அதானி நிறுவனத்தின் உண்மையான பெயர் மோதானி: ராகுல் கடும் தாக்குதிமுகவே மீண்டும் ஆட்சி; விஜய்யால் அரசியல் சூழல் மாறும்: திருமாவளவன்ஆம் ஆத்மியில் இருந்து மேலும் சில தலைவர்கள் விலகுவார்கள்: பாஜகவில் இணைந்த எம்.பி. ஸ்வாதி மாலிவால்நீட் தேர்வுக்கான ஹால் டிக்கெட் வெளியீடு எப்போது? என்டிஏ அறிவிப்புவருகிறது புதிய ரியல்மி சி100எக்ஸ்! எப்போது அறிமுகம்?எச்-1பி விசாவுக்கு 3 ஆண்டுகள் தடை? டிரம்ப் அரசு புதிய மசோதா!திருச்சி மாவட்டத்தில் திரும்பிப் பார்க்க வைத்த திருவெறும்பூர் தொகுதி! காரணம் என்ன?வாக்குச்சாவடியாகும் பள்ளிகளை சுத்தம் செய்வது யார் பொறுப்பு?கடந்த ஆண்டு பள்ளியில் ஆசிரியை கொலை! பழிக்குப் பழியாக இளைஞரைக் கொன்ற தந்தை!!யமுனையில் படகு சவாரி செய்து பாருங்கள்! மோடியைக் கேலி செய்த மமதா!வாக்களித்த பிறகு சென்னை திரும்பும் மக்கள்! பேருந்து, ரயில்களில் அலைமோதும் பயணிகள் கூட்டம்!வெற்றி வாய்ப்பு எப்படி இருக்கிறது? மதுரையில் மு.க. ஸ்டாலின் பதில்!
/

அதிகாரத்தை சமுதாய வளர்ச்சிக்கு பயன்படுத்த பிரதமர் மோடி வலியுறுத்தல்

பாரதீய ஜனதா கட்சி தற்போது பெற்றுள்ள அதிகாரத்தை சமூக வளர்ச்சிக்கு பயன்படுத்த வேண்டும் என பிரதமர் நரேந்திர மோடி வலியுறுத்தினார்.

News image
Updated On :13 ஜூன் 2016, 1:15 pm

அலகாபாத் (உத்ர பிரதேசம்): பாரதீய ஜனதா கட்சி தற்போது பெற்றுள்ள அதிகாரத்தை சமூக வளர்ச்சிக்கு பயன்படுத்த வேண்டும் என பிரதமர் நரேந்திர மோடி வலியுறுத்தினார்.

 பாரதீய ஜனதா கட்சியின் தேசிய செயற்குழு கூட்டம் உத்ர பிரதேசம் மாநிலம் அலகாபாத்தில் நேற்று தொடங்கியது. நிறைவு நாள் கூட்டம் இன்று நடைபெற்றது.

இந்த கூட்டத்தில் பிரதமர் நரேந்திர மோடி பேசியதாவது:

பாரதீய ஜனதா கட்சியைச் சேர்ந்த கோடிக்கணக்கான தொண்டர்களின் பல ஆண்டுகளின் கடுமையான உழைப்பால் நாம் இப்போது பலனடைந்து வருகிறோம். மத்தியிலும் பல மாநிலங்களிலும் தற்போது ஆட்சியில் இருக்கிறோம். இந்த அதிகாரத்தால் நாம் பாதிக்கப்படக்கூடாது. இந்த அதிகாரத்தை சமூகத்தின் வளர்ச்சிக்கு எவ்வாறு பயன்படுத்த முடியும் என்பதை குறித்து சிந்திக்க வேண்டும்.

தேசத்தை வலுப்படுத்துவதற்கான தேவை உள்ளது. மக்கள், முழக்கங்களால் திருப்தியாவதில்லை. தேசத்தை எவ்வாறு வலுப்படுத்துவது என்பது குறித்து அவர்கள் அக்கறை கொண்டுள்ளனர்.

பாரதீய ஜனதா தொண்டர்கள் சேவை மனப்பான்மை, நடுநிலை, கட்டுப்பாடு, ஒருங்கிணைத்தல், நேர்மறை சிந்தனை, பிறர் குறித்த கரிசணை மற்றும் பேச்சுவாத்தை ஆகிய 7 மந்திரங்களை பின்பற்ற வேண்டும் என்றார் மோடி.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.