கட்சியின் பெயரை மட்டும் விரைவில் அறிவிக்கிறேன்: என் முயற்சியில் எந்தவித மாற்றத்திற்கும் இடமில்லை - சசிகலாராமநாதபுரத்தில் புதிய கட்சி தொடங்கினார் சசிகலா : அண்ணா, எம்ஜிஆர், ஜெயலலிதா படங்களுடன் கொடி அறிமுகம்9 ஆண்டுகளாக அமைதியாக இருந்ததைப்போல இனியும் இருக்க முடியாது : சசிகலாசென்னையில் ஆயிரம் விளக்கு, தி.நகர், வேளச்சேரி தொகுதிகளில் போட்டியிட பாஜக விருப்பம் எனத் தகவல்சட்டப்பேரவைத் தேர்தலையொட்டி அதிமுகவிடம் 72 தொகுதிகள் அடங்கிய பட்டியலை பாஜக வழங்கியதுஅதிமுக ஆட்சிக்கு வராது என்ற நம்பிக்கையில் அறிவிப்பை வெளியிடுகிறார் எடப்பாடி பழனிசாமி : திருமாவளவன்பயணிகள் வசதிக்காக 26 குறுகிய தூர மின்சார ரயில்கள் இயக்க முடிவு : தெற்கு ரயில்வே
/

காஷ்மீரில் ஊடுருவ முயன்ற 2 பயங்கரவாதிகள் சுட்டுக் கொலை: பாதுகாப்புப் படை வீரர்கள் 2 பேர் பலி

காஷ்மீரின் குப்வாரா பகுதியில் இந்திய எல்லைக்குள் ஊடுருவ முயன்ற 2 பயங்கரவாதிகளை பாதுகாப்புப் படையினர் சுட்டுக் கொன்றனர். இரு தரப்புக்கும் இடையே நடைபெற்ற சண்டையில் பாதுகாப்புப் படை வீரர்கள் இரண்டு பேர் உயிரிழந்தனர்.

News image
Updated On :24 ஜனவரி 2024, 6:04 pm

PTI

ஸ்ரீநகர்: காஷ்மீரின் குப்வாரா பகுதியில் இந்திய எல்லைக்குள் ஊடுருவ முயன்ற 2 பயங்கரவாதிகளை பாதுகாப்புப் படையினர் சுட்டுக் கொன்றனர். இரு தரப்புக்கும் இடையே நடைபெற்ற சண்டையில் பாதுகாப்புப் படை வீரர்கள் இரண்டு பேர் உயிரிழந்தனர்.

நேற்று இரவு, இந்திய எல்லைப் பகுதியான நௌகாமில், பயங்கரவாதிகள் சிலர் ஊடுருவ முயன்றதை அறிந்த பாதுகாப்புப் படையினர், உடனடியாக துப்பாக்கிச் சூடு நடத்தினர். பயங்கரவாதிகள் தரப்பில் பதில் தாக்குதல் நடத்தப்பட்டது.

பாதுகாப்புப் படையினர் நடத்திய தாக்குதலில் இரண்டு பயங்கரவாதிகளும் கொல்லப்பட்டனர்.

பயங்கரவாதிகளின் எதிர் தாக்குதலில் பாதுகாப்புப் படை வீரர்கள் இரண்டு பேர் உயிரிழந்தனர். ஒருவர் காயமடைந்தார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.