சென்னையில் ஆயிரம் விளக்கு, தி.நகர், வேளச்சேரி தொகுதிகளில் போட்டியிட பாஜக விருப்பம் எனத் தகவல்சட்டப்பேரவைத் தேர்தலையொட்டி அதிமுகவிடம் 72 தொகுதிகள் அடங்கிய பட்டியலை பாஜக வழங்கியதுதிமுகவுடன் தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தை: குழு அமைத்தது இந்திய கம்யூ. கட்சி!கல்லாப்பெட்டி கூட்டணி - எங்கள் தகுதிக்கு விஜய்க்கு பதில் சொல்ல வேண்டிய தேவை இல்லை : ஆர்.எஸ்.பாரதிஒவ்வொரு முறையும் மீண்டெழுவதைப்போல மீண்டும் திரும்புவார் நல்லகண்ணு : வைகோஅதிமுக ஆட்சிக்கு வராது என்ற நம்பிக்கையில் அறிவிப்பை வெளியிடுகிறார் எடப்பாடி பழனிசாமி : திருமாவளவன்பயணிகள் வசதிக்காக 26 குறுகிய தூர மின்சார ரயில்கள் இயக்க முடிவு : தெற்கு ரயில்வேஅதிதீவிர கண்காணிப்பில் நல்லகண்ணு: ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனை தகவல்கேரள மாநிலத்தின் பெயரை 'கேரளம்' என்று மாற்ற மத்திய அமைச்சரவைக் கூட்டத்தில் ஒப்புதல்சென்னை புறநகர் ரயில்கள் ரத்து: ரயில்வே மெத்தனமாக செயல்படக் கூடாது! - கனிமொழிகுமரியில் திருவள்ளுவர் சிலை வெள்ளி விழா நுழைவாயில் திறப்பு!பொங்கல் தொகுப்புடன் ஆண்டுதோறும் ரூ. 1,000 வழங்கப்படும்: இபிஎஸ் அறிவிப்புகடும் சரிவில் பங்குச்சந்தை! 700 புள்ளிகள் குறைந்த சென்செக்ஸ்!பிரதமர் மோடியின் இஸ்ரேல் பயணத்துக்கு காங்கிரஸ் எதிர்ப்பு!கட்டாயப்படுத்தி என்னை முதல்வராக்கினார்கள்; தனிக்கட்சி தொடங்கமாட்டேன்: ஓபிஎஸ்எதிர்க்கட்சித் தலைவரா? அல்லது இந்தியாவை எதிர்ப்பவர்களின் தலைவரா? ராகுல் மீது பாஜக எம்.பி. கடும் தாக்கு!மார்ச் 1 - திருப்பரங்குன்றத்தில் பிரதமர் மோடி தரிசனம்!மணிப்பூரில் இடம்பெயர்ந்த மக்களுக்கு 5,000 வீடுகள்: மத்திய அரசு ஒப்புதல்!கல்வியால் சிறக்கும் அரசுப் பள்ளி மாணவர்கள்: முதல்வர் மு.க. ஸ்டாலின் பெருமிதம்!
/

ராணுவ கிடங்கு தீ விபத்து: இறந்தவர்கள் எண்ணிக்கை 19 ஆக உயர்வு

மகாராஷ்டிர மாநிலத்தில் புல்கான் நகரில் உள்ள ராணுவக் கிடங்கில் ஏற்பட்ட தீ விபத்தில் இறந்தவர்களின் எண்ணிக்கை 19 ஆக உயர்ந்துள்ளது.

News image
Updated On :24 ஜனவரி 2024, 5:24 pm

PTI

புல்கான் (மகாராஷ்டிரம்): மகாராஷ்டிர மாநிலத்தில் புல்கான் நகரில் உள்ள ராணுவக் கிடங்கில் ஏற்பட்ட தீ விபத்தில் இறந்தவர்களின் எண்ணிக்கை 19 ஆக உயர்ந்துள்ளது.

ஏற்கெனவே 16 பேரின் உடல்கள் கைப்பற்றப்பட்ட நிலையில், இன்று மேலும் மூவரின் உடல்கள் கைப்பற்றப்பட்டன.

மகாராஷ்டிர மாநிலம், வார்தா மாவட்டத்தின் புல்கான் நகரில் அமைந்துள்ள ராணுவ ஆயுதக் கிடங்கில் நேற்று திடீரென தீ விபத்து நேரிட்டது. இதில் இரண்டு ராணுவ அதிகாரிகள் உள்பட 16 வீரர்கள் உயிரிழந்தனர்.

ஆசியாவிலேயே மிகப் பெரிய ஆயுதக் கிடங்கான இங்கு பல்வேறு தொழிற்சாலைகளில் இருந்து கொண்டு வரப்படும் ஆயுதங்கள், வெடி பொருள்கள், கையெறி குண்டுகள் உள்ளிட்டவை இருப்பு வைக்கப்படும். நாட்டின் பல பகுதிகளுக்கு இந்தக் கிடங்கில் இருந்துதான் ஆயுத விநியோகம் செய்யப்படுகிறது.

நேற்று அதிகாலை 2 மணியளவில் இந்தக் கிடங்கில் திடீரென தீ விபத்து ஏற்பட்டதாகவும், இதில் 14 வீரர்களும், 2 அதிகாரிகளும் பலியானதாகவும் ராணுவத்தின் மூத்த அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

இந்நிலையில், விபத்து நடைபெற்ற கிடங்கிலிருந்து மேலும் மூன்று ராணுவ வீரர்களின் உடல்கள் இன்று கைப்பற்றப்பட்டன. அடையாளம் காண இயலாத அளவுக்கு அந்த உடல்கள் கருகியிருந்தன.

இதையடுத்து இந்த விபத்தில் இறந்தவர்களின் எண்ணிக்கை 19 ஆக உயர்ந்துள்ளது.

விபத்தில் காயமடைந்து உள்ளூர் மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வந்த 3 பேர், புணேவில் உள்ள ராணுவ மருத்துவமனைக்கு இடமாற்றம் செய்யப்பட்டனர்.

இதனிடையே இந்த தீ விபத்து குறித்து விசாரணை நடத்துவதற்கு ஒரு குழுவை அமைத்து ராணுவம் உத்தரவிட்டுள்ளது.

இந்த தீ விபத்துக்குப் பின்னணியில் எவ்வித சதி செயலும் இல்லை எனக் கூறிய பாதுகாப்புத் துறை அமைச்சர் மனோகர் பரிக்கர், விசாரணைக்குப் பின் விபத்துக்கான உரிய காரணங்கள் தெரியவரும் என்றார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.