10 வயது சிறுமியைக் கடித்து குதறிய தெரு நாய்கள்
மத்திய பிரதேசம் மாநிலத்தில் புல் அறுக்க சென்ற சிறுமியை, தெரு நாய்கள் கடித்துக் குதறி கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.


கார்கோன் (மத்ய பிரதேசம்): மத்திய பிரதேசம் மாநிலத்தில் புல் அறுக்க சென்ற சிறுமி, தெரு நாய்கள் கடித்துக் குதறியதில் பலியான சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மத்திய பிரதேச மாநிலம், கார்கோன் மாவட்டத்தில் உள்ள அடல்பூர் கிராமத்தைச் சேர்ந்தவர் திணேஷ். இவரது மகள் பூஜா (10).
பூஜா, தாங்கள் வளர்த்து வரும் ஆடுகளுக்கு புல் அறுப்பதற்காக அருகே உள்ள வயல்பகுதிக்கு நேற்று மாலை சென்றார்.
அப்போது அங்கு வந்த சுமார் 10க்கும் அதிகமான தெரு நாய்கள், பூஜாவை கடித்துக் குதறின. சிறுமியின் சத்தம் கேட்டு அருகே இருந்தவர்கள் விரைந்து சென்று அந்த நாய்களை துரத்தி அடித்தனர்.
எனினும், பூஜாவை அந்த நாய்கள் மிகக் கொடூரமாகக் கடித்துவிட்டதால், அவர் சம்பவ இடத்திலேயே இறந்துவிட்டார்.
தெரு நாய்கள் கடித்ததில் சிறுமி ஒருவர் பலியான சம்பவம் அடல்பூர் கிராமத்தில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...