கட்சியின் பெயரை மட்டும் விரைவில் அறிவிக்கிறேன்: என் முயற்சியில் எந்தவித மாற்றத்திற்கும் இடமில்லை - சசிகலாராமநாதபுரத்தில் புதிய கட்சி தொடங்கினார் சசிகலா : அண்ணா, எம்ஜிஆர், ஜெயலலிதா படங்களுடன் கொடி அறிமுகம்9 ஆண்டுகளாக அமைதியாக இருந்ததைப்போல இனியும் இருக்க முடியாது : சசிகலாசென்னையில் ஆயிரம் விளக்கு, தி.நகர், வேளச்சேரி தொகுதிகளில் போட்டியிட பாஜக விருப்பம் எனத் தகவல்சட்டப்பேரவைத் தேர்தலையொட்டி அதிமுகவிடம் 72 தொகுதிகள் அடங்கிய பட்டியலை பாஜக வழங்கியதுஅதிமுக ஆட்சிக்கு வராது என்ற நம்பிக்கையில் அறிவிப்பை வெளியிடுகிறார் எடப்பாடி பழனிசாமி : திருமாவளவன்பயணிகள் வசதிக்காக 26 குறுகிய தூர மின்சார ரயில்கள் இயக்க முடிவு : தெற்கு ரயில்வே
/

ஆயுதம் பதுக்கிய வழக்கில் அபு ஜுண்டால் குற்றவாளி: சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பு

நவம்பர் 26ம் தேதி மும்பையில் நடத்தப்பட்ட தாக்குதலில் முக்கியக் குற்றவாளியான அபு ஜுண்டால், 2006ம் ஆண்டு ஔரங்காபாத்தில் ஆயுதம் பதுக்கிய வழக்கில் குற்றவாளி என மகாராஷ்டிர குற்ற தடுப்பு சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

News image
Updated On :24 ஜனவரி 2024, 6:03 pm

PTI

மும்பை: நவம்பர் 26ம் தேதி மும்பையில் நடத்தப்பட்ட தாக்குதலில் முக்கியக் குற்றவாளியான அபு ஜுண்டால், 2006ம் ஆண்டு ஔரங்காபாத்தில் ஆயுதம் பதுக்கிய வழக்கில் குற்றவாளி என மகாராஷ்டிர குற்ற தடுப்பு சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

10 ஆண்டுகளாக நடைபெற்று வரும் வழக்கில் இறுதி வாதம் நிறைவடைந்ததை அடுத்து, சிறப்பு நீதிமன்ற நீதிபதி ஸ்ரீகாந்த் அனேகர் இன்று தீர்ப்பை வெளியிட்டார்.

இவ்வழக்கில் 22 பேர் கைது செய்யப்பட்ட நிலையில், அபு ஜுண்டால் உட்பட 12 பேர் குற்றவாளிகள் என்று தீர்ப்பளிக்கப்பட்டுள்ளது. மேலும் இரண்டு பேர் மீதான வழக்கு தனியாகப் பிரிக்கப்பட்டதை அடுத்து, 8 பேர் விடுதலை செய்யப்பட்டனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.