சென்னை: முதல்வர் மு.க.ஸ்டாலினுடன் காங்கிரஸ் பொதுச் செயலாளர் கே.சி.வேணுகோபால் சந்திப்புபாகிஸ்தானிடமிருந்து போர் விமானங்கள் கொள்முதல்: சோமாலியா பேச்சுவார்த்தை‘ஆபரேசன் த்ரஷி-1’: ஜம்மு - காஷ்மீரில் மேலும் ஒரு பயங்கரவாதியின் உடல் கண்டெடுப்பு! இஸ்ரேல் நாடாளுமன்றத்தில் பிரதமர் மோடி புதன்கிழமை உரையாற்றுகிறார்ஏஐ மாநாட்டில் காங்கிரஸ் சட்டையின்றிப் போராட்டம்: “வெளிநாட்டு விருந்தினர்கள் முன் இந்தியாவுக்குத் தலைகுனிவு!” - பிரதமர் மோடிஎத்தனை கட்சிகள் சேர்ந்தாலும் மூழ்கும் கப்பல் திமுக : செல்லூர் ராஜு விமர்சனம்பிப். 23, 24-ல் மழைக்கு வாய்ப்பு! ஜம்மு-காஷ்மீரில் பயங்கரவாதிகளுடன் துப்பாக்கிச் சண்டை சட்டப்பேரவைத் தேர்தலில் திமுக கூட்டணியில் 5 தொகுதிகளை கேட்டுள்ளோம்: கே.எம்.காதர் மொகிதீன்
/

ஸ்ரீநகர் - பாரமுல்லா நெடுஞ்சாலையில் கண்ணிவெடி கண்டுபிடிப்பு: மிகப்பெரிய அசம்பாவிதம் தவிர்ப்பு

ஜம்மு காஷ்மீர் மாநிலம் ஸ்ரீநகர் - பாரமுல்லா தேசிய நெடுஞ்சாலையில் புதைத்து வைக்கப்பட்டிருந்த பயங்கர சக்தி வாய்ந்த கண்ணிவெடியை பாதுகாப்புப் படையினர் கண்டுபிடித்து செயலிழக்க வைத்ததால் பெரும் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டுள்ளது.

News image
Updated On :24 ஜனவரி 2024, 4:45 pm

IANS

ஜம்மு காஷ்மீர் மாநிலம் ஸ்ரீநகர் - பாரமுல்லா தேசிய நெடுஞ்சாலையில் புதைத்து வைக்கப்பட்டிருந்த பயங்கர சக்தி வாய்ந்த கண்ணிவெடியை பாதுகாப்புப் படையினர் கண்டுபிடித்து செயலிழக்க வைத்ததால் பெரும் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டுள்ளது.

இது குறித்து மூத்த காவல்துறை அதிகாரி கூறுகையில், சாலையோரப் பகுதிகளை ஆய்வு செய்த ராணுவ வீரர்கள், ஸ்ரீநகரின் நௌகாம் என்ற பகுதியில் சாலையோரம் புதைத்து வைக்கப்பட்டிருந்த கண்ணிவெடியைக் கண்டுபிடித்தனர். அதனை செயலிழக்க வைக்கும் பணியில் ராணுவத்தினரும், காவல்துறையினரும் ஈடுபட்டனர்.

இப்பகுதி சாலை ராணுவ வீரர்களால் அதிகமாகப் பயன்படுத்தும் சாலை என்பதால், ராணுவத்தை குறி வைத்தே இந்த கண்ணிவெடி புதைக்கப்பட்டிருப்பதாகவும், வெடிகுண்டு கண்டுபிடிக்கப்பட்டதால் மிகப்பெரிய அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டதாகவும் கூறப்படுகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.