கோரிக்கைகள் எழுந்துள்ளது. பாஜகவைச் சேர்ந்த சில தலைவர்களும், ஓரே பாலினத்தவர் திருமணம் செய்வதற்கு ஆதரவு தெரிவித்துள்ளனர். காங்கிரஸ் கட்சியின் எம்.பி.யும், மத்திய முன்னாள் அமைச்சருமான சசி தரூர், மக்களவையில் இதுதொடர்பாகத் தனிநபர் மசோதாவை கொண்டு வர முயற்சி மேற்கொண்டார். ஆனால், அவரது முயற்சி தோல்வியில் முடிந்தது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.