கட்சியின் பெயரை மட்டும் விரைவில் அறிவிக்கிறேன்: என் முயற்சியில் எந்தவித மாற்றத்திற்கும் இடமில்லை - சசிகலாராமநாதபுரத்தில் புதிய கட்சி தொடங்கினார் சசிகலா : அண்ணா, எம்ஜிஆர், ஜெயலலிதா படங்களுடன் கொடி அறிமுகம்9 ஆண்டுகளாக அமைதியாக இருந்ததைப்போல இனியும் இருக்க முடியாது : சசிகலாசென்னையில் ஆயிரம் விளக்கு, தி.நகர், வேளச்சேரி தொகுதிகளில் போட்டியிட பாஜக விருப்பம் எனத் தகவல்சட்டப்பேரவைத் தேர்தலையொட்டி அதிமுகவிடம் 72 தொகுதிகள் அடங்கிய பட்டியலை பாஜக வழங்கியதுஅதிமுக ஆட்சிக்கு வராது என்ற நம்பிக்கையில் அறிவிப்பை வெளியிடுகிறார் எடப்பாடி பழனிசாமி : திருமாவளவன்பயணிகள் வசதிக்காக 26 குறுகிய தூர மின்சார ரயில்கள் இயக்க முடிவு : தெற்கு ரயில்வே
/

10 வயது சிறுமியைக் கடித்து குதறிய தெரு நாய்கள்

மத்திய பிரதேசம் மாநிலத்தில் புல் அறுக்க சென்ற சிறுமியை, தெரு நாய்கள் கடித்துக் குதறி கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

News image
Updated On :24 ஜனவரி 2024, 5:27 pm

PTI

கார்கோன் (மத்ய பிரதேசம்): மத்திய பிரதேசம் மாநிலத்தில் புல் அறுக்க சென்ற சிறுமி, தெரு நாய்கள் கடித்துக் குதறியதில் பலியான சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மத்திய பிரதேச மாநிலம், கார்கோன் மாவட்டத்தில் உள்ள அடல்பூர் கிராமத்தைச் சேர்ந்தவர் திணேஷ். இவரது மகள் பூஜா (10).

பூஜா, தாங்கள் வளர்த்து வரும் ஆடுகளுக்கு புல் அறுப்பதற்காக அருகே உள்ள வயல்பகுதிக்கு நேற்று மாலை சென்றார்.

அப்போது அங்கு வந்த சுமார் 10க்கும் அதிகமான தெரு நாய்கள், பூஜாவை கடித்துக் குதறின. சிறுமியின் சத்தம் கேட்டு அருகே இருந்தவர்கள் விரைந்து சென்று அந்த நாய்களை துரத்தி அடித்தனர்.

எனினும், பூஜாவை அந்த நாய்கள் மிகக் கொடூரமாகக் கடித்துவிட்டதால், அவர் சம்பவ இடத்திலேயே இறந்துவிட்டார்.

தெரு நாய்கள் கடித்ததில் சிறுமி ஒருவர் பலியான சம்பவம் அடல்பூர் கிராமத்தில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.