ஆம் ஆத்மியில் இருந்து மேலும் சில தலைவர்கள் விலகுவார்கள்: பாஜகவில் இணைந்த எம்.பி. ஸ்வாதி மாலிவால்நீட் தேர்வுக்கான ஹால் டிக்கெட் வெளியீடு எப்போது? என்டிஏ அறிவிப்புவருகிறது புதிய ரியல்மி சி100எக்ஸ்! எப்போது அறிமுகம்?எச்-1பி விசாவுக்கு 3 ஆண்டுகள் தடை? டிரம்ப் அரசு புதிய மசோதா!திருச்சி மாவட்டத்தில் திரும்பிப் பார்க்க வைத்த திருவெறும்பூர் தொகுதி! காரணம் என்ன?வாக்குச்சாவடியாகும் பள்ளிகளை சுத்தம் செய்வது யார் பொறுப்பு?கடந்த ஆண்டு பள்ளியில் ஆசிரியை கொலை! பழிக்குப் பழியாக இளைஞரைக் கொன்ற தந்தை!!யமுனையில் படகு சவாரி செய்து பாருங்கள்! மோடியைக் கேலி செய்த மமதா!வாக்களித்த பிறகு சென்னை திரும்பும் மக்கள்! பேருந்து, ரயில்களில் அலைமோதும் பயணிகள் கூட்டம்!வெற்றி வாய்ப்பு எப்படி இருக்கிறது? மதுரையில் மு.க. ஸ்டாலின் பதில்!
/

டென்மார்க் பெண் பலாத்காரம்: குற்றவாளிகளுக்கு சாகும் வரை சிறை தண்டனை கோரியது காவல்துறை

தில்லியில் 2014ஆம் ஆண்டு சுற்றுலா வந்த டென்மார்க் நாட்டு பெண் பயணியை கத்திமுனையில் பாலியல் பலாத்காரம் செய்த வழக்கில் குற்றவாளிகளாக அறிவிக்கப்பட்ட 5 பேருக்கும் சாகும் வரை சிறை தண்டனை வழங்க வேண்டும் என்று காவல்துறை தரப்பில் இறுதி வாதம் முன்வைக்கப்பட்டது.

Updated On :9 ஜூன் 2016, 10:09 am

புது தில்லி: தில்லியில் 2014ஆம் ஆண்டு சுற்றுலா வந்த டென்மார்க் நாட்டு பெண் பயணியை கத்திமுனையில் பாலியல் பலாத்காரம் செய்த வழக்கில் குற்றவாளிகளாக அறிவிக்கப்பட்ட 5 பேருக்கும் சாகும் வரை சிறை தண்டனை வழங்க வேண்டும் என்று காவல்துறை தரப்பில் இறுதி வாதம் முன்வைக்கப்பட்டது.

முன்னதாக இது தொடர்பான வழக்கில், மகேந்திரா (எ) கஞ்சா (27), முகம்மது ராஜா(23), ராஜு(24),அர்ஜூன்(22),ராஜு சக்கா(23) ஆகியோரை குற்றவாளிகள் என்று செஷன்ஸ் நீதிமன்றம் கடந்த 6-ஆம் தேதி அறிவித்தது.

இந்நிலையில், குற்றவாளிகளுக்கு விதிக்கப்படும் தண்டனை மீதான வாதம் இன்று நடைபெற்றது.

அப்போது சிறப்பு அரசு வழக்குரைஞர் அதுல் ஸ்ரீவாஸ்தவா, "5 பேரும் செய்த குற்றம் கொடூரமானதும், மனிதாபிமானமற்றதுமாகும். அவர்களுக்கு அதிகபட்ச தண்டனையான சாகும் வரை சிறை தண்டனை விதிக்க வேண்டும்" என்று வாதிட்டார்.

இவ்வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட 6-ஆவது நபர், விசாரணை நடைபெற்று வந்த காலக் கட்டத்தில் மரணமடைந்துவிட்டார். அதையடுத்து, அவருக்கு எதிரான குற்றச்சாட்டு கைவிடப்பட்டது.

இந்த வழக்கில் தொடர்புடைய 3 சிறுவர்கள் மீதான விசாரணை சிறார் நீதி ஆணையத்தில் நடைபெற்று வருகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.