டென்மார்க் பெண் பலாத்காரம்: குற்றவாளிகளுக்கு சாகும் வரை சிறை தண்டனை கோரியது காவல்துறை
தில்லியில் 2014ஆம் ஆண்டு சுற்றுலா வந்த டென்மார்க் நாட்டு பெண் பயணியை கத்திமுனையில் பாலியல் பலாத்காரம் செய்த வழக்கில் குற்றவாளிகளாக அறிவிக்கப்பட்ட 5 பேருக்கும் சாகும் வரை சிறை தண்டனை வழங்க வேண்டும் என்று காவல்துறை தரப்பில் இறுதி வாதம் முன்வைக்கப்பட்டது.








