ஷீனா போரா வழக்கில் திடீர் திருப்பம்: சாட்சியாக மாறிய கார் ஓட்டுநருக்கு பொது மன்னிப்பு
மும்பையைச் சேர்ந்த இளம் பெண் ஷீனா போரா கொலை வழக்கில் முக்கியக் குற்றவாளி இந்திராணி முகர்ஜியின் கார் ஓட்டுநர் ஷியாம்வர் ரவி, சாட்சியமாக மாற அனுமதி அளித்த சிபிஐ சிறப்பு நீதிமன்றம் அவருக்கு பொது மன்னிப்பு வழங்குவதாகவும் அறிவித்தது.








