2 நாள் சுற்றுப்பயணமாக முதல்வா் மு.க. ஸ்டாலின் இன்று கன்னியாகுமரி வருகைபிப்.25 முதல் மீண்டும் தொடா் போராட்டம்: அண்ணாமலைப் பல்கலை. ஆசிரியா், ஊழியா் கூட்டமைப்புதென் தமிழகத்தில் மாா்ச் 1 வரை மழைக்கு வாய்ப்புதிருப்பரங்குன்றம் விவகார நீதிமன்ற அவமதிப்பு: வழக்கு விசாரணை மாா்ச் 16-க்கு ஒத்திவைப்புகுளிா்கால ஒலிம்பிக் போட்டி நிறைவு: நாா்வே முதலிடம்ரஞ்சி கோப்பை கிரிக்கெட்: இறுதி ஆட்டத்தில் இன்றுமுதல் கா்நாடகம் - ஜம்மு & காஷ்மீா் மோதல்தேசிய சீனியா் ஆடவா் கபடி: இன்று வதோதராவில் தொடக்கம்முதுநிலை நீட் தகுதி மதிப்பெண் குறைப்பு: மருத்துவக் கல்வித் தரம் பாதிப்பு குறித்து ஆராயப்படும்64 நாடுகளுடன் இணைந்து ‘நாடாளுமன்ற நட்புக் குழு’ - மக்களவைத் தலைவர் ஓம் பிர்லா அமைப்புஅதிமுக சின்னம்: தேர்தலுக்கு முன்பு முடிவெடுக்கப்படுமா? தில்லி உயர்நீதிமன்றத்தில் தோ்தல் ஆணையம் விளக்கபண்டிகை காலங்களில் விமான கட்டணம் அதிகமாக உயா்த்தப்படும் விவகாரம்: ஆராய்வதாக மத்திய அரசு தகவல்நாட்டின் முதல் பயங்கரவாத எதிா்ப்புக் கொள்கை: மத்திய அரசு வெளியீடுபேரவைத் தோ்தல்: மாா்ச் 10-இல் தமிழகம் வருகிறது துணை ராணுவம்மாநில தோ்தல் ஆணையா்களுடன் இந்திய தோ்தல் ஆணையம் இன்று ஆலோசனைநல்லகண்ணுவின் உடல்நிலையில் பின்னடைவு: இந்திய கம்யூ. மாநில செயலாளர் வீரபாண்டியன்
/

ஓரினச்சேர்க்கையை குற்றமாக கருதக் கூடாது: சசி தரூர் தீர்மானம் தோல்வி

ஓரினச்சேர்க்கையை யில் ஈடுபடுவதை குற்றமாகக் கருதக்கூடாது என்று கூறி மக்களவையில் காங்கிரஸ் உறுப்பினர் சசி தரூர் கொண்டு வந்த தனிநபர் மசோதா மீண்டும் தோல்வியடைந்தது

News image
Updated On :24 ஜனவரி 2024, 4:45 pm

PTI

ஓரினச்சேர்க்கையை யில் ஈடுபடுவதை குற்றமாகக் கருதக்கூடாது என்று கூறி மக்களவையில் காங்கிரஸ் உறுப்பினர் சசி தரூர் கொண்டு வந்த தனிநபர் மசோதா மீண்டும் தோல்வியடைந்தது.

ஓரினச் சேர்க்கையில் ஈடுபடுவதை தண்டனைக்குரிய குற்றமாகக் கருதும் இந்திய தண்டனையியல் சட்டத்தின் 377-ஆவது பிரிவில் திருத்தம் மேற்கொள்ளப்பட்டு, அதற்கு மாற்றாக மற்றொரு பிரிவு உருவாக்கப்பட வேண்டும் என்று காங்கிரஸ் மூத்த தலைவர் சசி தரூர், மக்களவையில் தனிநபர் மசோதாவை தாக்கல் செய்தார்.

இந்த மசோதாவுக்கு அப்போது அவையில் இருந்த 73 உறுப்பினர்களில் 58 பேர் எதிர்ப்பு தெரிவித்தனர். 14 பேர் மட்டுமே ஆதரவு தெரிவித்தனர். ஒருவர் நடுநிலை வகித்தார். இதையடுத்து அந்த மசோதா தோல்வியடைந்தது.

இதே விஷயத்தை வலியுறுத்தி கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் 18 ஆம் தேதி சசி தரூர் மக்களவையில் கொண்டு வந்த தனிநபர் தீர்மானம் ஆரம்ப நிலையிலேயே தோல்வியடைந்தது.

இந்திய தண்டனையியல் சட்டத்தின் 377-ஆவது பிரிவை நீக்குவது குறித்து மத்திய அரசு ஆலோசிக்க வேண்டும் என்றும், இந்தப் பிரிவானது அரசமைப்புச் சட்டத்துக்கு எதிரானது என்றும் கடந்த 2009-ஆம் ஆண்டு, தில்லி உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்தது. இந்தத் தீர்ப்பை உச்ச நீதிமன்றம் 2013-ஆம் ஆண்டு ரத்து செய்தது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.