பேடிஎம் வங்கியின் உரிமத்தை ரத்து செய்தது ஆர்பிஐ!மணிப்பூரில் மீண்டும் வன்முறை: 3 பேர் பலி, பலர் காயம்பாஜகவில் இணைந்த ஆம் ஆத்மி எம்.பி.க்கள்! தமிழ்நாடு தேர்தல்! கிராமங்கள் சமநிலை செய்த நகரங்கள் எப்படியிருக்கின்றன மக்கள் வாக்களித்த மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள்? ஈரானை கடிதம் மூலம் ஆளும் மோஜ்தபா! எங்கே, எப்படி இருக்கிறார்?ஈரானை கடிதம் மூலம் ஆளும் மோஜ்தபா! எங்கே, எப்படி இருக்கிறார்?தேர்தல் அரசியல் வரலாற்றில் சிகரமான வாக்குப்பதிவு: விஜய்முதல்வர் மு.க.ஸ்டாலினுடன் திமுக வேட்பாளர்கள் சந்திப்புகொடைக்கானல் செல்கிறார் முதல்வர் ஸ்டாலின்!
/

ஹரியானா மாநிலத்தில் கபடி வீரர் சுட்டுக் கொலை (வீடியோ இணைப்பு)

ஹரியானா மாநிலத்தில் பயிற்சி முடித்து வீடு திரும்பிய கபடி வீரரை ஸ்கூட்டரில் வந்த இருவர் சரமாரியாக சுட்டுக் கொலை செய்தனர்.

News image
Updated On :16 மார்ச் 2016, 11:05 am

ஹரியானா மாநிலத்தில் பயிற்சி முடித்து வீடு திரும்பிய கபடி வீரரை ஸ்கூட்டரில் வந்த இருவர் சரமாரியாக சுட்டுக் கொலை செய்தனர்.

இந்த காட்சி அங்கிருந்த ஒரு வீட்டில் பொருத்தப்பட்டிருந்த கேமிராவில் பதிவாகியுள்ளது. சமூக வலைத்தளங்களில் வேகமாக இந்த வீடியோ பரவி வருகிறது.

தேசிய அளவிலான கபடி போட்டிகளில் பங்கேற்று விளையாடி வந்தவர் ஹரியானா மாநிலம் ரோத்டாக் பகுதியைச் சேர்ந்த சுக்விந்தர் சிங் (24).

நேற்று மாலை பயிற்சி முடித்து விட்டு வீடு திரும்பி கொண்டிருந்தார் சுக்விந்தர் சிங். அலைபேசியில் பேசிக் கொண்டு வந்த அவரை, ஸ்கூட்டரில் வந்த இருவர் சரமாரியாக சுட்டனர்.

ஸ்கூட்டரில் பின் இருக்கையில் வந்த நபர் முதலில் சுக்விந்தர் சிங்கின் மார்பில் சுட்டார். இதில் நிலைகுலைந்து கீழே விழுந்தார் சுக்விந்தர் சிங். பின்னர் கீழே இறங்கி வந்த அவர்,  சுக்விந்தர் முன்னெற்றியில் துப்பாக்கியை வெகு அருகில் வைத்து சுட்டார். இதையடுத்து ஸ்கூட்டரை ஒட்டி வந்த நபரும், இறங்கிவந்து தனது பங்குக்கு சுட்டார்.

இந்த காட்சிகள் அனைத்தும் அங்கிருந்த வீட்டில் பொருத்தப்பட்டிருந்த கேமிராவில் பதிவாகியுள்ளது. இந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வேகமாக பரவி வருகிறது.

இந்த கொலை குறித்து போலீஸார் அடையாளம் தெரியாத நபர்கள் மீது வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

</p><p align="justify"> </p>

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.