சென்னையில் ஆயிரம் விளக்கு, தி.நகர், வேளச்சேரி தொகுதிகளில் போட்டியிட பாஜக விருப்பம் எனத் தகவல்சட்டப்பேரவைத் தேர்தலையொட்டி அதிமுகவிடம் 72 தொகுதிகள் அடங்கிய பட்டியலை பாஜக வழங்கியதுதிமுகவுடன் தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தை: குழு அமைத்தது இந்திய கம்யூ. கட்சி!கல்லாப்பெட்டி கூட்டணி - எங்கள் தகுதிக்கு விஜய்க்கு பதில் சொல்ல வேண்டிய தேவை இல்லை : ஆர்.எஸ்.பாரதிஒவ்வொரு முறையும் மீண்டெழுவதைப்போல மீண்டும் திரும்புவார் நல்லகண்ணு : வைகோஅதிமுக ஆட்சிக்கு வராது என்ற நம்பிக்கையில் அறிவிப்பை வெளியிடுகிறார் எடப்பாடி பழனிசாமி : திருமாவளவன்பயணிகள் வசதிக்காக 26 குறுகிய தூர மின்சார ரயில்கள் இயக்க முடிவு : தெற்கு ரயில்வேஅதிதீவிர கண்காணிப்பில் நல்லகண்ணு: ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனை தகவல்கேரள மாநிலத்தின் பெயரை 'கேரளம்' என்று மாற்ற மத்திய அமைச்சரவைக் கூட்டத்தில் ஒப்புதல்சென்னை புறநகர் ரயில்கள் ரத்து: ரயில்வே மெத்தனமாக செயல்படக் கூடாது! - கனிமொழிகுமரியில் திருவள்ளுவர் சிலை வெள்ளி விழா நுழைவாயில் திறப்பு!பொங்கல் தொகுப்புடன் ஆண்டுதோறும் ரூ. 1,000 வழங்கப்படும்: இபிஎஸ் அறிவிப்புகடும் சரிவில் பங்குச்சந்தை! 700 புள்ளிகள் குறைந்த சென்செக்ஸ்!பிரதமர் மோடியின் இஸ்ரேல் பயணத்துக்கு காங்கிரஸ் எதிர்ப்பு!கட்டாயப்படுத்தி என்னை முதல்வராக்கினார்கள்; தனிக்கட்சி தொடங்கமாட்டேன்: ஓபிஎஸ்எதிர்க்கட்சித் தலைவரா? அல்லது இந்தியாவை எதிர்ப்பவர்களின் தலைவரா? ராகுல் மீது பாஜக எம்.பி. கடும் தாக்கு!மார்ச் 1 - திருப்பரங்குன்றத்தில் பிரதமர் மோடி தரிசனம்!மணிப்பூரில் இடம்பெயர்ந்த மக்களுக்கு 5,000 வீடுகள்: மத்திய அரசு ஒப்புதல்!கல்வியால் சிறக்கும் அரசுப் பள்ளி மாணவர்கள்: முதல்வர் மு.க. ஸ்டாலின் பெருமிதம்!
/

பாப்பா நீ எப்படி பர்ஸ்ட் மார்க் வாங்குனே! வந்து மறுபடியும் பரீட்சை எழுது- பிகார் வினோதம்

பிகார் மாநிலத்தில் பன்னிரெண்டாம் வகுப்பு தேர்வுகளில் முதலிடம் பெற்றவர்கள் குறித்து சந்தேகம் எழுந்துள்ளதால் அதுகுறித்து விசாரணை நடத்துவதற்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

News image
Updated On :24 ஜனவரி 2024, 5:24 pm

PTI

பாட்னா: பிகார் மாநிலத்தில் பன்னிரெண்டாம் வகுப்பு தேர்வுகளில் முதலிடம் பெற்றவர்கள் குறித்து சந்தேகம் எழுந்துள்ளதால் அதுகுறித்து விசாரணை நடத்துவதற்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

பிகார் மாநிலத் தேர்வு என்றாலே அனைவருக்கும் நினைவுக்கு வருவது அந்த படம். ஆம், பரீட்சை எழுதும் மகன், சகோதரன் மற்றும் சொந்தகாரர்களுக்காக ஒரு ஊரே திரண்டு வந்து ஜன்னல் வழியே 'பிட்டு' விநியோகம் செய்ததுதான்.

இந்நிலையில் பிகார் மாநில பன்னிரெண்டாம் வகுப்புத் தேர்வு முடிவுகள் அண்மையில் வெளியாகின. முதலிடம் பெற்ற மாணவர்களை பேட்டி எடுக்க சென்ற போதுதான் அந்த அதிர்ச்சி காத்திருந்தது.

கலைப் பிரிவில் முதலிடம் பெற்றிருந்த ரூபி ராய் என்ற பெண்ணை ஊடகத்தினர் பேட்டி எடுத்தப் போது, அவருக்கு மொத்தம் எத்தனை மதிப்பெண்களுக்கு தேர்வு நடைபெற்றது என்றே தெரியவில்லை. அவர் 500க்கு 444 மதிப்பெண்கள் எடுத்து முதலிடம் பெற்ற நிலையில், மொத்தம் 600 மதிப்பெண்களுக்கு தேர்வு எழுதியதாகக் கூறினார்.

Story image

மேலும் தான் பயின்ற 'பொலிட்டிக்கல் சயின்ஸ்'  பாடத்தை 'ப்ரோடிகல் சயின்ஸ்' என்றும் கூறியுள்ளார். தான் படித்த பாடத்தையே சரியாக உச்சரிக்கத் தெரியாத மாணவி மாநிலத்தில் முதலிடம் பெற்றது குறித்த 'விடியோ' `வைரலாக' பரவ, பிகார் மாநில கல்வி அதிகாரிகள் திகைத்தனர்.

இதைவிட அறிவியல் பிரிவில் முதல் இடம் பிடித்த மாணவர் சௌராப் குமார் நிலைமை மிகவும் மோசம். முதலிடம் பிடித்த அவருக்கு புரோட்டான், எலக்ட்ரான் என்பது குறித்து எல்லாம் ஒன்றுமே தெரியவில்லை.

இதில் பெரிய சுவாரசியம் என்னவென்றால் கலை மற்றும் அறிவியல் பிரிவில் முதலிடம் பெற்ற இருவரும் ஒரே வைசாலி மாவட்டத்தில் உள்ள பகவான்புர் நகரில் உள்ள பிஸுன் ராய் கல்லூரியில் பயின்றவர்கள்.

கடந்த காலங்களில் இக்கல்லூரியில் முறைகேடுகள் நடைபெற்ற நிலையில், அப்போதைய கல்வி அமைச்சர் பி.கே.ஷாகியத் விசாரணைக்கு உத்தரவிட்டிருந்தார்.

இந்நிலையில், அதே கல்லூரியில் பயின்ற மாணவர்கள் முதலிடம் பிடித்தது பல்வேறு சந்தேகங்களை ஏற்படுத்தியுள்ளது.

மேலும், பிகார் மாநிலத்தில் நடைபெற்றதாகக் கூறப்படும் இந்த முறைகேடுகள் குறித்து உரிய விசாரணை நடத்தப்படும் என மாநிலக் கல்வி அமைச்சர் அசோக் சௌத்ரி கூறியுள்ளார்.

பன்னிரெண்டாம் வகுப்பு தேர்வுகளில் முதலிடம் பெற்ற மாணவர்களிடம், கல்வி நிபுணர்கள் அடங்கிய குழுவினர் விசாரணை நடத்துவார்கள். விசாரணையில் முடிவில் தவறு செய்த கல்வி அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்றார் சௌத்ரி.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.