பேடிஎம் வங்கியின் உரிமத்தை ரத்து செய்தது ஆர்பிஐ!மணிப்பூரில் மீண்டும் வன்முறை: 3 பேர் பலி, பலர் காயம்பாஜகவில் இணைந்த ஆம் ஆத்மி எம்.பி.க்கள்! தமிழ்நாடு தேர்தல்! கிராமங்கள் சமநிலை செய்த நகரங்கள் எப்படியிருக்கின்றன மக்கள் வாக்களித்த மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள்? ஈரானை கடிதம் மூலம் ஆளும் மோஜ்தபா! எங்கே, எப்படி இருக்கிறார்?ஈரானை கடிதம் மூலம் ஆளும் மோஜ்தபா! எங்கே, எப்படி இருக்கிறார்?தேர்தல் அரசியல் வரலாற்றில் சிகரமான வாக்குப்பதிவு: விஜய்முதல்வர் மு.க.ஸ்டாலினுடன் திமுக வேட்பாளர்கள் சந்திப்புகொடைக்கானல் செல்கிறார் முதல்வர் ஸ்டாலின்!
/

ஒரே நாளில் 20 ஆயிரம் திருமணங்கள்: தில்லியை ஸ்தம்பிக்கச் செய்யுமா?

தில்லியில் இன்று ஒரே நாளில் சுமார் 20 ஆயிரம் திருமணங்கள் நடத்த திட்டமிடப்பட்டிருப்பதை முன்னிட்டு போக்குவரத்தை சீரமைக்க சுமார் 4 ஆயிரம் காவல்துறையினர் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

News image
Updated On :11 மார்ச் 2016, 11:12 am

தில்லியில் இன்று ஒரே நாளில் சுமார் 20 ஆயிரம் திருமணங்கள் நடத்த திட்டமிடப்பட்டிருப்பதை முன்னிட்டு போக்குவரத்தை சீரமைக்க சுமார் 4 ஆயிரம் காவல்துறையினர் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

மேலும், யமுனை நதிக்கரையில் வாழும் கலை அமைப்பு சார்பில் நடைபெற உள்ள உலக கலாசார விழாவில் பங்கேற்க வருவோரின் வாகனங்களால், தில்லி முக்கிய பகுதிகள் இன்று முதல் 3 நாட்களுக்கு கடுமையான வாகன நெரிசலை சந்திக்கவிருக்கிறது.

தில்லியின் தெற்கு மற்றும் கிழக்கு பகுதிகளில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட வாய்ப்பு அதிகம் இருப்பதாக தில்லி போக்குவரத்துக் காவல்துறை அறிவித்துள்ளது.

அதில், தெற்கு தில்லியின் ரிங் ரோடு, நொய்டா லிங் ரோடு, என்எச் 24, அக்ஷர்தாம், மயூர் விகார், ஆஷ்ரம் சௌக், அரபிந்தோ மார்க், மஹிபால்புர் சௌக், மேஹ்ரௌலி - குர்கான் ரோடு உள்ளிட்ட முக்கிய சாலைகளில் அதிக நெரிசல் ஏற்படும் என்று அடையாளம் காணப்பட்டுள்ளது.

1,700 அதிகாரிகள் உலக கலாசார விழாவிற்கான போக்குவரத்துப் பணிகளில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

உலக கலாசார விழாவில் 25 ஆயிரம் வெளிநாட்டினர் உட்பட 35 லட்சம் பேர் கலந்து கொள்வார்கள் என்று கணிக்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு நாளும் விழாவில் பங்கேற்க 2 லட்சம் பேர் யமுனை நதிக்கரையில் குவிவார்கள் என்றும் கூறப்படுகிறது.

இந்நிகழ்ச்சிக்கு வருவோர் பொதுப் போக்குவரத்தான பேருந்து மற்றும் மெட்ரோ ரயில்களை பயன்படுத்துமாறும், அவர்கள் விரைவாக வீடு திரும்புமாறும், அறிவுறுத்தியதாக போக்குவரத்துத் துறை மூத்த அதிகாரி ஷரத் அகர்வால் கூறினார்.

மேலும், போக்குவரத்து நெரிசலைத் தவிர்க்க பல்வேறு முன்னேற்பாடுகளையும் போக்குவரத்துக் காவல்துறையினர் மேற்கொண்டுள்ளனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.