கட்சியின் பெயரை மட்டும் விரைவில் அறிவிக்கிறேன்: என் முயற்சியில் எந்தவித மாற்றத்திற்கும் இடமில்லை - சசிகலாராமநாதபுரத்தில் புதிய கட்சி தொடங்கினார் சசிகலா : அண்ணா, எம்ஜிஆர், ஜெயலலிதா படங்களுடன் கொடி அறிமுகம்9 ஆண்டுகளாக அமைதியாக இருந்ததைப்போல இனியும் இருக்க முடியாது : சசிகலாசென்னையில் ஆயிரம் விளக்கு, தி.நகர், வேளச்சேரி தொகுதிகளில் போட்டியிட பாஜக விருப்பம் எனத் தகவல்சட்டப்பேரவைத் தேர்தலையொட்டி அதிமுகவிடம் 72 தொகுதிகள் அடங்கிய பட்டியலை பாஜக வழங்கியதுஅதிமுக ஆட்சிக்கு வராது என்ற நம்பிக்கையில் அறிவிப்பை வெளியிடுகிறார் எடப்பாடி பழனிசாமி : திருமாவளவன்பயணிகள் வசதிக்காக 26 குறுகிய தூர மின்சார ரயில்கள் இயக்க முடிவு : தெற்கு ரயில்வே
/

காஷ்மீரின் சில பகுதிகளில் மீண்டும் ஊரடங்கு பிறப்பிப்பு

குல்காம் மாவட்டத்தில் பிரிவினைவாதிகளின் பேரணியையொட்டி காஷ்மீரின் ஒரு சில பகுதிகளில் மீண்டும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

News image
Updated On :24 ஜனவரி 2024, 6:02 pm

PTI

ஸ்ரீநகர்: குல்காம் மாவட்டத்தில் பிரிவினைவாதிகளின் பேரணியையொட்டி காஷ்மீரின் ஒரு சில பகுதிகளில் மீண்டும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

ஜூலை 8ம் தேதி முதல் காஷ்மீரில் வன்முறை வெடித்ததை அடுத்து அமைதியை ஏற்படுத்த பிறப்பிக்கப்பட்ட ஊரடங்கு உத்தரவு அனந்த்நாக் மாவட்டத்தை தவிர மற்ற பகுதிகளில்  நேற்று திரும்பப் பெறப்பட்டது. அனந்த்நாக் பகுதியில் நேற்று மீண்டும் வன்முறை வெடித்தது. இதில் முதியவர் ஒருவர் பலியானார். 14 பேர் காயமடைந்தனர்.

முன்னதாக, ஹிஸ்புல் முஜாகிதீன் தளபதி புர்ஹான் வானி கடந்த ஜூலை 8ம் தேதி சுட்டுக் கொல்லப்பட்டதை அடுத்து ஏற்பட்ட வன்முறைச் சம்பவத்தில் 47 பேர் கொல்லப்பட்டனர்.

இந்த நிலையில், இன்று குல்காம் மாவட்டம் முழுவதும் மீண்டும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது என்றும், அனந்தநாக் மாவட்டத்தில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளது என்றும் காவல்துறை அதிகாரி கூறியுள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.