2 நாள் சுற்றுப்பயணமாக முதல்வா் மு.க. ஸ்டாலின் இன்று கன்னியாகுமரி வருகைபிப்.25 முதல் மீண்டும் தொடா் போராட்டம்: அண்ணாமலைப் பல்கலை. ஆசிரியா், ஊழியா் கூட்டமைப்புதென் தமிழகத்தில் மாா்ச் 1 வரை மழைக்கு வாய்ப்புதிருப்பரங்குன்றம் விவகார நீதிமன்ற அவமதிப்பு: வழக்கு விசாரணை மாா்ச் 16-க்கு ஒத்திவைப்புகுளிா்கால ஒலிம்பிக் போட்டி நிறைவு: நாா்வே முதலிடம்ரஞ்சி கோப்பை கிரிக்கெட்: இறுதி ஆட்டத்தில் இன்றுமுதல் கா்நாடகம் - ஜம்மு & காஷ்மீா் மோதல்தேசிய சீனியா் ஆடவா் கபடி: இன்று வதோதராவில் தொடக்கம்முதுநிலை நீட் தகுதி மதிப்பெண் குறைப்பு: மருத்துவக் கல்வித் தரம் பாதிப்பு குறித்து ஆராயப்படும்64 நாடுகளுடன் இணைந்து ‘நாடாளுமன்ற நட்புக் குழு’ - மக்களவைத் தலைவர் ஓம் பிர்லா அமைப்புஅதிமுக சின்னம்: தேர்தலுக்கு முன்பு முடிவெடுக்கப்படுமா? தில்லி உயர்நீதிமன்றத்தில் தோ்தல் ஆணையம் விளக்கபண்டிகை காலங்களில் விமான கட்டணம் அதிகமாக உயா்த்தப்படும் விவகாரம்: ஆராய்வதாக மத்திய அரசு தகவல்நாட்டின் முதல் பயங்கரவாத எதிா்ப்புக் கொள்கை: மத்திய அரசு வெளியீடுபேரவைத் தோ்தல்: மாா்ச் 10-இல் தமிழகம் வருகிறது துணை ராணுவம்மாநில தோ்தல் ஆணையா்களுடன் இந்திய தோ்தல் ஆணையம் இன்று ஆலோசனைநல்லகண்ணுவின் உடல்நிலையில் பின்னடைவு: இந்திய கம்யூ. மாநில செயலாளர் வீரபாண்டியன்
/

'போலீஸ் குதிரையின் காலை உடைத்த பாஜக எம்.எல்.ஏ. மீது ஒழுங்கு நடவடிக்கை'

போராட்டத்தின் போது போலீஸ் குதிரையின் காலை உடைத்த உத்தரகாண்ட் பாரதீய ஜனதா கட்சி எம்.எல்.ஏ. மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும் என மத்திய அமைச்சர் ராஜீவ் பிரதாப் ரூடி கூறினார்.

News image
Updated On :24 ஜனவரி 2024, 4:47 pm

PTI

போராட்டத்தின் போது போலீஸ் குதிரையின் காலை உடைத்த உத்தரகாண்ட் பாரதீய ஜனதா கட்சி எம்.எல்.ஏ. மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும் என மத்திய அமைச்சர் ராஜீவ் பிரதாப் ரூடி கூறினார்.

உத்தரகாண்ட் மாநிலத்தில் காங்கிரஸ் ஆட்சி நடைபெற்று வருகிறது. ஆட்சியை எதிர்த்து பாரதீய ஜனதா கட்சி சார்பில் மாநில பேரவையை நோக்கி நேற்று பேரணி நடத்தப்பட்டது. பேரணியை காவல் துறையினர் தடுத்து நிறுத்திய நிலையில், முசௌரி சட்டப் பேரவை உறுப்பினர் கணேஷ் ஜோஷி உள்ளிட்ட சிலர், காவல் துறை குதிரையின் காலை அடித்து உடைத்தனர்.

இதில் நிலைகுலைந்த அந்த குதிரை கீழே விழுந்தது. அதால் எழுந்து நிற்கவே முடியவில்லை. குதிரையை பரிசோதித்த மருத்துவர்கள் காலை அகற்ற வேண்டும் என கூறிவிட்டனர்.

இந்நிலையில் குதிரையை தாக்கிய எம்.எல்.ஏ. மீது நடவடிக்கை எடுக்கப்படும் என பாரதீய ஜனதா கட்சி அறிவித்துள்ளது.

தில்லியில் செய்தியாளர்களிடம் பேசிய மத்திய அமைச்சர் ராஜீவ் பிரதாப் ரூடி, பாஜக எம்.எல்.ஏ.வால் குதிரை தாக்கப்பட்ட சம்பவம் குறித்து கட்சி மேலிடம் அறிந்துள்ளது. அந்த எம்.எல்.ஏ. மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.