கட்சியின் பெயரை மட்டும் விரைவில் அறிவிக்கிறேன்: என் முயற்சியில் எந்தவித மாற்றத்திற்கும் இடமில்லை - சசிகலாராமநாதபுரத்தில் புதிய கட்சி தொடங்கினார் சசிகலா : அண்ணா, எம்ஜிஆர், ஜெயலலிதா படங்களுடன் கொடி அறிமுகம்9 ஆண்டுகளாக அமைதியாக இருந்ததைப்போல இனியும் இருக்க முடியாது : சசிகலாசென்னையில் ஆயிரம் விளக்கு, தி.நகர், வேளச்சேரி தொகுதிகளில் போட்டியிட பாஜக விருப்பம் எனத் தகவல்சட்டப்பேரவைத் தேர்தலையொட்டி அதிமுகவிடம் 72 தொகுதிகள் அடங்கிய பட்டியலை பாஜக வழங்கியதுஅதிமுக ஆட்சிக்கு வராது என்ற நம்பிக்கையில் அறிவிப்பை வெளியிடுகிறார் எடப்பாடி பழனிசாமி : திருமாவளவன்பயணிகள் வசதிக்காக 26 குறுகிய தூர மின்சார ரயில்கள் இயக்க முடிவு : தெற்கு ரயில்வே
/

ஷீனா போரா வழக்கில் திடீர் திருப்பம்: சாட்சியாக மாறிய கார் ஓட்டுநருக்கு பொது மன்னிப்பு

மும்பையைச் சேர்ந்த இளம் பெண் ஷீனா போரா கொலை வழக்கில் முக்கியக் குற்றவாளி இந்திராணி முகர்ஜியின் கார் ஓட்டுநர் ஷியாம்வர் ரவி, சாட்சியமாக மாற அனுமதி அளித்த சிபிஐ சிறப்பு நீதிமன்றம் அவருக்கு பொது மன்னிப்பு வழங்குவதாகவும் அறிவித்தது.

News image
Updated On :24 ஜனவரி 2024, 5:32 pm

PTI

மும்பை: மும்பையைச் சேர்ந்த இளம் பெண் ஷீனா போரா கொலை வழக்கில் முக்கியக் குற்றவாளி இந்திராணி முகர்ஜியின் கார் ஓட்டுநர் ஷியாம்வர் ரவி, சாட்சியமாக மாற அனுமதி அளித்த சிபிஐ சிறப்பு நீதிமன்றம் அவருக்கு பொது மன்னிப்பு வழங்குவதாகவும் அறிவித்தது.

ஷீனா போரா கொலை வழக்கில் சாட்சியாக மாறுவதற்கும், தனக்கு பொதுமன்னிப்பு வழங்க வேண்டும் என்று கோரியும் ஷியாம்வர் ரவி தாக்கல் செய்த மனுவுக்கு சிபிஐ தரப்பு ஏற்கனவே அனுமதி அளித்தது.

இந்நிலையில், ஷியாம்ரவி சாட்சியமாக மாறுவதற்கு சிபிஐ சிறப்பு நீதிமன்ற நீதிபதி எச்.எஸ்.மகாஜன் அனுமதி அளித்தார். மேலும், ஷீனா போரா கொலை வழக்கு தொடர்பான அனைத்து உண்மைகளையும் தெரிவிக்க வேண்டும் என்றும் நீதிபதிகள் கூறினார். அவருக்கு பொது மன்னிப்பு வழங்கப்படும் என்றும் அறிவித்தனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.