ஹைதராபாத் சர்வதேச விமான நிலையத்தை நடத்தி வரும் ஜிஎம்ஆர் நிறுவனத்துக்கு மல்லையா அளித்த காசோலையில் பணம் இல்லாததால் அவருக்கு பிணையில் வர இயலாத பிடி ஆணை பிறப்பிக்கப்பட்டுள்ளது.
ஹைதராபாத் நகரின் எரமாஞ்சியில் உள்ள 11-வது சிறப்பு முதன்மை நீதிமன்றம் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது. கிங்ஸ்பிஷர் நிறுவனம் அளித்த ரூ. 50 லட்சத்துக்கான 4 காசோலைகள் பணம் இல்லாமல் திரும்பி வந்தன. இந்த ஆணையை மார்ச் 29 ஆம் தேதிக்குள் செயல்படுத்தவும் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
இதுகுறித்து பிடிஐ செய்தி நிறுவனத்திடம் பேசிய மல்லையாவின் வழக்குரைஞர் ஹெச்.சுதாகர் ராவ், மல்லையா மீது நான்கு பிணையில் வர இயலாத பிடி ஆணை நேற்று பிறப்பிக்கப்பட்டுள்ளது. பணம் இல்லாததால் திரும்பி வந்த ரூ. 50 லட்சம் மதிப்பிலான நான்கு காசோலைகளுக்காக இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதுபோன்று சில ஆண்டுகளுக்கு முன்பும் ஆணை பிறப்பிக்கப்பட்டது. அப்போது மல்லையா நேரில் ஆஜராவதிலிருந்து விலக்கு அளிக்க வலியுறுத்தி உயர் நீதிமன்றத்தில் உத்தரவு பெறப்பட்டது. அதுபோன்று இந்த நான்கு வழக்குகளிலும் உயர் நீதிமன்றத்தில் அனுமதி பெறப்படும் என்றார்.
கடந்த 10 ஆம் தேதி ஹைதராபாத் 14-வது கூடுதல் முதன்மை நீதிமன்றம், ரூ. 50 லட்சம் காசோலை மோசடி வழக்குத் தொடர்பாக விஜய் மல்லையா மற்றும் கிங் பிஷர் நிறுவனத்தின் மூத்த அதிகாரி ஒருவருக்கும் பிணையில் வர இயலாத பிடி ஆணைப் பிறப்பித்தது.
இதுகுறித்து கருத்து தெரிவித்த ஜிஎம்ஆர் நிறுவனத்தின் வழக்குரைஞர் ஜி அசோக் ரெட்டி, கிங் பிஷர் நிறுவனம் ஜிஎம்ஆர் நிறுவனத்துக்கு ரூ. 8 கோடி வரை செலுத்த வேண்டும். இதற்காக 11 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது என்றார்.
இந்திய வங்கிகளிடமிருந்து சுமார் 9000 கோடி கடன் பெற்ற விஜய் மல்லையா, தற்போது லண்டனில் உள்ளது குறிப்பிடத்தக்கது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

ஆன்த்ரோபிக் ‘மித்தோஸ்’ ஏஐ - புதிய அச்சுறுத்தல்: நிதியமைச்சா் எச்சரிக்கை

இஸ்ரேல் - லெபனான் போா் நிறுத்தம் 3 வாரம் நீட்டிப்பு

தலைமைத் தோ்தல் ஆணையரை நீக்கக்கோரி மாநிலங்களவையில் எதிா்க்கட்சிகள் புதிய நோட்டீஸ்

திரிணமூல் காங்கிரஸ் நிலைகுலைந்துவிட்டது: பிரதமா் மோடி
வீடியோக்கள்

வாக்கு சதவீதம் உயர்வுக்கு Vijay காரணமா?
தினமணி செய்திச் சேவை

வெள்ளை அறிக்கை வேண்டும்! சிசிடிவி காட்சியை வெளியிட்ட செல்வப்பெருந்தகை! | IT RAID | Congress
இணையதளச் செய்திப் பிரிவு

வரலாறு காணாத வாக்குப்பதிவா? | N Gopalaswami Interview | TN Election 2026 | Vote percentage in tamil nadu
தினமணி செய்திச் சேவை

ஜனநாயகக் கடமையாற்றிய திரைப்பிரபலங்கள் | Tamil cine actors | TN Election 2026 |
தினமணி செய்திச் சேவை


