காஷ்மீரின் சில பகுதிகளில் மீண்டும் ஊரடங்கு பிறப்பிப்பு
குல்காம் மாவட்டத்தில் பிரிவினைவாதிகளின் பேரணியையொட்டி காஷ்மீரின் ஒரு சில பகுதிகளில் மீண்டும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.


ஸ்ரீநகர்: குல்காம் மாவட்டத்தில் பிரிவினைவாதிகளின் பேரணியையொட்டி காஷ்மீரின் ஒரு சில பகுதிகளில் மீண்டும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
ஜூலை 8ம் தேதி முதல் காஷ்மீரில் வன்முறை வெடித்ததை அடுத்து அமைதியை ஏற்படுத்த பிறப்பிக்கப்பட்ட ஊரடங்கு உத்தரவு அனந்த்நாக் மாவட்டத்தை தவிர மற்ற பகுதிகளில் நேற்று திரும்பப் பெறப்பட்டது. அனந்த்நாக் பகுதியில் நேற்று மீண்டும் வன்முறை வெடித்தது. இதில் முதியவர் ஒருவர் பலியானார். 14 பேர் காயமடைந்தனர்.
முன்னதாக, ஹிஸ்புல் முஜாகிதீன் தளபதி புர்ஹான் வானி கடந்த ஜூலை 8ம் தேதி சுட்டுக் கொல்லப்பட்டதை அடுத்து ஏற்பட்ட வன்முறைச் சம்பவத்தில் 47 பேர் கொல்லப்பட்டனர்.
இந்த நிலையில், இன்று குல்காம் மாவட்டம் முழுவதும் மீண்டும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது என்றும், அனந்தநாக் மாவட்டத்தில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளது என்றும் காவல்துறை அதிகாரி கூறியுள்ளார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...